என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "25 லட்சம்"

    • டிஎஸ்-09-9999 என்ற நம்பருக்கு கடும் போட்டி நிலவியது.
    • இந்த எண்ணுக்கு மொத்தம் 11 பேர் போட்டியிட்டனர்.

    ஐதராபாத்:

    எளிய முறையில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் பேன்சி நம்பர் கொண்ட நம்பர் பிளேட்களை வாங்குகின்றனர்.

    இந்த வகையிலான பேன்சி நம்பர் அவற்றின் இலக்கங்கள், எழுத்துக்களின் வரிசைகளுக்காக தேர்வு செய்யப்படுகின்றன. இவை தனிப்பட்ட விருப்பத் தேர்வுகள், அதிர்ஷ்ட எண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றன.

    இந்நிலையில், இந்தியாவின் தெலுங்கானாவில் ஒருவர் ரூ.25 லட்சம் செலவு செய்து டிஎஸ்-09-9999 என்ற பேன்சி நம்பரை வாங்கினார்.

    பேன்சி பதிவு எண்கள் பெறுவதற்கான இணையவழி ஏலத்தை தெலுங்கானா சாலை போக்குவரத்து ஆணையம் நடத்தியது. அப்போது டிஎஸ்-09-9999 என்ற நம்பருக்கு கடும் போட்டி நிலவியது. மொத்தம் 11 பேர் இதில் போட்டியிட்டனர்.

    இறுதியாக, கோடீஸ்வரர் ஒருவர் தனது விலையுயர்ந்த காருக்காக இந்த எண்ணை 25,50,002 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.

    தெலுங்கானாவில் இதுவரை அதிக விலை கொடுத்து வாங்கிய பேன்சி நம்பர் இதுதான் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 படம் வெளியானது.
    • முதல் காட்சி பார்க்கச்சென்ற ரசிகை ரேவதி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா-2 முதல் காட்சி பார்க்க சென்ற ரசிகை ரேவதி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார்.

    அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறியதாவது:

    இந்த இக்கட்டான சூழ்நிலையில் அந்த குடும்பத்தினருடன் உறுதுணையாக இருப்போம்.

    இந்தச் சம்பவம் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் படத்தின் கொண்டாட்டங்களில் தங்களால் பங்கேற்க முடியவில்லை.

    ரேவதியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட ரேவதியின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் வழங்க உள்ளேன்.

    புஷ்பா 2 படக்குழுவினரிடம் இருந்து ரேவதி குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளோம்.

    இந்த நேரத்தில் அவர்கள் வலியை உணர்ந்துள்ளேன். விரைவில் அவர்களைச் சந்திக்க உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

    ×