என் மலர்
நீங்கள் தேடியது "ஆரஞ்ச் அலர்ட்"
- புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- வங்கக் கடல் பகுதிகளில் 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்
சென்னை:
வட தமிழக-தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நேற்று காலை 5.30 மணிக்கு காற்றழுத்தத் தாழ்வு உருவானது. இது வடகிழக்கு திசையில் நகா்ந்து வருகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) மத்திய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும், அதன்பிறகு, மேலும் வலுப்பெற்று மே 25-ந் தேதி புயலாக உருவெடுக்கும். இதுபோல தெற்கு கேரளம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மீதும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இந்த நிகழ்வுகள் காரணமாக இன்று முதல் மே 28-ந் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக இன்று தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருப்பூா், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை யும் பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் நாளை (வெள்ளிக்கிழமை) நீலகிரி, கோவை, திருப்பூா், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொருத்தவரை இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் தொடா்ச்சியாக மழை பெய்து வரும் காரணத்தால் வெப்பம் சற்று குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி ஈரோட்டில் அதிகபட்சமாக 99.68 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
சென்னையில் நேற்று புறநகா் பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழை பெய்தது. அடுத்த 48 மணி நேரத்துக்கு சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி பாரன்ஹீட்டையொட்டியே இருக்கும்.
வங்கக் கடலில் புயல் உருவானாலும் அது வடக்கு நோக்கி நகர நகர தமிழகத்தில் வெப்பநிலை உயரும். அதாவது இன்று முதல் மே 26-ந் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, குமரிக் கடல், மன்னாா் வளைகுடா, தென் தமிழக வங்கக் கடல் பகுதிகளில் 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- காற்றின் வேகம் மணிக்கு 70 கி.மீட்டராக அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.
- கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை:
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த 25-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது மேலும் வலுவடைந்து நேற்று முன் தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் மழையும் பெய்யாமல் ஏமாற்றி வருகிறது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று முன்தினம் காலை சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கில் 800 கி.மீ. தொலைவில் நிலை கொண்டு இருந்தது. அது நேற்று முன் தினம் மாலையில் இலங்கைக்கு தென் கிழக்கே சென்னையில் இருந்து 710 கி.மீ. தூரத்தில் இருந்தது.
நேற்று அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னையில் இருந்து 670 கி.மீ. தொலைவிலும், நேற்று காலையில் சென்னையில் இருந்து 590 கி.மீ. தொலைவிலும் தெற்கு-தென்கிழக்கு திசையில் மையம் கொண்டிருந்தது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று பகலில் வடக்கு-வடமேற்கு திசையில் 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்தது. இதன் காரணமாக நேற்று மதியம் சென்னையில் இருந்து 550 கி.மீ. தொலைவில் இருந்தது.
தொடர்ந்து அதே வேகத்தில் நகர்ந்ததால் நேற்று இரவு சென்னையில் இருந்து 500 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது.
அதன் பிறகு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் குறைந்தது. அது மெல்ல 3 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்தது. நேற்று நள்ளிரவுக்கு பிறகு நகராமல் தொடர்ந்து 6 மணி நேரமாக அதே இடத்தில் நீடித்தது.
இன்று காலை முதல் மணிக்கு 2.கி.மீ. வேகத்தில் நகரத் தொடங்கியது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு முதல் நகராமல் சுமார் 6 மணி நேரமாக அதே இடத்தில் நீடித்தது. இன்று அதிகாலைக்கு பிறகு அது மிகவும் மெதுவாக மணிக்கு 2 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி இலங்கையின் திரிகோணமலை பகுதியில் இருந்து கிழக்கு-வடகிழக்கு திசையில் 110 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையில் இருந்து 480 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 310 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 410 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
அது வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே வருகிற 30-ந்தேதி (சனிக்கிழமை) காலை மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். மேலும் காற்றின் வேகம் மணிக்கு 70 கி.மீட்டராக அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலத்தின் ஒரு பகுதி மட்டும் இன்று மாலை முதல் நாளை (வெள்ளிக்கிழமை) காலைக்குள் புயலாக மாற வாய்ப்பு உள்ளது. அப்போது மணிக்கு 65 முதல் 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். மேலும் காற்றின் வேகம் 80 கி.மீ. ஆகவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.
இன்று காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
நாளை (29-ந்தேதி) சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வருகிற 30-ந்தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் கடலோர பகுதிகளில் இன்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. நாளையும், நாளை மறுநாளும் காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கி.மீ. ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது.
- மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
- தமிழகம், புதுவையில் 13 மற்றும் 16-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நேற்று வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது. இது இன்று மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழகத்தில் 11, 12, 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுவைக்கு மிக கனமழை மற்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுவையில் 13 மற்றும் 16-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.