search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "E.K நாயனார்"

    • வெற்றியின் முக்கியத்துவம் கருதி எம்.பி சுரேஷ் கோபிக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் பதிவி வழங்கப்பட்டுள்ளது.
    • கேரள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள் குறித்தும் தனது பார்வையை வெளிப்படுத்தியுள்ளார்.

    இந்தியாவில் நடந்து முடித்த பாராளுன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமயிலான என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்று 3 வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றுள்ளார். அவருடன் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 72 அமைச்சர்களும் பதவியேற்றனர். கூட்டணியை தவிர்த்து இந்த தேர்தலில் மொத்தம் 240 இடங்களில் பாஜக வென்றுள்ளது.

    தென் மாநிலங்களில் பாஜகவுக்கு அதிக வரவேற்பு இல்லாத நிலையில் கம்ம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக விளங்கும் கேரளாவில் முதல்முறையாக பாஜக 1 இடத்தில் வெற்றிபெற்றுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. திருச்சூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கிய பிரபல கேரள நடிகர் சுரேஷ் கோபி எதிர்த்து நின்ற கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் வேட்ப்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று பாஜகவின் முதல் வெற்றியை கேரளாவில் பதிவு செய்தார்.

    இந்த வெற்றியின் முக்கியத்துவம் கருதி எம்.பி சுரேஷ் கோபிக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் பதிவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று கேரளாவில் செய்தியளர்களை சந்தித்த சுரேஷ் கோபி, மறைந்த காங்கிரஸ் தலைவரும் இந்தியாவின் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி குறித்தும், கேரள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள் குறித்தும் தனது பார்வையை வெளிப்படுத்தியுள்ளார்.

    செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இந்தியாவின் அன்னையாக விளங்குகிறார் என்று புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் கேரளாவின் முன்னாள் முதல்வருமான கருணாகரன் மிகவும் தைரியமான ஒரு தலைவரும் நிர்வாகியுமாவார். மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் E.K. நாயனாரும் கருணாகரனும் தனது அரசியல் குருக்கள் என்று சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். ஆலப்புழாவில் கருணாகாரனின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு சுரேஷ் கோபி செய்தியாளர்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

     

     

    இதற்கிடையில் மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி மீது இன்றளவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வைத்து சர்சையைக் கிளப்பி வரும் நிலையில் பாஜக சார்பில் அமைச்சராகியுள்ள சுரேஷ் கோபி இந்திரா காந்தியை இந்தியாவின் அன்னை என்று புகழ்ந்துள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

     

    ×