என் மலர்
நீங்கள் தேடியது "குழந்தைகள் தத்தெடுப்பு மையம்"
- மதுரை மாநகராட்சியின் பிறப்பு, இறப்பு பதிவு அலுவலர் எவ்விதமான தாமதமும் இன்றி 55 குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழை வழங்க வேண்டும்.
- அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையங்கள் முறையாக ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் நிலையில், சான்றிதழை வழங்க வேண்டும்.
மதுரை:
மதுரையில் உள்ள மழலை இல்லம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,
மதுரையில் அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கலாம்.
மதுரை மாநகராட்சியின் பிறப்பு, இறப்பு பதிவு அலுவலர் எவ்விதமான தாமதமும் இன்றி 55 குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழை வழங்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையங்கள் முறையாக ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் நிலையில், சான்றிதழை வழங்க வேண்டும்.
சிறார் நீதிச்சட்டம், அவர்களின் பாதுகாப்பையும், உரிமையும் உறுதி செய்வதன் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையத்திற்கு சான்றுகளை வழங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.