என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமெடியன்"

    • காமெடியன் மேடையில் பலதரப்பட்ட விஷயங்களைப் பேசியபடி பார்வையாளர்களை சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார்
    • தான் சிரிப்பூட்டவே விரும்பியதாகவும், அது உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள் என்றும் அல்பெர்டோவிடம் வேண்டியுள்ளார்

    ஸ்பெயினில் உள்ள அளிகாண்டே நகரில் நேற்று இரவு நடந்த ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியின்போது மேடையில் ஏறி காமெடியனின் முகத்தில் நபர் ஒருவர் குத்து விட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜேமி கரவாகா என்ற ஸ்டான்ட் அப் காமெடியன் மேடையில் பலதரப்பட்ட விஷயங்களைப் பேசியபடி பார்வையாளர்களை சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார்.

    அந்த நிகழ்ச்சியில் ஆல்பர்டோ புகிலட்டோ என்ற இசைக்கலைஞரும் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு இடையில், காமெடி செய்வதாக நினைத்துக்கொண்டு ஆல்பர்டோவின் 3 மாத குழந்தை குறித்து கோபமூட்டும் வகையில், பாலியல் ரீதியாக குறிப்பிட்டு காமெடியன் ஜேமி பேசத் தொடங்கியுள்ளார்.

     

    இதனால் ஆத்திரமடைந்த ஆல்பர்டோ நேராக விறுவிறு என மேடைக்கு சென்று காமெடியன் ஜேமியின் முகத்தில் ஒரு குத்து வைத்து அவரை நிலைகுலையச் செய்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    இதனைத்தொடர்ந்து ஜேமி தனது சமூக வலைதள பக்கத்தில், தான் சிரிப்பூட்டவே விரும்பியதாகவும், அது உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள் என்றும் அல்பெர்டோவிடம் வேண்டியுள்ளார். இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆல்பெர்ட்டோ ஜேமியின் மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எனவே தான் கடைசி போட்டியில் அவர் விலகிக்கொண்டார் என்று கருத இடமிருக்கிறது
    • ஏனெனில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவது என்பது எளிமையாக இருக்காது.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் நிறைவடைந்துள்ளது. இதில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. மோசமான பார்ம் காரணமாக இதன் கடைசி போட்டியில் ரோகித் தானாக விலகிய நிலையில், பும்ரா கேப்டன் ஆனார்.

    முன்னதாக இந்த தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால் ரோகித் தலைமையில் விளையாடிய அதற்கடுத்த 3 போட்டிகளில் 2-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் ஆனது. ரோகித் சர்மா சுமாராக விளையாடியதுதான் அதற்கு முக்கிய காரணமாக என்று கூறப்படுகிறது. எனவே தான் கடைசி போட்டியில் அவர் விலகிக்கொண்டார் என்று கருத இடமிருக்கிறது

    மேலும் முடிந்தவுடன் அவர் ஓய்வு அறிவிப்பார் என்ற யூகங்களும் எழுந்தன. ஆனால், கடைசி போட்டியில் இருந்து மட்டுமே விலகியுள்ளேன் என்றும் இப்போதைக்கு ஓய்வை பெறப்போவதில்லை என்றும் ரோகித் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் ரோகித் சர்மாவின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான சைமன் கேட்டிச் கருத்து ஒன்றை கூறியுள்ளார்.

    அதாவது, ரோகித் சர்மா இன்னும் ரன்கள் எடுக்கும் பசியுடன்தான் விளையாடப் போகிறாரா? என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். ஏனெனில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவது என்பது எளிமையாக இருக்காது.

     

    இங்கிலாந்து அணியிலும் சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்கள் வந்துள்ளனர். கஸ் அட்கின்சன் மற்றும் பிரைடன் கார்ஸ்ஆகியோர் சிறப்பாக பந்து வீசுபவர்கள்.

    எனவே என்னை பொறுத்தவரை ரோகித் சர்மா தொடர்ந்து விளையாட முடிவு செய்தால் அது நிச்சயம் அவரது கெரியரிலேயே கடினமான தொடராக அது அமையலாம்.

    என்னைக் கேட்டால், ரோகித் சர்மா பேசுவதை வைத்து பார்க்கும்போது அவர் ஓய்வுபெற்ற பிறகு ஸ்டாண்ட் அப் காமெடியனாக மாறலாம் என்று அட்வைஸ் செய்துள்ளார்

    ×