என் மலர்
நீங்கள் தேடியது "ராதிகா மெர்ச்சண்ட்"
- ஜனவரி 19-ந்தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
- திருமணம் ஜூலை 12-ந்தேதி நடைபெற உள்ளது.
முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி மற்றும் அவரது மனைவி ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணம் ஜூலை 12-ந்தேதி நடைபெற உள்ளது. திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் நடைபெற்றது.
பிரபல தொழில் அதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெட்ச்சண்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19-ந்தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அதன்பிறகு முன் திருமண வைபவத்தில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், தீபிகா படுகோன் ஆலியாபட் ஜான்விகபூர், கேத்ரீனா கைஃப் இயக்குனர் அட்லி உள்பட பல இந்தி திரையுலகத்தினர் கலந்துகொண்டனர்.
தற்போது பிரான்ஸ் கடற்கரையோர சொகுசு கப்பலில் 29-ந்தேதி முதல் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் திருமண விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த திருமண விழா கொண்டாட்டத்தில் இன்னும் சில முக்கிய நபர்கள் விழாவை சிறப்பிக்க இருக்கிறார்கள். இது இன்னும் ஆடம்பரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல சிறந்த சர்வதேச நட்சத்திரங்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை அலங்கரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் இங்கிலாந்தை சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரியும் கலந்துகொண்டு இசைமழை பொழிய உள்ளார்.
இந்நிலையில் ஆனந்த் அம்பானியின் திருமண முந்தைய நாள் குரூஸ் பாஷில் நிகழ்ச்சியில் நடனமாட பிரபல பாப் நட்சத்திரம் ஷகிரா சுமார் 15 கோடி ரூபாய் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
- முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.7.65 லட்சம் கோடியாகும்
- சராசரி இந்திய குடும்பம் ஒன்று தங்களது சொத்துமதிப்பில் 10 முதல் 15 சதவீதம் வரை திருமணத்துக்கு செலவு செய்கிறது
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று நடைபெறும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் முன்னணி இந்திய மற்றும் சர்வதேச பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பெருநிறுவனப் பெருமுதலாளிகள் பங்கேற்கின்றனர். பாடகி கிம் கர்தாஷியன், குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், முன்னாள் இங்கிலாந்து பிரதமர்களும் இதில் அடங்குவர்.
கடந்த நான்கு மாதங்களாக நடந்து வந்த நட்சத்திரங்கள் நிறைந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களுக்குப் பிறகு, 29 வயதான ஆனந்த் அம்பானி, மருந்து அதிபர்களான வீரேன் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டை மணக்கவுள்ளார்.

ஆரம்பம் முதலே ஆடம்பரமாக நடைபெறும் அம்பானி வீட்டுத் திருமணம் குறித்து இந்தியாவின் அதிகம் உள்ள நடுத்தர மற்றும் ஏழை வர்க்க மக்களிடையே பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. பணம் இருப்பதனால் அம்பானி கண்மண் தெரியாமல் காசை வாரி இரைத்து வருவதாக மக்கள் அங்கலாய்த்தனர்.
அதன்படி தற்போது வெளியாகியுள்ள ஆனந்த் அம்பானியின் மொத்த கல்யாண செலவு எவ்வளவு என்ற தகவல் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, ஏறக்குறைய ரூ.4000 முதல் ரூ.5000 கோடி வரை அம்பானி தனது மகனின் திருமணத்துக்காக செலவிட்டுள்ளார்.

முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.7.65 லட்சம் கோடியாகும். அதில் மகனின் திருமணத்துக்காக அம்பானி செலவு செய்துள்ள தொகை அவரின் மொத்த சொத்துமதிப்பில் வெறும் 0.5 சதவீதம் மட்டுமே ஆகும். ஆனால் இந்தியாவில் சராசரி குடும்பம் திருமணத்துக்கு செலவு செய்வதை விட அம்பானி குறைவாகவே செலவு செய்துள்ளார். சராசரி இந்திய குடும்பம் ஒன்று தங்களது சொத்துமதிப்பில் 10 முதல் 15 சதவீதம் வரை திருமணத்துக்கு செலவு செய்வது குறிப்பிடத்தக்கது.
- ஆனந்த் அம்பானியின் திருமண செலவு ரூ.4000 முதல் ரூ.5000 கோடி வரை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
- மும்பையில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் இன்று மும்பையில் நடைபெறுகிறது.
கடந்த நான்கு மாதங்களாக நடந்து வந்த நட்சத்திரங்கள் நிறைந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களுக்குப் பிறகு, 29 வயதான ஆனந்த் அம்பானி, மருந்து அதிபர்களான வீரேன் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டை மணக்கவுள்ளார். ஆனந்த் அம்பானியின் திருமண செலவு ரூ.4000 முதல் ரூ.5000 கோடி வரை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், மும்பையில் இன்று நடைபெறும் திருமணத்தில் முன்னணி இந்திய மற்றும் சர்வதேச பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பெருநிறுவனப் பெருமுதலாளிகள் பங்கேற்கின்றனர். பாடகி கிம் கர்தாஷியன், குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், முன்னாள் இங்கிலாந்து பிரதமர்களும் இதில் அடங்குவர்.
மேலும் பலர் திருமணத்தில் பங்கேற்க வருவதால் மும்பையில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் ஐ.டி. ஊழியர்களுக்கு Work From Home வழங்கப்பட்டுள்ளது.

நகரத்தின் மிகப்பெரிய ஐ.டி. பூங்காக்களில் ஒன்றான பாண்ட்ரா குர்லா வளாகத்தில் உள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வருகிற 15-ந்தேதி வரை Work From Home எடுத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.
- உலக பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், பெரும் தொழில் அதிபர்கள் முன்னிலையில் ஆனந்த் அம்பானியின் ஆடம்பர திருமணம் அரங்கேறியது.
- திருமண விழாவில் கலந்து கொண்ட திரை நட்சத்திரங்கள் பலர் அசத்தல் நடனமாடினர்.
உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழில் அதிபருமான முகேஷ் அம்பானி - நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி (வயது 29). இவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிசக்தி வணிகத்தை கவனித்து வருகிறார். இவருக்கும் மருந்தக துறையை சேர்ந்த பிரபல தொழில்அதிபர் வீரேன் - ஷைலா மெர்ச்சன்ட் தம்பதியின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்-க்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இவர்களின் திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது. கடந்த மார்ச் மாதம் குஜராத் ஜாம்நகரில் நடந்த கொண்டாட்டத்தில் உலகம் முழுவதும் இருந்து பிரபலங்கள், தொழில் அதிபர்கள், ஹாலிவுட் திரை நட்சரத்திரங்கள் மற்றும் இந்தியாவின் அனைத்து முன்னணி திரை நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் நேற்று மும்பை பி.கே.சி.யில் உள்ள அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடந்தது. திருமணத்தையொட்டி நேற்று முன்தினம் முதலே மும்பைக்கு உலக பிரபலங்கள் முதல் உள்ளூர் திரை நட்சத்திரங்கள் வரை அனைவரும் வரத்தொடங்கினர்.
மணமகன் ஆனந்த் அம்பானி சிவப்பு, தங்க நிற செர்வானி அணிந்து தந்தை முகேஷ் அம்பானி, தாய் நீடா அம்பானி, அக்காள் இஷா, அவரது கணவர் ஆனந்த் பிரமல், அண்ணன் ஆகாஷ், அவரது மனைவி சோல்கா மேத்தா மற்றும் பிள்ளைகளுடன் வந்தார்.
மணமகன், மணமகள் மட்டுமின்றி விருந்தினர்களும் கண்ணை கவரும் ஆடம்பர ஆடை அணிந்து திருமணத்துக்கு வந்து இருந்தனர். இரவில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் கோலாகலமாக நடந்தது.

விழாவில் நடிகர் ரஜினிகாந்த், அவரது மகள் சவுந்தர்யா, மகனுடன் தமிழ் பாரம்பரிய ஆடை அணிந்து வந்து இருந்தனர். இதேபோல கிரிக்கெட் வீரர் டோனி, மனைவி சாக்சி, மகள் ஜிவாவுடன் மஞ்சள்நிர பாரம்பரிய உடையணிந்து வந்து இருந்தார். மேலும் ஹாலிவுட் நடிகர் ஜான் சீனா, நடிகர்கள் அனில் கபூர், சஞ்சய் தத், வெங்கடேஷ், வருண் தவான், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், ஜாக்கி ஜெராப், ராஜ்குமார் ராவ், நடிகைகள் பிரியங்கா சோப்ரா, சாரா அலிகான், ஜான்வி கபூர், இயக்குனர் கரன் ஜோகர், கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல இங்கிலாந்து முன்னாள் பிரதமர்கள் டோனி பிளேயர், போரிஸ் ஜான்சன், அமெரிக்காவை சேர்ந்த டி.வி. பிரபலம் கிம் கர்தாஷியன், அவது சகோதரி கோலே கர்தாஷியன், ராப் பாடகி ரீமா உள்ளிட்ட பல வெளிநாட்டு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு உலக பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், பெரும் தொழில் அதிபர்கள் முன்னிலையில் ஆனந்த் அம்பானியின் ஆடம்பர திருமணம் அரங்கேறியது.
திருமண விழாவில் கலந்து கொண்ட திரை நட்சத்திரங்கள் பலர் அசத்தல் நடனமாடினர். யாரும் எதிர்பாராத வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் நடனமாடினார். அவருடன் மணமகன் ஆனந்த் அம்பானி மற்றும் அம்பானி குடும்பத்தினர் ஆடினர்.
இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தையொட்டி மும்பை பி.கே.சி. பகுதி விழா கோலம் பூண்டு உள்ளது. அந்த பகுதியே மின்னொளியில் ஜொலிக்கிறது. வரும் திங்கள் வரை நடைபெறும் திருமண கொண்டாட்டத்தில் அரசியல் தலைவர்கள், பிரபல தொழில் அதிபர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) திருமண விழாவில் கலந்து கொள்ள உள்ளார். இதையொட்டி பி.கே.சி. பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- திருமணத்தையொட்டி நேற்று முன்தினம் முதலே மும்பைக்கு உலக பிரபலங்கள் முதல் உள்ளூர் திரை நட்சத்திரங்கள் வரை அனைவரும் வரத்தொடங்கினர்.
- வரும் திங்கள் வரை நடைபெறும் திருமண கொண்டாட்டத்தில் அரசியல் தலைவர்கள், பிரபல தொழில் அதிபர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழில் அதிபருமான முகேஷ் அம்பானி - நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் மருந்தக துறையை சேர்ந்த பிரபல தொழில்அதிபர் வீரேன் - ஷைலா மெர்ச்சன்ட் தம்பதியின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்-க்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இவர்களின் திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது. கடந்த மார்ச் மாதம் குஜராத் ஜாம்நகரில் நடந்த கொண்டாட்டத்தில் உலகம் முழுவதும் இருந்து பிரபலங்கள், தொழில் அதிபர்கள், ஹாலிவுட் திரை நட்சரத்திரங்கள் மற்றும் இந்தியாவின் அனைத்து முன்னணி திரை நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் நேற்று மும்பை பி.கே.சி.யில் உள்ள அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடந்தது. திருமணத்தையொட்டி நேற்று முன்தினம் முதலே மும்பைக்கு உலக பிரபலங்கள் முதல் உள்ளூர் திரை நட்சத்திரங்கள் வரை அனைவரும் வரத்தொடங்கினர். வரும் திங்கள் வரை நடைபெறும் திருமண கொண்டாட்டத்தில் அரசியல் தலைவர்கள், பிரபல தொழில் அதிபர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதற்கிடையே ஆனந்த் அம்பானியின் திருமண செலவு ரூ.4000 முதல் ரூ.5000 கோடி வரை என்ற தகவல் வெளியாகி பொதுமக்களிடையே பேச்சு பொருளாகி உள்ளது.

இந்நிலையில், மும்பையில் நடைபெற்று வரும் நட்சத்திரங்கள் நிறைந்த திருமண கொண்டாட்டத்தில் நைஜீரிய இசைக்கலைஞரும், ராப் பாடகருமான ரேமா பாடல் நிகழ்ச்சிக்கு $3 மில்லியன், அதாவது இந்திய மதிப்பில் ரூ.25 கோடிக்கு மேல் பெறுகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நைஜீரிய ராப் பாடகருமான ரேமா, 'காம் டவுன்' பாடலுக்குப் பெயர் பெற்றவர். இவர் திருமணத்தில் 'காம் டவுன்' பாடலை மட்டுமே பாடுவார் என்று கூறப்படுகிறது. ரேமாவைத் தவிர, 'டெஸ்பாசிட்டோ' புகழ் லூயிஸ் ஃபோன்சியும் இந்த நிகழ்வில் நிகழ்ச்சி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், அவரது மகள் சவுந்தர்யா, மகனுடன் தமிழ் பாரம்பரிய ஆடை அணிந்து வந்து இருந்தனர்.
- ப்ரூச்சை ஆனந்துக்கு அவரது சகோதரர் ஆகாஷ் அம்பானி பரிசளித்ததாக கூறப்படுகிறது.
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆன்ந்த அம்பானியின் ஆடம்பர திருமணம் நேற்று மும்பையில் நடைபெற்றது. கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது.
நேற்று மும்பை பி.கே.சி.யில் உள்ள அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடந்தது.
திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், அவரது மகள் சவுந்தர்யா, மகனுடன் தமிழ் பாரம்பரிய ஆடை அணிந்து வந்து இருந்தனர். இதேபோல கிரிக்கெட் வீரர் டோனி, மனைவி சாக்சி, மகள் ஜிவாவுடன் மஞ்சள்நிர பாரம்பரிய உடையணிந்து வந்து இருந்தார். மேலும் ஹாலிவுட் நடிகர் ஜான் சீனா, நடிகர்கள் அனில் கபூர், சஞ்சய் தத், வெங்கடேஷ், வருண் தவான், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், ஜாக்கி ஜெராப், ராஜ்குமார் ராவ், நடிகைகள் பிரியங்கா சோப்ரா, சாரா அலிகான், ஜான்வி கபூர், இயக்குனர் கரன் ஜோகர், கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், திருமணத்திற்கு முந்தைய விழாவில் ஆனந்த் அம்பானி கோடி மதிப்புள்ளான ப்ரூச் அணிந்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Panthere De Cartier ப்ரூச் ஆனது 51 சபையர்கள், இரண்டு மரகதங்கள் மற்றும் ஒரு ஓனிக்ஸ் வைரம் ஆகியவற்றை கொண்ட 18K தங்கத்தால் ஆனது.
இந்த ப்ரூச்சை ஆனந்துக்கு அவரது சகோதரர் ஆகாஷ் அம்பானி பரிசளித்ததாக கூறப்படுகிறது.
- ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடந்தது.
- திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது.
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆன்ந்த அம்பானியின் ஆடம்பர திருமணம் நேற்று மும்பையில் நடைபெற்றது. கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது.
நேற்று மும்பை பி.கே.சி.யில் உள்ள அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடந்தது.
திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கிரிக்கெட் வீரர் டோனி, ஹாலிவுட் நடிகர் ஜான் சீனா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
திருமண நிகழ்வில் நீட்டா அம்பானியுடன் இணைந்து ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடந்தது.
- அழகான வாட்சுகளை சேகரிக்கும் பழக்கம் கொண்டவர் சல்மான்கான்.
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆன்ந்த அம்பானியின் ஆடம்பர திருமணம் நேற்று மும்பையில் நடைபெற்றது. கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது.
நேற்று மும்பை பி.கே.சி.யில் உள்ள அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடந்தது.
திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கிரிக்கெட் வீரர் டோனி, ஹாலிவுட் நடிகர் ஜான் சீனா, ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த திருமண விழாவில் கலந்து கொண்ட சல்மான் கான் 23 கோடி மதிப்பிலான வாட்ச் கட்டியிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
23 கோடி ரூபாய் மதிப்பிலான படேக் பிலிப் அக்வானாட் லூஸ் ரெயின்போ ஹாட் ஜோய்லரி கடிகாரத்தை சல்மான் கான் அணிந்திருந்தார்.
அழகான வாட்சுகளை சேகரிக்கும் பழக்கம் கொண்டவர் சல்மான்கான். அவரிடம் உள்ள பல வாட்சுகளில் இதுவும் ஒன்று என்று சொல்லப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- திருமணத்துக்கு ரூ.5,000 கோடி செலவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- திருமணத்துக்கு முன்னதாக, சொகுசு கப்பலில் பிரம்மாண்ட நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
மும்பை:
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ர்சண்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் மையத்தில் கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.
4 மாதமாக நட்சத்திரங்கள், பிரபலங்கள் நிறைந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களுக்குப் பிறகு ஜூன் மாதம் இனிதே திருமணம் நடந்தது.
இவர்களின் திருமணத்தின் விருந்தினர் பட்டியலில் இந்திய மற்றும் சர்வதேச பிரபலங்கள், அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பெருநிறுவனப் பெருமுதலாளிகள் ஏராளமானோர் வருகை தந்து புதுமணத் தம்பதியை வாழ்த்தினர்.

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி, நடிகர்கள் ரஜினிகாந்த், சல்மான்கான், ஷாருக்கான், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், கியாரா, அத்வானி, சன்னி தியோல், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். டபிள்யூடபிள்யூஎப் குத்துச்சண்டை வீரரும் நடிகருமான ஜான் சீனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அம்பானியின் சொந்த ஊரான குஜராத்தின் ஜமாநகரில் திருமணத்திற்கு முந்தைய 3 நாள் நிகழ்வில் மெட்டாவின் மார்க் ஜூக்கர்பெர்க், மைக்ரோசாப்டின் பில்கேட்ஸ், ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் ப்ஹாய் உள்பட சுமார் 1,200 விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.

திருமண நிகழ்வின் ஒரு பகுதியாகஆனந்த் அம்பானி சார்பில் 50 பேருக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது.
திருமணத்துக்கு முன்னதாக, சொகுசு கப்பலில் பிரம்மாண்ட நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
திருமணத்தில்பங்கேற்ற தனது நண்பர்களுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை ஆனந்த் அம்பானி பரிசாக வழங்கினார்.
ஆனந்த் அம்பானியின் இந்தத் திருமணத்துக்கு சுமார் ரூ.5,000 கோடி செலவானதாக தகவல் வெளியானது.