search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஃபா எல்லை"

    • இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் 35 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
    • இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு.

    நியூயார்க்:

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் ராணுவம், காசா மீது தாக்குல் நடத்தி வருகிறது. ரஃபா நகரை தவிர்த்து மற்ற பகுதிகளை தடம்தெரியாத அளவிற்கு அழித்து விட்டது.

    ஹமாசுக்கு எதிராக போர் தொடங்கியதற்கான இலக்கை எட்ட வேண்டுமென்றால் ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்த இஸ்ரேல், ரஃபா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தது. இதற்கு பெரும்பாலான நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஐ.நா. நீதிமன்றம் ரஃபா மீது தாக்குதல் நடத்தக்கூடாது என உத்தரவிட்டது.

    இதற்கிடையே, நேற்று திடீரென ரஃபா நகர் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 35 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட்டது துரதிருஷ்டவசமான தவறு எனக்கூறிய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

    இந்நிலையில், இந்த கொடூர தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் என ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, குட்டரெஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளத்தில், இந்தக் கொடிய மோதலில் இருந்து தஞ்சம் தேடிவந்த ஏராளமான அப்பாவி பொதுமக்களை கொன்ற இஸ்ரேலின் நடவடிக்கைகளை நான் கண்டிக்கிறேன். காசாவில் பாதுகாப்பான இடம் இல்லை. இந்தக் கொடூர தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    ×