search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்யக் கோல்டு நிறுவனம்"

    • நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ்குந்த்ரா உள்ளிட்ட சிலர் சத்யக் கோல்டு என்ற நிறுவனத்தை 2014-ம் ஆண்டு தொடங்கினர்.
    • சத்யக் கோல்டு நிறுவனத்தில் ரூ.90 லட்சம் முதலீடு செய்தேன்.

    மும்பை:

    மும்பையை சேர்ந்த நகை வியாபாரி பிரிதிவிராஜ் கோதாரி செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார். மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

    நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ்குந்த்ரா உள்ளிட்ட சிலர் சத்யக் கோல்டு என்ற நிறுவனத்தை 2014-ம் ஆண்டு தொடங்கினர். அவர்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் குறைந்த விலைக்கு தங்கம் பெறலாம் என கூறினர்.

    இதை நம்பி நான் அவர்களது நிறுவனத்தில் ரூ.90 லட்சம் முதலீடு செய்தேன். ஆனால் அவர்கள் சொன்னது போல தங்கமும் தராமல், எனது பணத்தையும் திருப்பி தராமல் மோசடியில் ஈடுபட்டனர். மோசடியில் ஈடுபட்ட நடிகை ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா உள்ளிட்டவர்கள் மீது பி.கே.சி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கை நீதிபதி என்.பி. மேத்தா விசாரித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கூறினார். எனவே அவர் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் உள்ளிட்டவர்கள் மீதான மோசடி புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க பி.கே.சி. போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    ×