search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் மயக்கம்"

    • பொதுப்பணித்துறை சார்பில் அப்பகுதியில் உள்ள கழிவறைகளுக்கு இலவசமாக இந்த டிராப் பொருத்தப்பட்டது.
    • ரெட்டியார் பாளையம் கம்பன்நகர் பஸ்நிறுத்தம் எதிரே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார்பாளையம் புதுநகர் 4-வது குறுக்கு தெருவில் கடந்த மாதம் 11-ந் தேதி பாதாள சாக்கடை மேன்ஹோலில் உருவான விஷவாயு கழிவறை வழியாக வெளியேறியது.

    இதில் அந்த பகுதியை சேர்ந்த செல்வராணி(16), செந்தாமரை(80), அவரின் மகள் காமாட்சி(45) ஆகிய 3 பேர் பரிதாபமாக இறந்தனர். கனகன் ஏரியில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சரிவர இயங்காத தால்தான் விஷவாயு உருவானதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

    பாதாள சாக்கடையுடன் இணைப்பு கொடுத்த இடத்தில் வாட்டர் சீல் பி-டிராப் பொருத்தாததால்தான் விஷவாயு தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுப்பணித்துறை சார்பில் அப்பகுதியில் உள்ள கழிவறைகளுக்கு இலவசமாக இந்த டிராப் பொருத்தப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக புதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் துர்நாற்றம் வீசியது. நேற்று மாலை துர்நாற்றம் நெடி அதிகரித்தது. இதனால் புதுநகர், மூகாம்பிகை நகர் பகுதி மக்கள் அச்சமடைந்து உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்தனர். சிலர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சென்று விசாரித்தனர்.

    மின்தடையால் பணி நடைபெறவில்லை. எனவே துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்தனர். துர்நாற்றம் தாங்க முடியாமல் நேற்று இரவு 8 மணிக்கு அப்பகுதி மக்கள் முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் ரெட்டியார் பாளையம் கம்பன்நகர் பஸ்நிறுத்தம் எதிரே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    சிவசங்கரன் எம்.எல்.ஏ, பொதுப்பணித்துறை அதிகாரிகளோடுஅங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இரவு 9.30 மணியை தாண்டியும் மறியல் நடந்தது. மறியல் காரணமாக வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால் இரவு 10 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது. சுமார் 2 மணி நேரம் பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    • வருவாய்த்துறை மூலம் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
    • 4-வது தெருவில் உள்ள மேன்ஹோல்கள் வழியாகத்தான் விஷ வாயு பரவியது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ரெட்டியார் பாளையம் புதுநகரில் நேற்று முன்தினம் கழிவறையில் இருந்து விஷ வாயு பரவியது.

    விஷ வாயு பரவியதால் புதுநகர் 4-வது தெருவில் வசிக்கும் செந்தாமரை, அவரின் மகள் காமாட்சி மற்றும் பள்ளி மாணவி செல்வராணி ஆகிய 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தனர். மேலும் 2 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அந்த பகுதி மக்கள் வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். அப்பகுதியில் வீடுகளில் உள்ள கழிவறைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப பள்ளி அருகே தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    வருவாய்த்துறை மூலம் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். மேலும், அந்த பகுதியின் இறுதியில் கனகன் ஏரி கரையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

    4-வது தெருவில் உள்ள மேன்ஹோல்கள் வழியாகத்தான் விஷ வாயு பரவியது. இதனால் பொதுப்பணித் துறையினர் மேன்ஹோல்கள் மூடிகளை அகற்றியுள்ளனர். வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குழாய்களை சீரமைக்கும் பணியும் தொடங்கியுள்ளது.

    இந்த நிலையில் இன்று அதிகாலையில் 4-வது தெருவில் வசிக்கும் புஷ்ப ராணி (வயது38) கழிவறைக்கு சென்றபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.

    அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மக்கள் திரண்டு நிற்கின்றனர். போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் புதுநகர் பகுதியில் உள்ள 2 பள்ளிகளுக்கு வரும் 17-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ×