search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிஷப் கீவர்கீஸ் கூரிலோஸ்"

    • பாதிரியார்களில் கூட முட்டாள்கள் இருக்கலாம் என தெரிகிறது.
    • கேரளாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கேரளாவில் ஆளும் இடது சாரி கட்சிகள் பெரும் தோல்வியை சந்தித்தது. மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே இந்த கூட்டணி வெற்றி பெற்றது.

    மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த போதிலும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது இடதுசாரி கட்சி தலைவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தோல்விக்கு முதல்-மந்திரி பினராய் விஜயன் பொறுப்பேற்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

    யாக்கோ படை சிரியன் திருச்சபையின் முன்னாள் பிஷப் கீவர்கீஸ் கூரிலோஸ், இந்த தோல்வியில் இருந்து இடதுசாரிகள் பாடம் கற்க வேண்டும். இல்லாவிட்டால், மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவில் ஏற்பட்ட நிலை கட்சிக்கு ஏற்படும் என்று கூறினார்.

    2018-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கொரோனா காலத்தில் திறம்பட செயலாற்றியதால் தான் 2021-ம் ஆண்டு மாநிலத்தில் இடது சாரி ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தது என்று கூறிய அவர், எப்போதும் வெள்ளம் மற்றும் தொற்று நோய்கள் உதவ முடியாது என்றும் தெரிவித்தார். அவரது கருத்துக்கு முதல்-மந்திரி பினராய் விஜயன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

    கேரளாவில் இடதுசாரி ஆட்சிக்கு வந்ததற்கு காரணம் என்று முன்னாள் பிஷப் வெளியிட்ட அறிக்கையை நான் பார்க்க நேர்ந்தது. இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், பாதிரியார்களில் கூட முட்டாள்கள் இருக்கலாம் என தெரிகிறது என்றார். அவரது இந்த கருத்துக்கு கேரளாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    பினராய் விஜயன் இது போன்ற கருத்துக்களை அவ்வப்போது கூறுவதுண்டு. கட்சி அல்லது அரசை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாதவர் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

    கேரள எதிர்க்கட்சி தலைவர் சதீசன் (காங்கிரஸ்) கூறுகையில், பினராய் விஜயன் விமர்சனங்களை சகித்துக் கொள்ள வேண்டும். அவர் தனது கட்சிக்குள்ளோ அல்லது வெளியேவோ எந்த விமர்சனத்தையும் பொறுத்துக் கொள்ள மாட்டார் என்பதற்கு இது ஓரு எடுத்துக்காட்டு என்றார்.

    ×