search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இத்தாலி ஓபன்"

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • இதில் முன்னணி வீரரான மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    ரோம்:

    இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் டாமி பாலுடன் மோதினார்.

    இதில் டாமி பால் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து முன்னணி வீரரான மெத்வதேவ் வெளியேறினார். ஏற்கனவே ஜோகோவிச், ரூப்லெவ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் தொடரில் இருந்து வெளியேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • இதில் முன்னணி வீரரான ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    ரோம்:

    இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரரான ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், பிரான்ஸ் வீரர் முல்லருடன் மோதினார்.

    இதில் முல்லர் 3-6 என முதல் செட்டை இழந்தார். இதையடுத்து, அதிரடியாக ஆடிய முல்லர் அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ரூப்லெவ் வெளியேறினார்.

    • இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் போபண்ணா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    ரோம்:

    களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.

    இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, இத்தாலியின் பிரான்செஸ்கோ பாஸாரோ-மேட்டியோ அர்னால்டி ஜோடியுடன் மோதியது.

    இதில் ஆரம்பம் முதலே போபண்ணா ஜோடி அபாரமாக செயல்பட்டது. இறுதியில், போபண்ணா ஜோடி 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலி ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    ×