search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சார ரயில்"

    • சென்னையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
    • ஆனால் அவ்வப்போது பயணிகள் பாதுகாப்பிற்காகவும் ரயிலை பாதுகாப்பாக இயக்கவும் தெற்கு ரயில்வே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும்.

    சென்னையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மின்சார ரெயில்கள் ஒரு நாள் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது ரெயில் சேவையில் தாமதம் ஏற்பட்டாலோ ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோது வழக்கம்.

    ஆனால் அவ்வப்போது பயணிகள் பாதுகாப்பிற்காகவும் ரெயிலை பாதுகாப்பாக இயக்கவும் தெற்கு ரெயில்வே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும். இது குறித்து பயணிகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படுவதுடன் பயணிகளுக்கு பெரிய சிரமத்தை தவிர்க்கும் வகையில் பெரும்பாலும் இரவு நேரங்களில் இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படும் சேவைகள் குறித்து முன்கூட்டியே பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டு விடுவதும் வழக்கம்.

    இந்நிலையில் செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில் இடையே இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சார ரெயில் சேவை இயங்காது. சென்னை கடற்கரையில் இருந்து நண்பகல் 12.40- க்கு புறப்படும் மின்சார ரெயில் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் இதனை கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக தங்களது பயணத்தை திட்டமிடவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    • காலை 11.10 மணி முதல் பிற்பகல் 12.20 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
    • தகவலை தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நாளை (12-ந்தேதி) காலை 11.10 மணி முதல் பிற்பகல் 12.20 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் நாளை சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.25 மணி, 10 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் புறநகர் ரெயில்கள் சிங்கபெருமாள் கோவிலுடன் நிறுத்தப்படும்.

    மறு மார்க்கமாக நாளை காலை 11.20 மணி, பிற்பகல் 12 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு புறப்படும் ரெயில்கள் செங்கல்பட்டுக்கு பதிலாக சிங்கபெருமாள் கோவிலில் இருந்து புறப்படும்.

    மேலும் பயணிகள் வசதிக்காக விசாகப்பட்டினம் - சென்னை சென்ட்ரல் இடையே இயங்கும் வாராந்திர அதிவிரைவு ரெயிலில் (எண்.22869, 22870) வருகிற 13-ந்தேதி முதல் ஜூன் 11-ந்தேதி வரை ஒரு கூடுதல் படுக்கை வசதி கொண்ட பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படும்.

    இந்த தகவலை தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.

    ×