search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விக்ரமசிங்கே"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இலங்கை அதிபரின் பதவிக்காலத்தை இரண்டு வருடத்திற்கு நீட்டிக்க விக்ரமசிங்கே கட்சி பரிந்துரை செய்தது.
    • அதிபர் தேர்தல் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16-ந்தேதிக்குள் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

    இந்தியாவின் அண்டை நாடான இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தத்தளித்தது. தற்போது அதில் இருந்து மெல்லமெல்ல மீண்டு வருகிறது. அதிபராக இருக்கும் விக்ரமசிங்கே மறுசீரமைப்பு செய்வதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    இதனால் அதிபர் தேர்தல் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என விக்ரமசிங்கே கட்சி பரிந்துரை செய்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் இது சட்ட அரசியலமைப்புக்கு எதிரானது எனத் தெரிவித்தது.

    தேர்தல் ஆணையமும் செப்டம்பர் 17-ந்தேதி முதல் அக்டோபர் 16-ந்தேதி வரைக்குள் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவித்தது.

    இந்த நிலையில் அதிபர் தேர்தல் இலங்கையின் எதிர்காலத்திற்கு முக்கியமானது என அதிபர் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில் "வரவிருக்கும் அதிபர் தேர்தல் என்னைப் பற்றிய தனிநபர் தேர்தல் அல்ல. இது என்னுடைய வெற்றி அல்லது தோல்வி பற்றியது அல்ல. இது நாட்டின் வெற்றி அல்லது தோல்வியை தீர்மானிப்பதாகும்.

    இந்த தேர்தல் தனி நபர்களை தேர்வு செய்யும் சாதாரணமான தேர்தல் அல்ல. நாட்டின் வளர்ச்சிக்காக மிகவும் பயனுள்ள சிஸ்டத்தை தேர்வு செய்வது பற்றியது. தற்போதைய அணுகுமுறையின் தகுதியை நீங்கள் நம்பினால், அதன்படி தொடரலாம்.

    இவ்வாறு விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

    • செப்டம்பர் 17-ந்தேதியில் இருந்து அக்டோபர் 17-ந்தேதிக்குள் இலங்கை நாட்டின் அதிபர் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு.
    • பொருளாதார மறுசீரமைப்பை தொடர உதவியாக இருக்கும் பதவி நீட்டிப்பு உதவியாக இருக்கும் என கருகிறது.

    இலங்கை பொருளாதார சிக்கலில் சிக்கி தவித்துள்ளது. இன்னும் அதில் இருந்து மீண்டு வரவில்லை. இலங்கையின் அதிபராக விக்ரமசிங்கே இருந்து வருகிறார். பொருளாதார மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    இந்த வருடம் செப்டம்பர் 17-ந்தேதியில் இருந்து அக்டோபர் 17-ந்தேதிக்குள் இலங்கை நாட்டின் அதிபர் தேர்தல் மற்றும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் அதிபராக இருக்கும் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை இரண்டு வருடத்திற்கு ஒத்திவைக்க வேண்டும். மேலும் அதன் அலுவலக செயல்பாட்டையும் இரண்டு வருத்திற்கு நீட்டிக்க வேண்டும். இது மிகவும் தேவையான பொருளாதார மறுசீரமைப்பை தொடர உதவியாக இருக்கும் என பரிந்துரை செய்துள்ளது.

    ஆனால் எதிர்க்கட்சிகள் இது அரசியலமைப்புக்கு எதிரானது என உடனடியாக விமர்சனம் செய்துள்ளன.

    தேசம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. அதை சமாளித்து வெற்றி பெற உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த முயற்சிகள் குறிப்பிடத்தக்க வெற்றிகளைக் கொடுத்தன.

    சர்வதேச நம்பிக்கையை மீண்டும் பெற்றுள்ளோம், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளோம், இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்கினோம். நிர்வாக சீர்திருத்தங்கள் ஆட்சியை நெறிப்படுத்தியுள்ளன, மேலும் கல்வி முறை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் பளிதா ரங்கே பண்டாரா தெரிவித்துள்ளார்.

    அதற்கான சூழ்நிலை ஏற்பட்டால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அது பொது வாக்கெடுப்பு வழிவகுக்கும் என அக்கட்சி நம்புகிறது.

    எதற்காக இரண்டு வருடம் நீட்டிக்கப்பட வேண்டும் என்பதற்கான முழு விவரத்தையும் பண்டாரா குறிப்பிட்டுள்ளார். பொருளாதார மறுசீரமைப்புக்காக இலங்கை அரசு ஐஎம்எஃப், உலக வங்கி, நன்கொடையாளர்களடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. அவற்றை வெற்றிகரமாக செய்த முடிக்க அதிபர் பதவியை இரண்டு வருடங்கள் நீட்டிக்க வேண்டியது அவசியம் எனத் தெரிவித்துள்ளதாக இலங்கை செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

    ×