search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரொக்கியம்"

    • சீலியாயிக், சர்க்கரை ஆகிய நோயின் தாக்கத்தை குறைக்க வல்லது.
    • அரிசியில் கஞ்சி வைத்து கொடுத்துவர, சுகப்பிரசவத்துக்கு உதவும்.

    தமிழ்நாட்டில் பயிரிடப்படும் பிரபலமான பழங்கால பழுப்பு அரிசி இந்த பூங்கார் அரிசி. இது மாப்பிள்ளை சம்பா அரிசி தோற்றத்தில் இருக்கும்.

    பூங்கார் கைகுத்தல் அரிசி தமிழ்நாட்டின் பாரம்பரிய வகைகளில் ஒன்று. பெண்களுக்கான பிரத்யேக அரிசி. கர்ப்பிணிகளுக்கு தொடர்ந்து இந்த அரிசியில் கஞ்சி வைத்து கொடுத்துவர, சுகப்பிரசவத்துக்கு உதவும்.

    எலும்புகளை வலுப்படுத்தும். இதில் உள்ள அந்தோ சயினின் காரணமாக பார்ப்பதற்கு வெளிர்சிவப்பு நிறத்தில் இருக்கும், மற்ற பாரம்பரிய அரிசியை காட்டிலும், இதில் தனிம சத்துக்கள் அதிகம் உள்ளது.

    சீலியாயிக், சர்க்கரை ஆகிய நோயின் தாக்கத்தை குறைக்க வல்லது. உடலில் உள்ள கொழுப்பினை குறைக்க வல்லது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவினை அதிகரிக்க உதவும். மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

    இந்த வகை அரிசியை கொண்டு இட்லி செய்தால் மென்மையான இருக்கும். மேலும் தோசை, சாதம் வகைகள் செய்யலாம்.

    சிறப்புகள்:

    பூங்கார் அரிசியில் துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் மோலேபிடினம் ஆகிய தாதுக்கள் உள்ளன.

    பூங்கார் அரிசியில் உள்ள அத்ரோசயானின் ஒரு சிறந்த ஆண்டிஆக்சிடெண்ட் ஆகும்.

    மற்ற நவீன அரிசிகளை விட பூங்கார் அரிசியில் சற்று அதிகளவு இரும்புச்சத்து உள்ளது. இது ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவுகிறது.

    உடலில் அதிக கொலஸ்ட்ரால் சேர்ந்தால் அது ரத்த ஓட்டத்தை தடை செய்து இறுதியில் மாரடைப்புக்கு வழிவகுக்கும். பூங்கார் அரிசியில் நார்ச்சத்து இருப்பதால் கொழுப்பின் ஒட்டுமொத்த அளவை குறைக்க உதவுகிறது. இதனால் இதநோய் அபாயத்தை குறக்கிறது.

    பூங்கார் அரிசியில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை எளிதாக்கி செரிமானத்துக்கு உதவுகிறது. இதனால் மலச்சிக்கலை தடுக்கிறது.

    பூங்கார் அரிசி ஹார்மோன் அளவை பராமரிப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும் உதவுகிறது. இதனால் பெண்களுக்கு மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது.

    மேலும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நன்றாக பால் சுரக்கவும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் பூங்கார் அரிசி பெரிதும் பயன்படுகிறது.

    கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் அதிக அளவில் ஊறும். 

    பூப்பெய்தும் காலங்களில் இந்த அரிசியில் புட்டு செய்து சாப்பிட்டுவர, இடுப்பு, வயிறு, கால் வலி நீங்கும்.

    ×