என் மலர்
நீங்கள் தேடியது "வெப்பம் அதிகரிப்பு"
- இந்தியாவில் பல மாநிலங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது.
- வடமாநிலங்களில் வருகிற 18-ந்தேதி வரை வெப்ப அலை வீசும்.
தமிழகத்தில் வரும் 18ம் தேதி வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் அதிகட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. குறிப்பாக, வேலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்சமாக 104 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
இந்தநிலையில், தமிழகத்தில் மேலும் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், இந்தியாவில் பல மாநிலங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. மேலும் வெப்ப அலையும் வீசுகிறது.
நேற்று அதிகபட்சமாக ராஜஸ்தானில் 111 டிகிரி வெயில் அடித்தது. இந்த நிலையில் டெல்லி மற்றும் வடமாநிலங்களில் வருகிற 18-ந்தேதி வரை வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- சென்னை மீனம்பாக்கத்தில் 101.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
- நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று 10 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. இதில், அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து, ஈரோடு, சேலத்தில் 101.12 டிகிரி ஃபாரன்ஹீட், டிகிரி, கரூர் பரமத்தி, திருப்பத்தூரில் 102.2 டிகிரி வெப்பம் பதிவாகியுளளது.
திருச்சியில் 100.22 டிகிரி, திருத்தணியில் 100.4 டிகிரி, தருமபுரி, மதுரையில் 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் 101.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
புவனேஸ்வர்:
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நேற்று முன் தினம் அதிகபட்ச வெப்ப நிலை 39 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது. இந்த வாரம்முழுவதும் ஒடிசாவில் வெப்ப நிலைவழக்கத்தை விட 4.5 டிகிரி செல்சியஸ் முதல் 6.4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு கோடையில் இந்தியாவிலும் ஆசியாவின் பல்வேறு பகுதிகளிலும் வழக்கத்துக்கு மாறான அதிக வெப்பத்தை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். மனிதனால் உந்தப்பட்ட பருவநிலை மாற்றமே இதற்கு காரணம் என விஞ்ஞானிகள் கூறு கின்றனர்.
நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் வரும் நாட்களில் தொடர்ந்து அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியின் சில இடங்களில் இம்மாதம் அதிகபட்ச வெப்ப நிலை 49.9 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது.
ஒடிசாவில் வெப்ப அலை காரணமாக கடந்த 3 நாட்களில் 8 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு நேற்று முன்தினம் தெரிவித்தது.
இதுகுறித்து மாநில பேரிடர் நிவாரண மையம் மேலும் கூறியிருப்பதாவது:-
ஒடிசாவில் இந்த ஆண்டு கோடை காலத்தில் 159 பேரின் உயிரிழப்புக்கு வெப்ப அலை காரணமாக இருக்க லாம் என சந்தேகிக்கப்படு கிறது. 41 பேர் இறப்புக்கு கோடை வெப்பமே காரணம் என உறுதி செய்யப்பட்டு உள்ளது. 72 பேரின் மரணத்திற்கு வெப்ப அலைதான் காரணமா என மாவட்ட அளவில் விசாரணையில் உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.