search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்திரேலிய அணி"

    • வெஸ்ட் இண்டீஸ்க்கு 15 பேரில் 9 பேர் மட்டுமே சென்றுள்ளனர்.
    • கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் போன்றோர் ஐபிஎல் போட்டியில் விளையாடியதால் இன்னும் அணியுடன் இணையவில்லை.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 1-ந்தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் தொடங்குகிறது. இதில் விளையாடுவதற்காக அனைத்து அணிகளும் (இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன) அங்கு சென்றுள்ளன. தற்போது டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    வெஸ்ட் இண்டீசில் உள்ள போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- நமீபியா அணிகள் மோதின. நமீபியா அணி முதலில் பேட்டிங் செய்தது.

    அப்போது ஆஸ்திரேலிய அணிக்காக அந்த அணியின் தலைமை தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி, தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு ஆகியோர் பீல்டிங் செய்ய களம் இறங்கினர். இது போட்டியை பார்க்க வந்திருந்த அனைவரும் இது ஆச்சர்யமாக இருந்தது.

    இது தொடர்பாக விசாரிக்கும்போது ஆஸ்திரேலியா அணியில் இடம் பிடித்துள்ள 15 பேர்களில் தற்சமயம் 9 பேர் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் சென்றடைந்துள்ளனர்.

    டிராவிஸ் ஹெட், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன் ஆகியோர் ஐபிஎல் பிளேஆஃப் சுற்று போட்டிகளில் விளையாடியதால் சற்று ஓய்வு எடுத்து பின்னர் வெஸ்ட் இண்டீஸ் செல்ல திட்டமிட்டுள்ளதால் ஆஸ்திரேலியா 9 வீரர்களுடன் களம் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் சப்ஸ்டிடியூட் பீல்டர்களாக தலைமை தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி மற்றும் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு ஆகியோர் களம் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    முதலில் களம் இறங்கிய நமீபியா 9 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆஸ்திரேலியா 10 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. டேவிட் வார்னர் 21 பந்தில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது ஸ்கோரில் 6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் அடங்கும். ஐபிஎல் தொடரில் ரன் குவிக்க திணறிய டேவிட் வார்னர் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியது ஆஸ்திரேலிய அணிக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

    டிம் டேவிட் 16 பந்தில் 23 ரன்கள் அடித்தார். மேத்யூ வடே 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹேசில்வுட் 5 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆடம் ஜம்பா 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    • இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு பொருத்தமான நபரை தேர்ந்தெடுக்கும் பணியில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது.
    • ஆஸ்திரேலிய அணிக்கு 4 ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்த அனுபவத்தில் இதைச் சொல்கிறேன்

    இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி வேண்டவே வேண்டாம்! போட்டுடைத்த ஜஸ்டின் லாங்கர்.. கே.எல் ராகுல் கொடுத்த அட்வைஸ் இதுதான்

    டி20 உலகக் கோப்பை 2024க்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதற்கிடையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு பொருத்தமான நபரை தேர்ந்தெடுக்கும் பணியில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது.

    இந்த பதவிக்கான விண்ணப்பம் வரும் மே 28 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் கே.எல். ராகுல், விவிஎஸ். லக்ஷ்மன், ஜஸ்டின் லாங்கர் உள்ளிட்டோரின் பெயர்கள் பிசிசிஐ வட்டாரங்களில் அடிபடுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக, தான் விரும்பவில்லை என்று நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் பயிற்சியாளராக உள்ள ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் மனம் திறந்த லாங்கர், ஐபிஎல் போட்டிகளின் போது சமீபத்தில் லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுலுடன் உரையாடினேன். அப்போது பயிற்சியாளர் பதவி குறித்து கே.எல்.ராகுல் கூறுகையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் எதிர்கொள்ளும் அரசியலும் அழுத்தமும் எந்த ஒரு ஐபிஎல் அணி பயிற்சியாளரையும் விட கிட்டத்தட்ட ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். அதை மிகச் சரியான கருத்து என்று தான் கருதுவதாக லாங்கர் குறிப்பிட்டுள்ளார்.

     

    நேர்காணலில் தொடர்ந்து பேசிய லாங்கர், பயிற்சியாளர் பணி அனைத்தையும் உள்ளடக்கிய பாத்திரம் என்பதை நான் அறிவேன். ஆஸ்திரேலிய அணிக்கு 4 ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்த அனுபவத்தில் இதைச் சொல்கிறேன், அது மிகவும் சோர்வூட்டக் கூடியதாக இருக்கும் என்று தெரிவித்தார். 

     

    ×