என் மலர்
நீங்கள் தேடியது "ராஜ் கிரண்"
- ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகி வருகிறது.
- . தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.
'விலங்கு' எனும் இணைய தொடரை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாமன் ' எனும் திரைப்படத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.
படத்தொகுப்பு பணிகளை கணேஷ் சிவா மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஜி. துரை ராஜ் கவனிக்கிறார். தாய் மாமன் உறவைப் பற்றி மண் மணம் கமழும் படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கிறார்.
ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகி வருகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து ரசிக்கும் வகையில் ஃபேமிலி என்டர்டெய்னராக 'மாமன்' உருவாகி வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
- அடுத்ததாக நடிகர் கார்த்தி 96 படம் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் `மெய்யழகன்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.
நடிகர் கார்த்தி கடைசியாக தனது 25 வது படமான ஜப்பான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை. அடுத்ததாக நடிகர் கார்த்தி 96 படம் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் `மெய்யழகன்' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக மெய்யழகன் படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் நடிகர் கார்த்தி, சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார்.
அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகளும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து க்ரித்தி ஷெட்டி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. மேலும் நடிகர்கள் கார்த்தி இந்த படத்தில் எம்ஜிஆரின் தீவிர ரசிகராக நடித்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் நலன் குமாரசாமி படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, "90 காலகட்டங்களில் வெளிவந்த அனைத்து மசாலா படங்களுக்கும் இந்த படம் சமர்ப்பணமாக இருக்கும். மேலும் படத்தில் சண்டை காட்சிகளும் பாடல்களும் இருக்கின்றன. கார்த்தி மற்றும் அவருக்கு தாத்தாவாக நடித்திருக்கும் ராஜ்கிரண் ஆகியோர் எம்ஜிஆர் ரசிகர்களாக நடித்துள்ளனர்" என்று அப்டேட் கொடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "நான் எட்டு வருடங்களாக திரைப்படம் எதுவும் இயக்காமல் இருந்தாலும் என்னுடைய படத்திற்காக பல ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் கிராஃபிக்ஸ் என சர்ச்சை எழுந்தது
- 15 ஆண்டுகளுக்கு முன்பே பிரபாகரனோடு நான் எடுத்த படம் வெளியாகிவிட்டது என சீமான் பதில்
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை எடிட் செய்ததே நான் தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து பேசிய சீமான், "பெரியாரைப் பற்றி நான் தொடர்ந்து பேசி வருவதால் எங்கள் தலைவர் பிரபாகரனோடு நான் எடுத்த படம் எடிட் செய்யப்பட்டது என்கிற அவதூறை பரப்பி வருகிறார்கள்.
15 ஆண்டுகளுக்கு முன்பே பிரபாகரனோடு நான் எடுத்த படம் வெளியாகிவிட்டது. இப்போது எடிட் செய்து கொடுத்ததாக சொல்லும் நபர் இவ்வளவு நாட்களும் என்ன செய்து கொண்டு இருந்தார்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து ஆதாரத்துக்கு ஒரு ஆதாரம் தேவையா என சீமானுக்கு இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கேள்வி எழுப்பினார்.
சீமான் - பிரபாகரன் புகைப்பட சர்ச்சை எழுந்துள்ள நிலையில் நடிகர் ராஜ் கிரண் பதிவிட்டுள்ள பேஸ்புக் பதிவு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
அவரது பதிவில், "நான் ஒரு நடிகன் என்பதால், என்னை வைத்து திரைப்படம் தயாரிப்பதற்காக என்று சிலரும், என்னை வைத்து திரைப்படம் இயக்குவதற்காக என்று சிலரும், என் அபிமானிகள் என்றும், என் தீவிர ரசிகர்கள் என்று பலரும், என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதென்பது, சாதாரணமாக நடக்கும் விசயம்.
இம்மாதிரியான புகைப்படங்களை வைத்துக்கொண்டு, என் சொந்தக்காரர்கள் என்றோ, எனக்கு மிகவும் வேண்டியவர்கள் என்றோ கூறிக்கொண்டு, யார் என்ன காரணத்திற்காக உங்களை அணுகினாலும் அவர்களிடம் மிக கவனமாக இருங்கள். என்னிடம், யார் சிபாரிசும் எடுபடாது. என் விசயங்களில், நான் மட்டுமே முடிவெடுக்கிறேன். என்னுடன் இருக்கும் புகைப்படங்களை வைத்துக்கொண்டு, கதைகள் பல சொல்லி, யாரும் யாரையும் ஏமாற்றிவிடக்கூடாது என்பதற்காகவே, இந்தப்பதிவு" என்று தெரிவித்துள்ளார்.