search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அணு ஆயுதங்கள்"

    • இந்தியாவிடம் 172 அணு ஆயுதங்கள் இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
    • சீனா ஜனவரி 2024-ன்படி 500 வரை உயர்த்தியுள்ளதாக தகவல் SIPRI தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தானை விட இந்தியாவிடம் அணு ஆயுதங்கள் அதிகமாக உள்ளது. அதேவேளையில் சீனா அணு ஆயுதங்களை அதிகரித்துள்ளது என ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) வெளியிட்ட தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

    கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் இரண்டு போர்களை பார்த்துள்ளது. ஒன்று உக்ரைன்- ரஷியா போர். மற்றொன்று இஸ்ரேல்- காசா போர். இதன் மூலமாக இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட அணு ஆயுங்களை கொண்ட 9 நாடுகள் அவர்களுடைய அணு ஆயுதங்களை நவீனப்படுத்த தொடங்கியுள்ளன எனத் தெரிவித்துள்ளது.

    உலகளவில் உள்ள அணு ஆயுதங்களில் அமெரிக்கா மற்றும் ரஷியா ஆகிய இரண்டு நாடுகள் மட்டும் 90 சதவீதத்தை பெற்றுள்ளன. 2023-ல் மற்ற பல நாடுகள் புதிய அணு ஆயுதம் திறன் கொண்ட ஆயுதங்களை குவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    மொத்தம் 2100 அணு ஆயுதங்களில் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் ரஷியாவிடம் இருப்பதாக நம்பப்படும் நிலையில், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் செலுத்தப்படும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்தியா 172 அணுஆயுதங்கள் வைத்துள்ளதாகவும், 2024 ஜனவரி கணக்குப்படி இது பாகிஸ்தானைவிட எண்ணிக்கைளில் இரண்டு அதிகம் எனவும் தெரிவித்துள்ளது. 2023 இந்தியா- பாகிஸ்தான் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் சிஸ்டத்தை முன்னேற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளது.

    இந்தியாவின் அணு ஆயுதத்தை தடுப்பதில் பாகிஸ்தான் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. அதேவேளையில் சீனா முழுவதும் இலக்குகளை அடையும் திறன் கொண்ட நீண்ட தூர ஆயுதங்களுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.

    சீனா மற்ற நாடுகளை விட அதிகவேகமாக அணுஆயுதங்களை வேகப்படுத்து வருவதாகவும், 2023-ல் 410 அணுஆயுதங்கள் வைத்திருக்கும் நிலையில், 2024 ஜனவரி நிலவரப்படி அதை 500 ஆக உயர்த்தாகவும் தெரிவித்துள்ளது.

    • ரஷியாவை எதிரி என்ற பிம்பத்தை உருவாக்க வேண்டாம்.
    • தலிபான் அரசுடன் நாங்கள் உறவுகளை உருவாக்க வேண்டும்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கி 2 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்த போரில் பொதுமக்கள், வீரர்கள் பலர் கொல்லப்பட்டாலும் இன்னும் சண்டை முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி,இங்கிலாந்து போன்ற சில ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. ஆயுத உதவியும் செய்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ரஷியா மீது உக்ரைன் திடீர் தாக்குதல் நடத்தியது.

    இதில் ஜெர்மனி நாட்டு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரஷியா மீது தாக்குதல் நடத்த ஜெர்மனியின் ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்தி இருப்பது ஆபத்தான நடவடிக்கை ஆகும். மேற்கு நாடுகளை தாக்க நீண்ட தொலைவு சென்று தாக்கக்கூடிய ஆயுதங்களை வேறு சில நாடுகளுக்கு ரஷியா வழங்கும்.

    எங்களுடைய நாட்டின் இயைாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிய வந்தால் ரஷியா தன்னை தற்காத்துக்கொள்ள அனைத்து வழிகளையும் பின்பற்றும். அணு ஆயுதங்களை பயன் படுத்தவும் தயாராக இருக்கிறோம். ரஷியாவை எதிரி என்ற பிம்பத்தை உருவாக்க வேண்டாம்.

    எதார்த்தத்தை சமாளிக்க வேண்டும் என நாங்கள் எப்போதும் நம்புகிறோம். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியில் உள்ளனர். தலிபான் அரசுடன் நாங்கள் உறவுகளை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு புதின் கூறினார்.

    2003-ம் ஆண்டு தலிபான்களை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என ரஷியா அறிவித்தது. தற்போது ரஷியா இந்த நிலைமாற்றத்தில் மனம் மாறி உள்ளது.

    கடந்த வாரம் ரஷியா வெளியுறவு துறை மந்திரி செர்ஜிலால் ரோஸ் கூறும் போது தலிபான்களை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு மாஸ்கோ திட்டமிட்டுள்ளது என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×