search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் கருத்துக் கணிப்பு"

    • பங்குசந்தை வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
    • பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி.

    மும்பை:

    பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை நாளை நடைபெற்று முடிவுகள் வெளியாக உள்ளது. இதற்கிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் பங்குசந்தை வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப் பட்டிருந்தது. அதேபோல இன்று காலை வர்த்தகம் தொடங்குவதற்கு முன்பு நடந்த பிரி மார்க்கெட் வர்த்தகத்தில் சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.

    இதைத் தொடர்ந்து வர்த்தகம் தொடங்கி பின் கணிசமாகச் சரிந்தாலும் 2000 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.

    இன்று காலை மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2106 புள்ளிகள் உயர்ந்து 76 ஆயிரத்து 67 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 663 புள்ளிகள் உயர்ந்து 23 ஆயிரத்து 193 புள்ளிகளை எட்டியுள்ளது. இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு, நிப்டி குறியீடு வரலாற்று உச்ச அளவீட்டைத் தொட்டு உள்ளது.

    தேர்தல் எதிரொலியால் கடந்த வாரம் முழுவதும் இந்திய பங்குச்சந்தைகள் அதிகளவிலான சரிவையும், தடுமாற்றத்தையும் சந்தித் தன. கருத்துக்கணிப்பில் தேர்தல் முடிவு பா.ஜனதா வெற்றிக்குச் சாதகமாக இருக்கும் என்று தெரிவிக்கப் பட்டதால் இன்று சந்தையில் சாதகமான வர்த்தக சூழ்நிலை நிலவுகிறது.

    வர்த்தக தொடக்கத்திலேயே சென்செக்ஸ் 2 ஆயிரம் புள்ளிகள் உயர்ந்ததால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×