search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தரகாண்ட் அரசு"

    • உணவு மாசுபாடு கண்டறியப்பட்டால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
    • சமையலறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

    உணவு மாசுபாடு மற்றும் உணவில் எச்சில் துப்புவதை தடுக்க உத்தரகாண்ட் அரசு கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

    முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில், உணவு மாசுபாடு கண்டறியப்பட்டால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். ஓட்டல் மற்றும் தாபா ஊழியர்களை போலீசார் சரிபார்க்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், சமையலறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதை அவர் "தூக் ஜிஹாத்" என்று குறிப்பிட்டார்.

    சமீபத்தில், சுற்றுலா பயணிகளுக்கு பழச்சாற்றில் எச்சில் துப்பியதற்காக முசோரியில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    டேராடூனில் நடந்த மற்றொரு சம்பவத்தில் ரொட்டிக்கு மாவை தயார் செய்யும்போது சமையல்காரர் எச்சில் துப்பிய வீடியோ சமீபத்தில் வைரலானது.

    இது தொடர்பாக சுகாதார அமைச்சர் தன் சிங் ராவத், வர இருக்கும் பண்டிகை காலத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தூய்மையை உறுதி செய்வதே முதன்மையானது என்று கூறினார்.

    • சார் தாம் யாத்திரை செல்ல கட்டாயம் முன்பதிவு செய்திருக்க வேண்டும்.
    • கோவிலில் இருந்து 50 மீட்டர் சுற்றளவில் வீடியோ, ரீல்ஸ்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    டேராடூன்:

    இந்துக்களின் நான்கு புனித தலங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தலங்களுக்குச் செல்லும் யாத்திரையானது சார் தாம் யாத்திரை என அழைக்கப்படுகிறது.

    இந்த ஆண்டிற்கான சார் தாம் யாத்திரை பயணம் கடந்த 10-ம் தேதி தொடங்கியது. யாத்திரை தொடங்கிய முதல் நாளில் கேதர்நாத் கோவிலில் சுமார் 29,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக உத்தரகாண்ட் அரசு தெரிவித்தது.

    தொடர்ந்து நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சார் தாம் புனித யாத்திரை மேற்கொள்வதற்காக உத்தரகாண்ட் மாநிலத்திற்கு வருகை தருகின்றனர்.

    இதற்கிடையே, சார் தாம் யாத்திரை செல்வதற்கு கட்டாயமாக முன்பதிவு செய்திருக்க வேண்டும் என உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், சார் தாம் யாத்திரைக்கான பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் வரும் 31-ம் தேதி வரை விஐபி தரிசனத்துக்கு மாநில அரசு தடையை நீட்டித்துள்ளது.

    இதுதொடர்பாக உத்தரகாண்ட் மாநில தலைமைச் செயலாளர் ராதா ரடோரி கூறுகையில், யாத்திரை செல்லும் பாதைகளில் போலீசார் சோதனைச் சாவடிகள் அமைத்து சோதனை மேற்கொள்வார்கள். புனித தலங்களில் இருந்து 50 மீட்டர் சுற்றளவில் வீடியோ மற்றும் ரீல்ஸ்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    ×