search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜாத்திரை திருவிழா"

    • விழாவில் திரளான பக்தர்கள் அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்து வழிபட்டு வருகின்றனர்.
    • ஜாத்திரை திருவிழாவை முன்னிட்டு பெண்கள் பம்பை உடுக்கை முழங்க பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    திருத்தணி:

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் திருவாலங்காடு ஊராட்சியில் ஸ்ரீ மந்தவெளியம்மன் மற்றும் ஸ்ரீ கங்கையம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோவில் ஜாத்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்து வழிபட்டு வருகின்றனர்.

    ஜாத்திரை திருவிழாவை முன்னிட்டு பெண்கள் பம்பை உடுக்கை முழங்க பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் நடத்தி தீபாராதனை செய்யப்பட்டது. இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×