search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 உலகக்கோப்பை 2024"

    • நான் பல அணியுடன் வேலை செய்திருக்கிறேன்.
    • ஆனால் இது போன்ற சூழ்நிலையை பார்த்ததில்லை.

    புளோரிடா:

    நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் அணியானது 2 வெற்றிகள் மட்டுமே பெற்ற நிலையில் லீக் சுற்றுடன் வெளியேறியது.

    முதலாவது ஆட்டத்தில் அமெரிக்காவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான், 2-வது ஆட்டத்தில் இந்தியாவிடம் வீழ்ந்தது. இதனால் கடைசி 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் அந்த அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னெற முடியவில்லை.

    இந்நிலையில் பாகிஸ்தான் அனியில் ஒற்றுமை இல்லை என அந்த அணியின் பயிற்சியாளரான கேரி கிர்ஸ்டன் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை. அவர்கள் அதை ஒரு அணி என்று அழைக்கிறார்கள். ஆனால் அது ஒரு அணி அல்ல. அவர்கள் ஒருவரையொருவர் ஆதரிக்கவில்லை. அனைவரும் இடது மற்றும் வலது என பிரிக்கப்பட்டுள்ளனர். நான் பல அணியுடன் வேலை செய்திருக்கிறேன். ஆனால் இது போன்ற சூழ்நிலையை பார்த்ததில்லை.

    நாம் சிறந்தவர்களுடன் போட்டியிட விரும்பினால், நாம் நமது உடற்தகுதி மற்றும் திறன்களை மேம்படுத்தி ஒற்றுமையாக இருக்க வேண்டும். உடற்தகுதி அடிப்படையில் நாங்கள் மிகவும் பின்தங்கியுள்ளோம். தங்கள் உடற்தகுதியை மேம்படுத்த விரும்பும் வீரர்கள் மட்டுமே அணியில் இருப்பார்கள்.

    இவ்வாறு கேரி கிர்ஸ்டன் கூறினார்.  

    • விராட் கோலிக்கு பதிலாக அவர் தொடக்க வீரராக விளையாட வேண்டும்.
    • இந்திய அணியின் தொடக்க வீரராக ஒரு இடதுகை ஆட்டக்காரர் இருப்பது இந்திய அணிக்கு மேலும் பலத்தை சேர்க்கும்.

    நியூயார்க்:

    அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 8-வது லீக் போட்டியில் அயர்லாந்து - இந்திய அணிகள் மோதின. இதில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் அனைவரும் எதிர்பார்த்த விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    இந்நிலையில் ஜெய்ஸ்வாலை தொடக்க வீரராக விளையாட வைக்க வேண்டும் என்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் இயன் பிஷப் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஐபிஎல் தொடரின்போது ஜெய்ஸ்வாலின் பார்ம் சற்று கவலை தரும் விதமாக இருந்தது உண்மைதான். ஆனால் இந்திய அணியின் தொடக்க வீரராக விளையாடக்கூடிய அளவிற்கு அவர் தகுதியுடன் இருப்பதாக நினைக்கிறேன்.

    அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர். அதனால் விராட் கோலிக்கு பதிலாக அவர் தொடக்க வீரராக விளையாட வேண்டும்.

    இந்திய அணியின் தொடக்க வீரராக ஒரு இடதுகை ஆட்டக்காரர் இருப்பது இந்திய அணிக்கு மேலும் பலத்தை சேர்க்கும்.

    என்று இயன் பிஷப் கூறினார்.

    • மழையால் இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் 109 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு கொடுக்கப்பட்டது.
    • மீண்டும் மழை தொடர்ந்து நிற்காமல் பெய்துகொண்டிருந்தது. இதனால் ஆட்டம் பாதியிலேயே கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

    பிரிட்ஜ்டவுண்:

    டி20 உலகக்கோப்பையில் நேற்று இரவு நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜார்ஜ் முன்சி மற்றும் மைக்கேல் ஜோன்ஸ் இருவரும் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 90 ரன்கள் எடுத்திருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது.

    தொடர்ந்து பெய்த மழை, சில மணி நேரங்களுக்கு பின்னர் நின்றது. இதனால் முழு போட்டியையும் நடத்தாமல் 10 ஓவர்களாக கொண்ட போட்டியாக நடத்த முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் 109 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு கொடுக்கப்பட்டது.

    எனினும், மீண்டும் மழை தொடர்ந்து நிற்காமல் பெய்துகொண்டிருந்தது. இதனால் ஆட்டம் பாதியிலேயே கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இங்கிலாந்து அணி எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மழையால் போட்டி கைவிடப்பட்டதால் அந்நாட்டு வீரர்கள் ஏமாற்றமடைந்தனர்.

    • சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை மோதியுள்ளன.
    • 7 ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நியூயார்க்:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (புதன்கிழமை) அரங்கேறும் 8-வது லீக்கில் இந்திய அணி, அயர்லாந்தை (ஏ பிரிவு) சந்திக்கிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலி, ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, முகமது சிராஜ், ஜடேஜா என்று அனைத்து முன்னணி வீரர்களும் இருப்பதால் வலுவாக காணப்படுகிறது.

    விராட் கோலியும், கேப்டன் ரோகித் சர்மாவும் தொடக்க ஆட்டக்காரராக இறங்கினால், ஆடும் லெவனில் ஜெய்ஸ்வாலுக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான். விக்கெட் கீப்பர் இடத்திற்கு சஞ்சு சாம்சனை காட்டிலும் ரிஷப் பண்டுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

    அயர்லாந்து சிறிய அணியாக கருதப்பட்டாலும், முந்தைய காலங்களில் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து இருக்கிறது. அதனால் அவர்களை துளி கூட சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று இந்திய வீரர்களை அணி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    போட்டி நடக்கும் நியூயார்க்கில் உள்ள ஆடுகளங்கள் செயற்கையாக அமைக்கப்பட்டவை. இந்த ஆடுகளத்தில் அதிரடி காட்டுவது அவ்வளவு எளிதல்ல. இதே மைதானத்தில் ஆடிய இலங்கை தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெறும் 77 ரன்னில் அடங்கியதே அதற்கு உதாரணம். 'இங்குள்ள சூழலுக்கு ஏற்ப வீரர்கள் மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இது போன்ற ஆடுகளங்களில் 140 ரன் கூட வெற்றிக்குரிய ஸ்கோராக இருக்கலாம்' என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

    இந்த உலகக் கோப்பையுடன் பயிற்சியாளர் பணியில் இருந்து விடைபெறும் டிராவிட், உலகக் கோப்பையை வெல்வதற்குரிய வாய்ப்பை உருவாக்குவதே எங்களது இலக்கு என்றும் குறிப்பிட்டார்.

    பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணியில் ஆன்டி பால்பிர்னி, லோர்கன் டக்கர், டெக்டர், ஜார்ஜ் டாக்ரெல் உள்ளிட்டோர் நிலைத்து நின்று விட்டால் அதிரடியில் மிரட்டி விடுவார்கள். கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 183 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து கவனத்தை ஈர்த்தனர். இதனால் அதிக நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். முடிந்த வரை 20 ஓவர் முழுமையாக ஆட முயற்சிப்பார்கள்.

    சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை மோதியுள்ளன. 7 ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம்:-

    இந்தியா:

    ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப்சிங், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

    அயர்லாந்து:

    பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ரோஸ் அடைர், ஆன்டி பால்பிர்னி, நீல் ராக், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், மார்க் அடைர், கர்டிஸ் கேம்பர், காரெத் டெலானி, ஜார்ஜ் டாக்ரெல், கிரஹாம் ஹூமே, ஜோஷ் லிட்டில், பாரி மெக்கர்த்தி, பென் ஒயிட், கிரேக் யங்,

    நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து இருப்பார் என்று நினைக்கிறேன்.
    • ஷிவம் துபே போன்ற பந்து வீசக்கூடிய சில வீரர்கள் டாப் 5 பேட்ஸ்மேன்களில் இருக்க வேண்டும்.

    வெலிங்டன்:

    20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த வருடம் ரோகித் சர்மா தலைமையில் நட்சத்திர வீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை பைனல்களில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஜெய்ஸ்வால், ஷிவம் துபே போன்ற அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே இம்முறை டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணி முழு மூச்சுடன் போராட உள்ளது.

    இந்நிலையில் இந்திய அணியில் டாப் 5 பேட்ஸ்மேன்களில் யாருமே பந்து வீசுபவர்களாக இல்லை என்பது பெரிய பிரச்சினையாக இருப்பதாக முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டவுல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசியது பின்வருமாறு:-

    டி20 அணியில் டாப் 5 - 6 பேட்ஸ்மேன்களில் பவுலர்கள் இல்லாதது இந்தியா தவற விட்ட பெரிய விஷயம். வெஸ்ட் இண்டீசுக்கு செல்லும் தற்போதைய அணியில் உலகக்கோப்பை முடிந்ததும் நீங்கள் எதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். அது போன்ற சூழ்நிலையில் அபிஷேக் சர்மா, ருதுராஜ், ஜெய்ஸ்வால் அல்லது சுப்மன் கில் ஆகியோரை நீங்கள் விரும்புவீர்கள்.

    சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து இருப்பார் என்று நினைக்கிறேன். மேலும் ஷிவம் துபே போன்ற பந்து வீசக்கூடிய சில வீரர்கள் டாப் 5 பேட்ஸ்மேன்களில் இருக்க வேண்டும். அதைத் தொடர்ந்து 2 - 3 ஆல் ரவுண்டர்கள், கணிசமாக பேட்டிங் செய்யக்கூடிய பவுலர்கள் இருக்க வேண்டும்.

    இவ்வாறு டவுல் கூறினார்.

    ×