search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆந்திர உயர்நீதிமன்றம்"

    • ஆந்திர மாநிலத்தில் உள்ள 25 பாராளுமன்ற தொகுதிகள் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 13ம் தேதி தேர்தல் நடந்தது.
    • YSR காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ண ரெட்டி வாக்குச்சாவடிக்குள் நுழைந்து EVM இயந்திரத்தை உடைத்தார்.

    ஆந்திர மாநிலத்தில் உள்ள 25 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 13ம் தேதி தேர்தல் நடந்தது. வாக்குபதிவின்போது பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.

    பல்நாடு மாவட்டம் மாச்சர்லா தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி 4-வது முறையாக போட்டியிட்டார். இந்நிலையில் இவர் பால்வாய் கேட் வாக்குச் சாவடியில் வி.வி.பேட் இயந்திரத்தை உடைத்தார்.

    இந்த வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த வீடியோ காட்சிகளை வைத்து பின்னெல்லி ராமகிருஷ்ண ரெட்டி மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார்

    இதனையடுத்து, ஆந்திர சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவின் போது YSR காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ண ரெட்டி வாக்குச்சாவடிக்குள் நுழைந்து EVM இயந்திரத்தை உடைத்த வழக்கில் அவரை கைது செய்ய ஆந்திர உயர் நீதிமன்ற தனி நீதிபதி இடைக்கால தடை விதித்தார்.

    இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்த எம்.எல்.ஏ.வை கைது செய்ய தடை விதித்த ஆந்திர உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை கேலிக்கூத்து என உச்ச நீதிமன்றம் விமர்சனம் செய்தது.

    மேலும், வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்ல எம்.எல்.ஏ. ராமகிருஷ்ண ரெட்டிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. வரும் 6ம் தேதி இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    ×