என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாட்டு இறைச்சி"

    • உலகில் அசைவ உணவுகளை விரும்பாதவர்களே இல்லை.
    • மாட்டிறைச்சியில் அதிகளவு கொழுப்புகள் உள்ளன.

    இன்றைய உலகில் அசைவ உணவுகளை விரும்பாதவர்களே இல்லை. அதை பற்றி சொன்னாலே நம் உள்ளத்தில் உற்சாகம் ஊறும், நாவிலும் எச்சில் ஊறும். அசைவ உணவுகளை அனைவரும் விரும்பி சாப்பிட்டாலும் கூட மாட்டு இறைச்சி குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. மாட்டு இறைச்சி சாப்பிடுவது நல்லது என்று ஒரு தரப்பினரும், இல்லை, அது கெடுதலானது என்று இன்னொரு பாதி மக்களும் கருதுகின்றனர்.

    மாட்டுக் கறியில், புரோட்டீன் மற்றும் தாதுப்பொருட்கள் அதிகம் உள்ளன. அதேசமயம், கொலஸ்டிராலும் நிறைய உள்ளது. இதனால் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களில் 20 சதவீதத்தினர் இளம்வயதிலேயே மரணம் அடைகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    தினமும் அல்லது அதிகமாக மாட்டிறைச்சி உட்கொண்டு வருபவர்களுக்கு இதயநோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஏனென்றால் மாட்டிறைச்சியில் அதிகளவு கொழுப்புகள் உள்ளன. இதனால் தமணிகளுக்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறைவதோடு அதன் வீரியமும் குறைந்து நாள்பட்ட நோய்களை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது.

    மாட்டுறைச்சியில் உள்ள கார்சினோஜென் பொருள் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. அளவுக்கு அதிகமாக மாட்டிறைச்சி உண்ணும் போது உடலில் கார்சினோஜென் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மாட்டிறைச்சியில் அதிகளவு கலோரிகள் உள்ளது. எனவே இதனை அதிகமாக உட்கொள்ளும் போது உடல் எடை அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

    எனவே மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு இதயநோய் மற்றும் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதேசமயம் கோழிக்கறி மற்றும் மீன் போன்றவை இளம் வயது மரணத்தை தடுப்பதாக உள்ளது என்று ஆயுவுகள் தெரிவிக்கின்றன.

    அமெரிக்க நாடுகளில் தினசரி மாட்டிறைச்சி சாப்பிடவர்களில் 13 சதவீதம் பேர் இதய பாதிப்பு மற்றும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி உள்ளனர். காரணம் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு (சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ், குரோனிக்) போன்றவை ஆகும். இதுவே இதயநோய் பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு ஏற்பட காரணமாகின்றன.

    அதேசமயம் மாட்டிறைச்சிக்கு பதிலாக பருப்பு, மீன் போன்றவற்றை உட்கொண்டவர்கள் நீண்ட நாட்கள் உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்கிறது ஆய்வுகள்.

    • புதுச்சேரியில் உள்ள உணவகங்கள், பேக்கரிகளில் சோதனை நடத்தினர்.
    • 20 உணவுப் பொருட்களின் மாதிரிகளை ஆய்வு செய்வதற்காக எடுத்து சென்றனர்.

    புதுச்சேரி:

    மத்திய உணவு பாதுகாப்புத்துறை அமைச்சகம், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நாடு முழுதும் உள்ள உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் விற்பனையாகும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் காலாவதி தேதிகள், தயாரிப்பு இடங்களின் சுகாதார முறைகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

    இதையொட்டி புதுச்சேரி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பாலகிருஷ்ணன் தலைமையில் புதுச்சேரியில் உள்ள உணவகங்கள், பேக்கரிகளில் சோதனை நடத்தினர்.

    இதில் புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள பிரபல அசைவ ஓட்டலில் பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த கெட்டுபோன 3 கிலோ மாட்டிறைச்சியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதனை அழித்தனர்.

    இதுபோல் பஸ் நிலையம் அருகில் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த 5 உணவகங்களுக்கு அறிவுறுத்தல் நோட்டீஸ் வழங்கி, 20 உணவுப் பொருட்களின் மாதிரிகளை ஆய்வு செய்வதற்காக எடுத்து சென்றனர்.

    ×