என் மலர்
நீங்கள் தேடியது "பிரிவினைவாதி"
- பாஜகவை மக்கள் நிராகரித்துவிட்டனர்.
- ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர் சீமான்.
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் 293 தொகுதிகளில் பாஜக கூட்டணியும் 234 தொகுதிகளில் இந்தியா கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளது.
ஆட்சியமைக்க 273 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்புள்ளதால் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதில் இழுபறி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது "பாஜகவை மக்கள் நிராகரித்துவிட்டனர். 2019ஆம் ஆண்டு 5.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்ற நரேந்திர மோடி, இப்போது 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வென்றுள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக வாங்கிய வாக்குகள் பாமகவிற்கு சொந்தமானது தான். இங்கு பாமகவிற்கு 7 முதல் 8 சதவிகிதம் வாக்கு வங்கி உள்ளது. பாமக பலமாக இருக்கும் பகுதியில் தான் பாஜக 2வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு பாமக தான் காரணம்.
நாம் தமிழர் கட்சிக்கு ஏமாந்த இளைஞர்கள் வாக்களிப்பது ஆபத்தான விஷயம். அவர் ஒரு பிரிவினைவாதி தான். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர் சீமான் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி மொத்தமாக 8.19 சதவிகித வாக்குகளை பெற்று மாநில கட்சிக்கான அந்தஸ்தை பெற்றுள்ளது.
- இந்தியாவால் தடை செய்யப்பட்ட இந்த அமைப்பின் இணை நிறுவனர் குருபத்வந்த் சிங் பன்னுன்
- ரஷிய ஊடகம் காலிஸ்தான் குறித்த தப்பெண்ணத்தை பரப்புவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காலிஸ்தான் ஆதரவாளர்கள் குறித்த தகவல்களை ரஷியா இந்திய உளவு அமைப்பான RAW விற்கு வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
RAW வுடனும், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடனும் தொடர்பில் உள்ள ரஷிய அமைப்புகள் இந்த முக்கிய தகவல்களைப் பரிமாறுவதாக சீக்கியர்களுக்கான நீதி [எஸ்.எப்.ஜே] அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவால் தடை செய்யப்பட்ட இந்த அமைப்பின் இணை நிறுவனர் குருபத்வந்த் சிங் பன்னுன், காலிஸ்தானுக்கு எதிராகச் செயல்படுவதாக ரஷியாவை எச்சரித்துள்ளார்.

ரஷிய ஊடகம் காலிஸ்தான் குறித்த தப்பெண்ணத்தை பரப்புவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே நியூ யார்க்கில் உள்ள ரஷிய தூதரகம் முன் எஸ்எப்ஐ உறுப்பினர்கள் போராட்டத்தில் நேற்று முன் தினம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அமரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள ரஷிய தூதரகம் முன்னும் ஆர்ப்பாட்டம் நடத்த எஸ்எப்ஐயினர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக குருபத்வந்த் சிங் பன்னுன் மீதான கொலை முயற்சியில் இந்தியாவை தொடர்புப்படுத்தி சர்ச்சை எழுந்ததும், அவர் இந்திய விமானங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.