search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கம்ரன் அக்மல்"

    • பாபர் அசாம் கேப்டனாக இருந்த போது அணியில் சில சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தனர்.
    • சுழற்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து விளையாடவில்லை என்றால் அவர்கள் எப்படி முன்னேற முடியும்.

    கராச்சி:

    சமீபத்தில் உள்நாட்டில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்டிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தோல்வி அடைந்து தொடரையும் இழந்தது. வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தான் தோற்றது இதுவே முதல் முறையாகும். பாகிஸ்தான் அணியின் செயல்பாடு குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரன் அக்மல் கூறுகையில், 'சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்காமல் சொந்த மண்ணில் நடக்கும் தொடரை வெல்ல முடியாது. கடந்த 3-4 ஆண்டுகளாக, பாகிஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் கிரிக்கெட் வாரியம் சுழற்பந்து வீச்சாளர்களை உருவாக்குவதில் பொறுமையாக இருப்பதில்லை.

    பாபர் அசாம் கேப்டனாக இருந்த போது அணியில் சில சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படவில்லை. சுழற்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து விளையாடவில்லை என்றால் அவர்கள் எப்படி முன்னேற முடியும்.

    ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடிய போதும், சுழற்பந்து வீச்சாளர்களால் தான் அங்கு டெஸ்ட் போட்டிகளை வென்றோம். கடந்த காலத்தில் இருந்த வேகப்பந்து வீச்சாளர்கள் போல் வலிமையான வேகப்பந்து வீச்சாளர்கள் தற்போது இல்லை.

    இருப்பினும் அவர்கள் தொடரை கைப்பற்றி தருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். கடந்த வாரம் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரே அதற்கு சான்று' என்றார்.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
    • முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கம்ரான் அக்மலை வன்மையாக கண்டித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

    இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரான கம்ரன் அக்மல் டி20 போட்டி நடக்கும் போது நேரலை நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரரான அர்ஷ்தீப் சிங்கை ஒரு சீக்கியர் என்பதால் அவரை அவதூராக பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கம்ரான் அக்மலை வன்மையாக கண்டித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அதில் "நீங்கள் சீக்கியர்களை பற்றி விமர்சிக்கும் பொழுது அவர்களை பற்றியும் அவர்களது வரலாற்றை பற்றியும் தெரிந்துக் கொண்டு பேசுங்கள். உங்களின் தாய்மார்கள் மற்றும் சகோதிரிகள் கடத்தப்பட்ட போது நேரம் காலம் பார்க்காமல் சீக்கியர்கள் காப்பாற்றினார்கள். அதனால் பேசும் பொழுது வார்த்தையை பார்த்து பேசுங்கள். உங்களை நினைக்கும் போது வெட்க கேடாக இருக்கிறது," என்று பதிவு செய்துள்ளார்.

    இதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு கம்ரன் அக்மல் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "நான் சமீபத்தில் சொன்ன கருத்தை நினைத்து வேதனை அடைகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். என்னுடைய வார்த்தை மரியாதை தக்கதல்ல. எனக்கும் உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. நான் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் அவ்வாறு பேசவில்லை," என கூறியிருக்கிறார்.

    ×