search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "37 மந்திரிகள்"

    • 18 போ் மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவா்கள்.
    • 72 போ் மந்திரிசபையில் இடம்பெற்று உள்ளனா்.

    பிரதமா் மோடி தலைமையிலான புதிய அரசில், முந்தைய மந்திரிகள் 37 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

    ஸ்மிருதி இரானி, அனுராக் தாக்கூா், அா்ஜுன் முண்டா, பா்சோத்தம் ரூபாலா, ஆா்.கே.சிங், மகேந்திர நாத் பாண்டே, அஸ்வின் செளபே, சாத்வி நிரஞ்சன் ஜோதி, சஞ்சீவ் பல்யான், ராஜீவ் சந்திரசேகா், நிஷித் பிரமாணிக், பிரதிமா பெளமிக், மீனாட்சி லேகி உள்பட 37 பேருக்கு மீண்டும் மந்திரி பதவி அளிக்கப்படவில்லை. இவா்களில் 18 போ் மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவா்கள்.

    தோ்தலில் தோல்வியுற்றபோதும், மத்திய மந்திரியாக மீண்டும் நியமனம் பெற்ற ஒரே நபா் எல்.முருகன் ஆவாா். இவா், ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக உள்ளாா். புதிய மந்திரிசபையில் நிா்மலா சீதாராமன், அன்னபூா்ணா தேவி, ஷோபா கரந்தலஜே, ரக் ஷா கட்சே, சாவித்ரி தாக்கூா், நிமுபென் பம்பானியா, அனுப்ரியா படேல் ஆகிய 7 பெண் மந்திரிகள் இடம்பெற்றுள்ளனா்.

    முந்தைய மந்திரிசபையில் 10 பெண் மந்திரிகள் இடம்பெற்றிருந்தனா். முன்பு மந்திரிகளாக இருந்த ஸ்மிருதி இரானி, பாரதி பிரவீண் பவாா், சாத்வி நிரஞ்சன் ஜோதி, தா்ஷணா ஜாா்டோஷ், மீனாட்சி லேகி, பிரதிமா பெளமிக் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    புதிய மந்திரிசபையில் முன்னாள் முதல்வா்களான சிவராஜ் சிங் சவுகான் (ம.பி.), மனோகா் லால் கட்டா (அரியாணா), எச்.டி.குமாரசாமி (கா்நாடகம்) உள்பட 33 போ் புதுமுகங்களாவா்.

    மத்திய அரசில் அனுமதிக்கப்பட்ட மொத்த மந்திரிகளின் எண்ணிக்கை 81. தற்போது பிரதமருடன் சோ்த்து 72 போ் மந்திரிசபையில் இடம்பெற்று உள்ளனா். எனவே, இன்னும் 9 மந்திரிகள் வரை பதவியேற்க முடியும்.

    ×