என் மலர்
நீங்கள் தேடியது "அணு ஆயுதங்கள்"
- ரஷியாவை எதிரி என்ற பிம்பத்தை உருவாக்க வேண்டாம்.
- தலிபான் அரசுடன் நாங்கள் உறவுகளை உருவாக்க வேண்டும்.
மாஸ்கோ:
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கி 2 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்த போரில் பொதுமக்கள், வீரர்கள் பலர் கொல்லப்பட்டாலும் இன்னும் சண்டை முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி,இங்கிலாந்து போன்ற சில ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. ஆயுத உதவியும் செய்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ரஷியா மீது உக்ரைன் திடீர் தாக்குதல் நடத்தியது.
இதில் ஜெர்மனி நாட்டு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ரஷியா மீது தாக்குதல் நடத்த ஜெர்மனியின் ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்தி இருப்பது ஆபத்தான நடவடிக்கை ஆகும். மேற்கு நாடுகளை தாக்க நீண்ட தொலைவு சென்று தாக்கக்கூடிய ஆயுதங்களை வேறு சில நாடுகளுக்கு ரஷியா வழங்கும்.
எங்களுடைய நாட்டின் இயைாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிய வந்தால் ரஷியா தன்னை தற்காத்துக்கொள்ள அனைத்து வழிகளையும் பின்பற்றும். அணு ஆயுதங்களை பயன் படுத்தவும் தயாராக இருக்கிறோம். ரஷியாவை எதிரி என்ற பிம்பத்தை உருவாக்க வேண்டாம்.
எதார்த்தத்தை சமாளிக்க வேண்டும் என நாங்கள் எப்போதும் நம்புகிறோம். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியில் உள்ளனர். தலிபான் அரசுடன் நாங்கள் உறவுகளை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு புதின் கூறினார்.
2003-ம் ஆண்டு தலிபான்களை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என ரஷியா அறிவித்தது. தற்போது ரஷியா இந்த நிலைமாற்றத்தில் மனம் மாறி உள்ளது.
கடந்த வாரம் ரஷியா வெளியுறவு துறை மந்திரி செர்ஜிலால் ரோஸ் கூறும் போது தலிபான்களை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு மாஸ்கோ திட்டமிட்டுள்ளது என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவிடம் 172 அணு ஆயுதங்கள் இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
- சீனா ஜனவரி 2024-ன்படி 500 வரை உயர்த்தியுள்ளதாக தகவல் SIPRI தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானை விட இந்தியாவிடம் அணு ஆயுதங்கள் அதிகமாக உள்ளது. அதேவேளையில் சீனா அணு ஆயுதங்களை அதிகரித்துள்ளது என ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) வெளியிட்ட தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் இரண்டு போர்களை பார்த்துள்ளது. ஒன்று உக்ரைன்- ரஷியா போர். மற்றொன்று இஸ்ரேல்- காசா போர். இதன் மூலமாக இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட அணு ஆயுங்களை கொண்ட 9 நாடுகள் அவர்களுடைய அணு ஆயுதங்களை நவீனப்படுத்த தொடங்கியுள்ளன எனத் தெரிவித்துள்ளது.
உலகளவில் உள்ள அணு ஆயுதங்களில் அமெரிக்கா மற்றும் ரஷியா ஆகிய இரண்டு நாடுகள் மட்டும் 90 சதவீதத்தை பெற்றுள்ளன. 2023-ல் மற்ற பல நாடுகள் புதிய அணு ஆயுதம் திறன் கொண்ட ஆயுதங்களை குவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மொத்தம் 2100 அணு ஆயுதங்களில் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் ரஷியாவிடம் இருப்பதாக நம்பப்படும் நிலையில், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் செலுத்தப்படும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தியா 172 அணுஆயுதங்கள் வைத்துள்ளதாகவும், 2024 ஜனவரி கணக்குப்படி இது பாகிஸ்தானைவிட எண்ணிக்கைளில் இரண்டு அதிகம் எனவும் தெரிவித்துள்ளது. 2023 இந்தியா- பாகிஸ்தான் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் சிஸ்டத்தை முன்னேற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அணு ஆயுதத்தை தடுப்பதில் பாகிஸ்தான் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. அதேவேளையில் சீனா முழுவதும் இலக்குகளை அடையும் திறன் கொண்ட நீண்ட தூர ஆயுதங்களுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
சீனா மற்ற நாடுகளை விட அதிகவேகமாக அணுஆயுதங்களை வேகப்படுத்து வருவதாகவும், 2023-ல் 410 அணுஆயுதங்கள் வைத்திருக்கும் நிலையில், 2024 ஜனவரி நிலவரப்படி அதை 500 ஆக உயர்த்தாகவும் தெரிவித்துள்ளது.
- நமக்கும் நமது நேச நாடுகளுக்கும் உருவாகியுள்ள புதிய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
- 1,572 அணு ஆயுதங்கள் ஏவுகணைகளில் பொருத்தப்பட்டு முக்கிய இடங்களில் எந்நேரமும் தாக்குதலுக்கு தயார் நிலையில் உள்ளன
2022 ஆம் ஆண்டு தொடங்கிய ரஷிய உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளைக் கடந்த நீடித்து வருகிறது. மேற்கு நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் சேர உக்ரைன் முயற்சித்ததால் தங்களுக்கு ஆபத்து என்று கூறி ரஷியா இந்த போரை துவங்கியது. ரஷியா பக்கம் வட கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் இருக்கின்றன. போரில் உக்ரைனுக்கு பக்க பலமாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுத மற்றும் பொருளாதார ரீதியாக உக்ரைனுக்கு உதவி வருகிறது. உக்ரைனுக்கு பிரிட்டன் ஸ்டார்ம் ஷேடோ என்ற அதிநவீன ஏவுகணைகளை வழங்கியுள்ளது. இதை ரஷியா மீது உக்ரைன் பய்னபடுத்தும்பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு புதின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில்தான் இந்த ஒட்டுமொத்த போரானது எந்நேரமும் மூன்றாம் உலகப் போருக்கு இட்டுச் செல்லும் என்று நிலவி வரும் அச்சத்துக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் ரஷிய அதிபர் புதின் முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று தொலைக்காட்சி வாயிலாக பேசிய புதின், அதிகரித்து வரும் சர்வதேச பாதுகாப்பு அச்சறுத்தல் காரணமாக ரஷியாவின் அணு ஆயுதங்கள் பயன்பாடு [பயன்படுத்தாமல் இருப்பது உள்ளிட்ட கொள்கைகளில்] திருத்தங்களைக் கொண்டுவர வேண்டியுள்ளது.
சர்வதேச ராணுவ மற்றும் அரசியல் சூழல் தொடர்ச்சியாக மாறி வருகிறது, அதற்கு ஏற்ற முடிவுகளை நாம் எடுத்தாக வேண்டும். நமக்கும் நமது நேச நாடுகளுக்கும் உருவாகியுள்ள புதிய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் ரஷிய ராணுவ தளபதிகளுடனான கூட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள நாடுகள் உக்ரைனுக்கு உதவி வருவதால் உக்ரைன் ரஷியாவை எதிர்ப்பது என்பது உக்ரைன் வழியாக அதற்கு உதவும் அணு ஆயுத நேரடியாக ரஷியாவை எதிர்ப்பதாகக் கருதப்படும். எனவே தாங்களும் தங்களின் அணு ஆயுதங்களை உபயோகிக்கும் நிர்பந்தம் ஏற்படலாம் என்ற வகையில் புதின் பேசியுள்ளது மேற்கத்திய நாடுகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் உள்ள மொத்த அணு ஆயுதங்களில், 8-0 சதவீதம், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் உள்ளன. ரஷியாவிடம் மட்டுமே 6,732 அணு ஆயுதங்கள் உள்ளன. இதில், 1,572 அணு ஆயுதங்கள் ஏவுகணைகளில் பொருத்தப்பட்டு முக்கிய இடங்களில் எந்நேரமும் தாக்குதலுக்கு தயார் நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
- டேல்கான் 2 [Taleghan 2 ] ஆராய்ச்சி கூடம் இஸ்ரேல் தாக்குதலில் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.
- ஒரு அணு ஆயுத்ததில் யுரேனியத்தை சுற்றி உள்ள பிளாஸ்டிக் எக்ஸ்புளோசிவ்ஸ் குண்டை வெடிக்கச் செய்ய முக்கியமாக தேவைப்படும் பொருள்.
அக்டோபர் 26 தாக்குதல்
காசா போருக்கு எதிராக இஸ்ரேல் மீது கடந்த 1 ஆம் தேதி சுமார் 180 ஏவுகணைகளை ஏவி ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்க காத்திருந்த இஸ்ரேல் சுமார் 25 நாட்கள் கழித்து கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
100 க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய F-35 'Adir' ஸ்டெல்த் ஃபைட்டர்கள் விமானங்கள் 2000 கிலோமீட்டர்கள் பயணித்து ஈரான் வான் பரப்புக்குள் நுழைந்து மூன்று கட்டங்களாக குண்டு மழை பொழிந்தன. இந்த தாக்குதலால் தங்களுக்கு அதிக பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று ஈரான் தெரிவித்திருந்தது.

பார்சின் மிலிட்டரி காம்பிளக்ஸ்
ஆனால் ஈரானில் உள்ள ரகசிய அணு ஆயுத ஆராய்ச்சி தளம் கடந்த மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தகர்க்கப்பட்டதாக 3 அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரான் படு ரகசியமாக வைத்திருக்கும் பார்சின் மிலிட்டரி காம்பிளக்ஸ் [Parchin military complex] அணு ஆயுத ஆராய்ச்சித் தளத்தில் உள்ள டேல்கான் 2 [Taleghan 2 ] ஆராய்ச்சி கூடம் இஸ்ரேல் தாக்குதலில் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆராய்ச்சி
முன்னதாக தனது அணு ஆயுத ஆராய்ச்சிகளை வெளியுலகில் ஈரான் மறுத்து வந்த நிலையில் இந்த டேல்கான் 2 கூடம் செயல்படாமல் இருந்ததாக கருதப்பட்டது. கடந்த 2003 ஆம் ஆண்டில் ஈரான் தனது அணு ஆயுத ஆராய்ச்சி திடமான அமாட் நியூக்கிலியர் புரோகிராமில் இந்த டேல்கான் 2 ஒரு அங்கமாக இருந்தது.
ஆனால் செயலிழந்ததாக நம்பப்பட்ட இந்த டேல்கான் 2 தளத்தில் கடந்த ஆண்டு முதல் மீண்டும் ஈரான் ஆராய்ச்சிகளை தொடங்கியதாக அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உளவு அமைப்புகள் தெரிவித்திருந்தன. இந்த நிலையில்தான் இந்த தளம் இஸ்ரேல் தாக்குதலில் தகர்க்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேல்கான் 2
அணு ஆயுதத்தில் உள்ள யுரேனியத்தை சுற்றி அமைக்கப்படும் பிளாஸ்டிக் எக்ஸ்புளோசிவ்ஸ் வெடிமருந்துகள் அணுகுண்டை வெடிக்கச் செய்ய முக்கியமாக தேவைப்படும் பொருள் ஆகும். இந்த பிளாஸ்டிக் எக்ஸ்புளோசிவ்ஸ் தயாரிக்க பயன்பட்ட சாதனம் இஸ்ரேல் கடந்த மாதம் நடத்திய தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் ஈரானின் அணு ஆயுத ஆராய்ச்சியில் பின்னடைவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- நேற்றுடன் போர் 1000 வது நாளை எட்டிய நிலையில் ரஷியா மீது உக்ரைன் நீண்ட தூரம் சென்று தாக்கும் பால்சிடிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
- ஜோ பைடன் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் இன்னொரு உலகப் போரை துவக்க பார்க்கிறார் என்றும் ரஷியா தெரிவித்தது.
உக்ரைன் போர்
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் ரஷியாவின் அண்டை நாடான உக்ரைன் முயற்சி மேற்கொண்டது. இதனால் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு மேற்கு நாடுகளால் அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி ரஷியா கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுத்தது.
1000 வது நாள்
நேற்றுடன் போர் 1000 வது நாளை எட்டிய நிலையில் ரஷியா மீது உக்ரைன் நீண்ட தூரம் சென்று தாக்கும் பால்சிடிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்கா வழங்கிய இந்த ATACMS பால்சிடிக் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு கட்டுப்பாடு இருந்த நிலையில் அதை ஜோ பைடன் தளர்த்திய நிலையில் நேற்றைய தினம் ரஷியா மீது முதல் முறையாக பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.

Bryansk
நேற்று இரவு ரஷியாவின் பிரையன்ஸ்க் [Bryansk] பகுதியில் இருந்த ராணுவக் கிடங்கை தங்களின் ஏவுகணை தாக்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை குறித்து பேசியுள்ள ரஷிய பாதுகாப்பு அமைச்சகம், அமெரிக்காவால் வழங்கப்பட்ட 5 ATACMS ஏவுகணைகள் ரஷியாவின் பிரையன்ஸ்க் [Bryansk] வான்பகுதிக்குள் வந்ததாகவும் அவற்றை தாங்கள் அழித்ததாகவும், அதில் ஒரு ஏவுகணையின் சேதமடைந்த பாகங்கள் ராணுவ தளவாடம் அருகே விழுந்து தீ விபத்து ஏற்பட்டதாகவும் இதில் எந்த உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

உலகப் போர்
முன்னதாக உக்ரைன் பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்கா உத்தரவிட்டிருப்பது மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என்றும் ஜோ பைடன் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் இன்னொரு உலகப் போரை துவக்க பார்க்கிறார் என்றும் ரஷியா தெரிவித்தது. மேலும், உக்ரைனுக்கு இந்த அனுமதியை அளித்ததன் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் நேரடியாக தங்களுடன் மோதுவதாக ரஷியா கருதும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே போர் தொடங்கி நேற்றைய 1000 வது நாளில் ரஷிய அதிபர் புதின் அணு ஆயுத பயன்பாட்டு கட்டுப்பாடுகளை தளர்த்தி கொள்கைகளில் மாற்றம் செய்துள்ளார்.

அணு ஆயுத கொள்கை
இந்த கொள்கைப்படி, அணு ஆயுதம் கொண்ட ஒரு நாடு, ரஷியாவின் மீது ஏதேனும் ஒரு வகையில் தாக்குதல் நடத்தினால் கூட, அதற்கு அணு ஆயுதங்கள் மூலம் பதிலடி கொடுக்க இந்த புதிய கொள்கை வழிவகை செய்கிறது.
இந்த உத்தரவுக்கு வெளிவந்த அதே நாளிலேயே உக்ரைன் பாலிஸ்டிக் தாக்குதல் நடத்தி ரஷியாவை சீண்டியுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதன்படி ரஷியா அணு ஆயுத்தங்களை பயன்படுத்தினால் அது மனித குல வரலாற்றின் மீது மேலும் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.