search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு"

    • வாக்குப்பதிவுகள் முழுமையாக முடிவடைந்த பின்னர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படும்.
    • பெரும்பாலான இந்த கருத்துக் கணிப்புகளை அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்வது வழக்கமாக உள்ளது.

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி தொடங்கியது. மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடைசி கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.

    தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து கருத்து கணிப்புகள் வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை செய்தி நிறுவன தொலைக்காட்சிகள் வெளியிடும்.

    அப்போது கட்சித் தலைவர்களை அழைத்து விவாதங்கள் நடத்தப்படும். அப்போது கருத்துக் கணிப்பு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் அவர்கள் கட்சி சார்பாக பேசுவார்கள். இந்த விவாதங்களில் எங்கள் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கெரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "மக்கள் வாக்களித்து தீர்ப்பு உறுதி செய்யப்பட்டள்ளது. முடிவு 4-ந்தேதி வெளியாகப்போகிறது. டிஆர்பி-க்கான ஊகங்களில் ஈடுபதற்கான எந்த காரணத்தையும் நாங்கள் பார்க்கவில்லை.

    காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் கலந்து கொள்ளாது. எந்தவொரு விவாதத்தின் நோக்கம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு நடைபெறும் விவாதங்களில் மகிழ்ச்சியாக கலந்து கொள்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.

    ×