search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்வாதி மலிவால்"

    • மனவேதனையில் இருந்த மலிவால், தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான அனுபவத்தை என்னைத் தொடர்பு கொண்டு விவரித்தார்.
    • அரவிந்த் கெஜ்ரிவால் இந்த சம்பவம் குறித்து மவுனம் காப்பதை சுட்டிக்காட்டிய அவர், பிபவ் குமார் மீது ஆம் ஆத்மி நடவடிக்கை எடுக்காதது குறித்து ஏமாற்றம் தெரிவித்தார்.

    ஆம் ஆத்மி கட்சியின் எம்.பியான ஸ்வாதி மாலிவால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார், கடந்த மே 13ஆம் தேதி கெஜ்ரிவால் வீட்டில் தன்னைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் ஸ்வாதி மலிவாலுக்கு ஆதரவாக டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், மனவேதனையில் இருந்த மலிவால், தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான அனுபவத்தையும், சொந்த கட்சியினரிடமிருந்தே தனக்கு ஏற்பட்ட மிரட்டலையும் அவமானத்தையும் என்னைத் தொடர்பு கொண்டு விவரித்தார். மேலும் தனக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் சிதைக்கப்பட்டு வருவதாக அவர் கவலை தெரிவித்தார்.

    முந்தய காலங்களில் மலிவால் எனக்கு எதிராகவும் விரோதமாகவும் அப்பட்டமான கருத்துக்களை தெரிவிப்பவராகவும், என்னை நியாயமற்ற முறையில் விமர்சித்தாலும், அவர் மீது நடத்தப்பட்ட இந்த உடல் ரீதியான வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.

    மேலும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த சம்பவம் குறித்து மவுனம் காப்பதை சுட்டிக்காட்டிய அவர், பிபவ் குமார் மீது ஆம் ஆத்மி நடவடிக்கை எடுக்காதது குறித்து ஏமாற்றம் தெரிவித்தார். மேலும், டெல்லி தேசிய தலைநகரம் ஆகும். இது போன்ற வெட்கக்கேடான சம்பவங்களும் அரசாங்கத்தின் மவுனமும் உலகளவில் இந்தியாவின் நற்பெயரைக் கெடுக்கின்றன என்று குறிப்பிட்டார்.

    மேலும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்த டெல்லி காவல்துறை விவரவில் விசாரணையை முடிக்கும் என்று சக்சேனா உறுதியளித்தார்.

     

     

    ஆம் ஆத்மி கட்சியின் எம்பியான ஸ்வாதி மாலிவால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார், கடந்த மே 13ஆம் தேதி கெஜ்ரிவால் வீட்டில் தன்னைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டினார். 

    இதற்கு பதிலடி கொடுத்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், ஆளுநரின் கருத்து ஒன்றே இது முழுக்க முழுக்க முழுக்க பாஜகவின் சதி என்று அம்பலமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    • ஸ்வாதி மலிவால் குற்றம் சாட்டியுள்ள விவகாரம் டெல்லி அரசியல் களத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
    • நேற்று முன்தினம் (மே 16) ஸ்வாதி மலிவால் போலீசாரிடம் எழுத்துபூர்வமாக புகார் அளித்தார்.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மலிவால் குற்றம் சாட்டியுள்ள விவகாரம் டெல்லி அரசியல் களத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.நேற்று முன்தினம் (மே 16) ஸ்வாதி மலிவால் போலீசாரிடம் எழுத்துபூர்வமாக புகார் அளித்தார். அவரிடம் டெல்லி போலீஸ் உயர் அதிகாரிகள் குழு 4 மணி நேர வாக்குமூலம் பெற்றது.

    இதனைத் தொடர்ந்து பிபவ் குமார் தனது வயிற்றில் காலால் எட்டி உதைத்து கடுமையாக தாக்கினார் என்று சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். கெஜ்ரிவாலின் இல்லத்தில் ஸ்வாதி மலிவால் அனுமதியின்றி நுழைந்து அதிகாரிகளை மிரட்டும் வீடியோவை வெளியிட்டு, இது தேர்தல் சமயத்தில் கெஜ்ரிவாலின் பெயருக்கு களங்கம் விளைவிக்க பாஜக செய்த சதியே இது என்று ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் அன்றைய தினம் கெஜ்ரிவாலின் இல்லத்தில் இருந்து ஸ்வாதியை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியில் அழைத்துச் செல்லும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

    இந்த மொத்த விவகாரத்திலும் அவிழ்க்க முடியாத பல முடுச்சுகள் உள்ள நிலையில் டெல்லி காவல்துறை அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதும், இந்த விவகாரம் டெல்லி தேர்தல் களத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதுமே தற்போது அனைவரின் கேள்வியாகவும் உள்ளது. 

    • ஆம் ஆத்மி கட்சி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
    • எனது கேரக்டரை தவறாக சித்தரிக்க முயற்சித்தவர்கள், பிற கட்சிகளின் பேச்சை கேட்டு செயல்படுகிறேன் என்று கூறியவர்களையும் கடவுள் மகிழ்ச்சியாக வைத்திருக்கட்டும்.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் வைத்து அவரது தனிச் செயலாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்ட ஸ்வாதி மலிவாலிடம் இன்று (மே 16) போலீசாளர் அவரது இல்லத்துக்கு சென்று 4 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது ஸ்வாதி மலிவால் எழுத்துபூர்வமாக போலீசிடம் புகார் அளித்ததாக தெரிகிறது. இதனையடுத்து விரைவில் எப்ஐஆர் பதியப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

    இதனிடையே நாளை தேசிய மகளிர் ஆணையத்தின் முன் ஆஜராக கோரி பிபவ் குமாருக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடக்கத்திலிருந்தே டெல்லி பாஜக தீவிரமாக விமர்சனங்களை முனைவைத்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், போலீசிடம் வாக்குமூலம் அளித்த பின் ஸ்வாதிக்கு மலிவால் தனது X தள பக்கத்தில் "எனக்கு நடந்தது மிகவும் மோசமானது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன். கடந்த சில நாட்களாக எனக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி.

    எனது கேரக்டரை தவறாக சித்தரிக்க முயற்சித்தவர்கள், பிற கட்சிகளின் பேச்சை கேட்டு செயல்படுகிறேன் என்று கூறியவர்களையும் கடவுள் மகிழ்ச்சியாக வைத்திருக்கட்டும். நாட்டில் இப்போது முக்கியமானது தேர்தலே அன்றி நான் இல்லை. நாட்டின் பிரச்சினையே இப்போது முக்கியம். குறிப்பாக பாஜக இதை வைத்து அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

    • தேசிய மகளிர் ஆணையம் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்து உடனடியான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று டெல்லி காவல்துறையை வலியுறுத்தியிருந்தது.
    • இந்த விவகாரத்தில் ஸ்வாதி மலிவாலின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் இல்லத்துக்கு விரைந்துள்ளனர்.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து அவரது தனிச் செயலாளர் பிபவ் குமார் தன்னைத் தாக்கியதாக ஆம் ஆத்மி காட்சியைச் சேர்ந்த மாநிலங்களைவை பெண் எம்.பி ஸ்வாதி மலிவால் கடந்த மே 13 ஆம் தேதி காலை டெல்லி போலீசிடம் போன் மூலம் முறையிட்டார். இதனையடுத்து டெல்லி காவல்துறையினர் இந்த குற்றச்சாட்டு குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து தொடக்கத்தில் மௌனம் காத்துவந்த ஆம் ஆத்மி கட்சி பின்னர் ஸ்வாதி தாக்கப்பட்டது உணமைதான் எனவும், இந்த விவகாரத்தில் குறித்து கெஜ்ரிவால் கடுமையான நடவடிக்கை எடுப்பார் எனவும் விளக்கமளித்திருந்தது. .மேலும் பிபவ் குமார் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே டெல்லி பாஜகவினர் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி அரசியல் ரீதியாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

    தேசிய மகளிர் ஆணையம் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்து உடனடியான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று டெல்லி காவல்துறையை வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பிபவ் குமார் நாளை (மே 17) வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் மகளிர் ஆணையத்தின் முன் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

     

    மேலும் பிபவ் குமார் ஆஜராக தவறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஸ்வாதி மலிவாலின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் அவரது இல்லத்துக்கு விரைந்துள்ளனர்.  

    • டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில் வைத்து அவரின் தனிச் செயலாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மலிவால் குற்றம் சாட்டியிருந்தார்
    • இந்த விவகாரம் குறித்து மவுனம் காத்து வந்த ஆம் ஆத்மி கட்சி தற்போது ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டது உண்மைதான் என விளக்கமளித்துள்ளது

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில் வைத்து அவரின் தனிச் செயலாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மலிவால் குற்றம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக நேற்று (மே 13) ஸ்வாதியிடம் இருந்து வந்த போன் அழைப்புகளை அடுத்து சம்பவ கெஜ்ரிவால் இல்லத்துக்கு விரைந்த டெல்லி காவல்துறை 2 வது நாளாக இன்று (மே 14) விசாரணை நடத்தி வருகிறது.

    2 நாட்களுக்குள் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று டெல்லி காவல் துறையை மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள டெல்லி பாஜக, ஆம் ஆதமியினரை கடுமையாக விமர்சித்து வருகிறது.

    இந்த விவகாரம் குறித்து மவுனம் காத்து வந்த ஆம் ஆத்மி கட்சி தற்போது ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டது உண்மைதான் என விளக்கமளித்துள்ளது. ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் ராவத் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், கெஜ்ரிவாலின் இல்லத்தில் வைத்து ஸ்வாதி மலிவால் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுவது உண்மை தான் என்றும் இது மிகுந்த கண்டனத்துக்குரிய சம்பவம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்றும் அவர் தெரிவித்துள்துளார். பிபவ் குமார் மீது ஏற்கனவே இதுபோன்ற தாக்குதல் குற்றச்சாட்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மலிவால், அரவிந்த் கெஜ்ரிவாலின் பி.ஏ பிபவ் குமார், இன்று காலை தன்னை தாக்கியதாக போலீசிடம் முறையிட்டார்.
    • இதைத்தொடர்ந்து கெஜ்ரிவால் இல்லத்துக்கு விரைந்த காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மலிவால் அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் (பி.ஏ) பிபவ் குமார், இன்று காலை கெஜ்ரிவாலின் இல்லத்தில் வைத்து தன்னை தாக்கியதாக டெல்லி போலீசிடம் முறையிட்டார்.

    இதைத்தொடர்ந்து கெஜ்ரிவால் இல்லத்துக்கு விரைந்த காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து முதற்கட்ட அறிக்கை வெளியிட்டுள்ள டெல்லி காவத்துறை, இன்று காலை 9.34 மணியளவில் கெஜ்ரிவாலின் இல்லத்திலிருந்து தங்களுக்கு 2 முறை போன் அழைப்பு வந்ததாகவும் ஆனால், சம்பவ இடத்துக்கு சென்றபோது அங்கு ஸ்வாதி இல்லை என்றும் கூறியுள்ளது. மேலும் இதுதொடர்பாக தங்களுக்கு இன்னும் எழுத்துபூர்வமான எங்த புகாரும் வரவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த புகார் குறித்து விசாரித்து இன்னும் 3 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

    இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விமர்சித்துள்ள டெல்லி பாஜக, கெஜ்ரிவால் சிறையில் இருந்த போது நாட்டிலேயே இல்லாத ஸ்வாதி மீது தற்போது நடந்துள்ள தாக்குதல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் ஆம் ஆத்மி கட்சி இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×