search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "High Speed ​​Rail Production"

    • 2 ரெயில்களும் 8 பெட்டிகளை கொண்டதாக இருக்கும்.
    • 2 ரெயிலை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவது இதுவே முதல்முறை.

    சென்னை:

    சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலை ரெயில் பெட்டிகளை தயாரிப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது.

    1955-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேருவால் தொடங்கப்பட்ட இந்த ஐ.சி.எப். தொழிற்சாலையில் வந்தே பாரத் ரெயில் உள்பட பல்வேறு ரெயில் பெட்டிகள் தயாரிக் கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் 2024-2025-ம் ஆண்டுக்கான ரெயில் பெட்டிகள் தயா ரிப்பு பணியில் ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலை முக்கிய பங்காற்ற உள்ளது. இதுவரை இல்லாத வகையில் மிகவும் அதிவே கத்தில் செல்லும் 2 ரெயில்கள் அங்கு தயாரிக்கப்பட உள்ளன.

    மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரெயில்களை தயாரிப்பது தொடர்பாக கடந்த 4-ந் தேதி மத்திய ரெயில்வே அமைச்சகம் சார்பில் ஐ.சி.எப். தொழிற்சாலைக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

    இதை தொடர்ந்து புதிய அதிவேக ரெயில்கள் இரண்டையும் தயாரிப்பதற் கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலின் வேகம் 180 கி.மீ. ஆகும் புதிதாக தயாரிக்கப்பட உள்ள 250 கி.மீ.வேகம் கொண்ட 2 அதிவேக ரெயில்களும் தயாரிக் கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் அதுவே அதிவேக ரெயிலாக இருக்கும்.

    இந்த 2 ரெயில்களும் 8 பெட்டிகளை கொண்டதாக இருக்கும்.

    மத்திய ரெயில்வே அமைச்சகம் இவ்வளவு அதிவேகத்தில் செல்லும் 2 ரெயிலை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவது இதுவே முதல்முறை என்றும் பணிகள் முடிந்து ரெயில் இயக்கப்பட்டால் அது புதிய மைல் கல்லாக இருக்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    ×