search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி"

    • இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது.
    • ஆபாசமான கருத்துகள் தெரிவித்த விவகாரத்தில் ஹரிஹரனை போலீசார் கைது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் செயல்படும் புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இடம்பெற்றிருக்கிறது. இந்த கட்சியின் தலைவர் ஹரிஹரன்.

    இவர் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் வடகரா தொகுதியில் இடது சாரி ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட முன்னாள் மந்திரி சைலஜா மற்றும் நடிகை மஞ்சு வாரியர் ஆகியோரை தொடர்புபடுத்தி ஆபாசமான கருத்துக்களை தெரி வித்தார். அவரது அந்த கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் அவர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் ஹரிஹரன் மீது 509, 153 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

    தனக்கு எதிராக கண்ட னங்கள் அதிகமானதையடுத்து ஹரிஹரன், தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவை வெளியிட்டார். இந்நிலையில் கோழிக்கோட்டில் உள்ள ஹரிஹரனின் வீட்டின் மீது கடந்த 12-ந்தேதி மர்மநபர்கள் வெடிகுண்டுகளை வீசினர்.

    அவை வீட்டின் சுற்றுச்சுவரில் விழுந்து வெடித்தன. இதுதொடர்பாகவும் போலீசார் வழக்குபபதிந்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

    இந்நிலையில் முன்னாள் மந்திரி சைலஜா மற்றும் நடிகை மஞ்சுவாரியர் பற்றி ஆபாசமான கருத்துகள் தெரிவித்த விவகாரத்தில் ஹரிஹரனை போலீசார் கைது செய்தனர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்பு போலீஸ் நிலைய ஜாமீனில் ஹரிஹரன் விடுவிக்கப்பட்டார்.

    ஜாமீனில் வெளியே வந்த ஹரிஹரன் கூறும்போது, 'கேரளாவில் நிறையபேர் தங்களது பேச்சில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொல்கிறார்கள். ஆனால் அவர்களின் மீது வழக்கு பதியப்படுவதில்லை' என்றார்.

    ×