search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுநீரக செயலிழப்பு"

    • ரத்த அழுத்தத்தில் இருந்து விடுபட மனதை இலகுவாக வைத்துக்கொள்ள வேண்டும்.
    • தினமும் காலையில் எழுந்தவுடன் ரத்த அழுத்தத்தை பார்க்க வேண்டும்.

    உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பின் அளவை கட்டுப்படுத்த வேண்டும். தொடர்ந்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்வது, குறிப்பாக மது அருந்துவது, புகைப்பிடிக்காமல் இருப்பது, தேவை இல்லாத விஷயங்களுக்கு கோபப்படுவது, மனதை இறுக்கமாக வைத்துக்கொள்வது, மன அழுத்தம், மனதை இலகுவாக வைத்துக்கொள்ளாமல் எதற்கெடுத்தாலும் கோபமாக பேசுவது போன்றவற்றை குறைத்துக்கொள்ளும் போது ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள முடியும்.

    ரத்த அழுத்தத்தில் இருந்து விடுபட மனதை இலகுவாக வைத்துக்கொள்ள வேண்டும். அல்லது யோகா செய்வதன் மூலமாகவும், உடல் எடையை குறைப்பதன் மூலமாகவும், உணவுப்பழக்க வழக்கம் மூலமாகவும் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள முடியும்.

    எல்லோருக்கும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தான் ஆசை. எனவே ரத்த அழுத்தத்தை கவனிக்க ஒவ்வொருத்தரும் வீடுகளில் ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் கருவையை வைத்திருப்பது அவசியம். இப்பொழுதெல்லாம் ரத்த அழுத்தத்தை சோதிக்கும் கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன. தினமும் காலையில் எழுந்தவுடன் ரத்த அழுத்தத்தை பார்க்க வேண்டும். காலையில் செய்யப்படும் பரிசோதனை தான் சரியான ரத்த அழுத்த பரிசோதனையாக இருக்கும்.

    மேலும், நாம் வருடா வருடம் பிறந்தாள் கொண்டாடுவது போன்று 30 வயதை கடந்தவுடன் ஒவ்வொரு வருடமும் உடல் முழுவதையும் பரிசோதனை செய்துகொள்வது மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    • உயர் ரத்த அழுத்த நோய் பாதிப்புக்கு சுமார் 100 கோடி பேர் ஆளாகி உள்ளனர்.
    • இதயம், சிறுநீரகம் ஆகியவை பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.

    உலக அளவில் உயர் ரத்த அழுத்த நோய் பாதிப்புக்கு சுமார் 100 கோடி பேர் ஆளாகி உள்ளனர். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளை, இதயம், சிறுநீரகம், கண்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

    உயர் ரத்த அழுத்த நோய் பாதிப்பு வெளிப்பட்டு சிகிச்சைக்கு சென்ற பிறகே நோய் பாதிப்பின் தீவிரத்தை அறிய முடியும். ஆகவே வேறு நோய் பாதிப்புக்கு சிகிச்சைக்கு செல்லும் போது டாக்டரிடம் ரத்த அழுத்த பரிசோதனையையும் மேற்கொள்வது அவசியம்.

    உயர் ரத்த அழுத்தம் இருப்பது என்பதை நாம் கவனிக்காமல் விட்டால் முக்கியமான உறுப்புகளை பாதிக்க ஆரம்பிக்கும். குறிப்பாக இதயம், சிறுநீரகம் ஆகியவை பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். உயர் ரத்த அழுத்தம் அதிகமாகும் போது இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படுவதற்கு கூட அதிக வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமல்லாது உயர்ரத்த அழுத்தத்தினால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு செயலிழப்பதற்கு கூட வித்திடலாம். கண்கள் பாதிக்கப்படலாம்.

    ஆனாலும் 50 சதவீதம் பேருக்கு ரத்த அழுத்தம் இருப்பது வெளியே தெரிவது இல்லை. அதிலும் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் தான் சிகிச்சை மேற்கொள்கின்றனர். இருப்பினும் இந்த 50 சதவீதம் பேர் கூட முறையான சிகிச்சையை எடுத்துக்கொள்வதில்லை.

    வேறு எந்த பாதிப்புகளினால் ரத்த அழுத்தம் வந்தாலும் அது சிறுநீரகத்தை பாதிக்கும். சிறுநீரகத்தை பொறுத்தவரை ரத்த அழுத்தத்தினை சரியாக கவனிக்கவில்லை என்றால் கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிறுநீரகத்தின் வழியாக உடலில் உள்ள புரதச்சத்துக்குள் குறைய ஆரம்பிக்கும். சிறுநீரகம் சுருங்கத்தொடங்கும். பின்னர் நிரந்தரமாக சிறுநீரக செயலிழப்பு ஏற்படும்.

    தற்போதுள்ள காலக்கட்டத்தில் நீரிழிவு நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அதிகமாக சிறுநீரக செயலிழப்பு என்பது அதிகமாகிக்கொண்டே வருகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

    ×