என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்டிஏ கூட்டணி"

    • மத்திய அமைச்சர் அமித் ஷா, மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் கலந்து கொண்டனர்.
    • பாஜகவுடனான கூட்டணி முறிவுக்கு எனது சொந்தக் கட்சியில் உள்ள சிலர் தான் காரணம்.

    பீகார் மாநிலத்துக்கு சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

    பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இடம்பற்றுள்ள ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் தற்போது முதல்வராக உள்ளார். முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உடைய ராஷ்டிரிய ஜனதா தளம் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இவ்விரு கூட்டணிக்குமிடையில் இந்த தேர்தலில் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில் இன்று பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் அமித் ஷா, மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் கலந்து கொண்டனர். அரசின் நலத்திட்டங்களை பெறும் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை அளித்தனர்.

    அதன்பின் நடந்த கூட்டத்தில் நிதிஷ் குமார் பேசுகையில், பாஜகவை இனி ஒரு போதும் கைவிட மாட்டேன். இரண்டு முறை தவறு செய்துவிட்டேன். இனி அந்த தவறு நடக்காது. என்னை யார் முதலமைச்சராக்கியது? அடல் பிகாரி வாஜ்பாய் என்னை முதலமைச்சராக்கினார். நாம் எப்படி மறக்க முடியும்?

    பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு,அனைத்து விஷயங்களும் மேம்படத் தொடங்கின. 90களின் மத்தியில் இருந்து பாஜக கூட்டணியில் இருந்தோம். 2014இல் பிரிந்தோம்.

    3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்தோம். 2022 ஆம் ஆண்டில் மீண்டும் பிரிந்தோம். ஆனால் கடந்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னதாக மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தோம்.

    பாஜகவுடனான கூட்டணி முறிவுக்கு எனது சொந்தக் கட்சியில் உள்ள சிலர் தான் காரணம். இரண்டு முறை நான் தவறு செய்தேன். ஆனால் அது மீண்டும் ஒருபோதும் நடக்காது என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பானி மே பங்கா பங்கி சாய், பாவ்ஜி...' என்று சகோதரரின் மனைவியை ஆபாசமாக அழைக்கும் பாடலை அவர் பாடினார்.
    • நான் தினமும் நடனமாடுகிறேன், தினமும் முத்தமிடுகிறேன்

    பீகாரில் பாகல்பூர் மாவட்டத்தின் நௌகாச்சியாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற பாஜக கூட்டணியின் ஹோலி கொண்டாட்டத்தில் ஆளும் ஜேடியு கட்சி எம்எல்ஏ கோபால் மண்டல் பங்கேற்றார்.

    பிரபல பாடகி சாய்லா பிஹாரி நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தபோது, மேடையேறிய எம்எல்ஏ கோபால் மண்டல் மைக்கை எடுத்து ஆபாசமான பாடல்களை பாடத் தொடங்கினார்.

    "பானி மே பங்கா பங்கி சாய், பாவ்ஜி...' என்று சகோதரரின் மனைவியை ஆபாசமாக அழைக்கும் பாடல் ஒன்றை அவர் மேடையில் பாடி அனைவரையும் கலங்கடித்தார்.

    மேலும் மேடையில் இருந்த பெண் நடனக் கலைஞரை கையை பிடித்து நடனமாடிய அவர், அப்பெண்ணின் கன்னத்தில் 500 ரூபாய் தாளை ஒட்டவைத்தார். மைக்கில் தொடர்ந்து பேசிய கோபால் மண்டல், நான் நன்றாக நடனமாடுவேன் என பலர் கூறுகின்றனர்.

    நான் தினமும் நடனமாடுகிறேன், தினமும் முத்தமிடுகிறேன் என்று கூறினார். எனது நடன வீடியோக்கள் வைரலாகி, முதலமைச்சர் நிதிஷ் குமார் என்னை கடிந்து கொள்கிறார். ஆனால் முதலமைச்சர் என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்று தெரிவித்தார்.

    இந்த வீடியோவை குறிப்பிட்டு எதிர்க்கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் கடுமையாக விமர்சித்துள்ளது. இதுபோன்ற மக்கள் பிரதிநிதிகள் மீது அரசும், நீதிமன்றங்களும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

     

    • உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காலை 9.00 மணி நிலவரப்படி பாஜக பின்னிலையில் உள்ளது.
    • ராஜஸ்தானில் 7 இடங்களிலும், உத்தரப் பிரதேசத்தில் 5 இடங்களிலும், மகாராஷ்டிராவில் 10 இடங்களிலும் காங்கிரஸின் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது.

     நடந்து முடித்த பாராளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வரும் நிலையில் முன்னிலை நிலவரங்கள் அடுத்தடுத்து வந்த வண்ணம் உள்ளன.

    தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பின்படி பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 350க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் இதனைக் காங்கிரஸின் இந்தியா கூட்டணி மறுத்துள்ளது. பொய்யான கருத்துக்கணிப்புகளை பாஜக மக்களிடம் திணிக்கிறது என்றும் கருத்துக்கணிப்புக்கு நேரெதிராக தேர்தல் முடிவுகள் இருக்கும் என்றும் கூறியுள்ளது.

    இந்நிலையில் வடக்கில் முக்கிய மாநிலங்களான உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காலை 9.00 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பாஜக பின்னிலையில் உள்ளது. ராஜஸ்தானில் 7 இடங்களிலும், உத்தரப் பிரதேசத்தில் 5 இடங்களிலும், மகாராஷ்டிராவில் 10 இடங்களிலும் காங்கிரஸின் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில், நாட்டிலேயே அதிகபட்சமாக 80 தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் 60 முதல் 71 இடங்களை பாஜக வெல்லும் என்றும் இந்தியா கூட்டணி 10 இடங்களை வெல்லும் என்றும் கணிக்கப்பட்டது.

    ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 25 இடங்களில் 20 வரை பாஜக கூட்டணி வெல்லும் என்றும் மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 இடங்களில் 22 முதல் 35 இடங்களை பாஜக கூட்டணி வெல்லும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது. இந்த கணிப்புகளுக்கு நேர் மாறாக பாஜக கூட்டணி இந்த 3 மாநிலங்களிலும் தற்போது பின்னடைவைச் சந்தித்துள்ளது.

    குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் மற்றும் ராஜஸ்தானில் பாஜக ஆட்சி நடக்கிறது. மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனாவின் முக்கிய தலைவர் ஏக்நாத் ஷிண்டே கட்சியை உடைத்து பாஜகவுடன் கூட்டணி வைத்த நிலையில் அங்கு பாஜக கூட்டணி ஆட்சி நடப்பது கவனிக்கத்தக்கது. 

    • அனைத்து கருதுகணிப்புகளையும் பொய்யாக்கி இந்தியா கூட்டணி 235 இடங்களில் வென்றது பாஜகவுக்கு பேரிடியாக அமைந்தது.
    • பங்குசந்தையில் முறைகேடு செய்யவே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    இந்தியாவில் நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த நிலையில் காங்கிரசின் இந்தியா கூட்டணி 235 இடங்களிலும் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் வலுவான சக்தியாக உருவெடுத்துள்ளது.

    முன்னதாக தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெரும் எனவும் காங்கிரஸ் ஒற்றை இலக்கத்தில் தான் இடங்களைக் கைப்பற்றும் எனவும் கணித்திருந்தன. இந்த கருத்துக்கணிப்புகள் பாஜகவால் திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியிருந்தன.

    இதற்கிடையே ஜூன் 4 ஆம் தேதி அனைத்து கருதுகணிப்புகளையும் பொய்யாக்கி இந்தியா கூட்டணி 235 இடங்களில் வென்றது பாஜகவுக்கு பேரிடியாக அமைந்தது. வட மாநிலங்களில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஆர்.ஜே.டி ஆகியவற்றின் தயவுடனேயே பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானதும் இந்திய பங்குச் சந்தையில் பங்குகளின் விலை அதிரடியாக உயர்ந்தது. பங்குசந்தையில் முறைகேடு செய்யவே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்நிலையில் கருத்துக்கணிப்பை வெளியிட்ட பல்வேறு நிறுவனங்களில் முக்கியமானதாக விளங்கும் ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் மீதும் இந்த குற்றச்சாட்டு வலுவாக முன்வைக்கப்டுகிறது.

    எனவே செபி அமைப்பு மற்றும் பாராளுமன்ற குழு இணைந்து ஆக்சிஸ் மை இந்தியா மீது விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. மேலும் வருங்காலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

     

     தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தற்போது பதிலளித்துள்ள ஆக்சிஸ் மை இந்தியா தலைவர் பிரதீப் குப்தா, அனைத்து வகையான விசாரணைக்கும் தாங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். பங்குச் சந்தைக்கும் தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று முற்றிலுமாக மறுத்துள்ள அவர் வருங்காலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என்பது குழந்தைத்தனமானது என்றும் விமர்சித்துள்ளார். இந்த பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 361 முதல் 401 இடங்களைக் கைப்பற்றும் என ஆக்சிஸ் மை இந்தியா கணித்தது.  முன்னதாக பிரதீப் குப்தா தேர்தல் ரிசல்ட் நாளன்று பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறாததால் தொலைக்காட்சி விவாத மேடையில் கதறி அழுதது குறிப்பிடத்தக்கது.

    • பிரசார பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
    • அத்துமீறல்களை முறியடித்து பாமக வெற்று பெறும் என்றார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்த பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜான் பாண்டியன், ஜி.கே.வாசன், பாரிவேந்தர், தேவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    இந்த பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

    பிரசார பொதுக்கூட்டத்தில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி பேசினார்.

    அதிமுகவினர் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டுமென அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். பெண் வாக்காளர்களை குறிவைத்து சவுமியா அன்புமணி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    10.5 சதவீத இட ஒதுக்கீடு நிறைவேற பாமகவுக்கு வாக்களிக்குமாறு அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும், அத்துமீறல்களை முறியடித்து பாமக வெற்று பெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    விக்கிரவாண்டியில் பாமக வெற்றிபெறும். ஆட்சி எப்படி இருக்க கூடாது என்பதற்கு திமுக ஆட்சி உதாரணம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    பாமக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் மாற்றம் ஏற்பட இது முக்கியமான தேர்தல் என ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.

    பாமக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். பல தேர்தலை சந்தித்துள்ளோம், மாற வேண்டியது நாம்தான் என ரவி பச்சைமுத்து தெரிவித்துள்ளார்.

    ×