search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்ரிநாத் நெடுஞ்சாலை"

    • பத்ரிநாத் நெடுஞ்சாலை அமைந்துள்ள பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
    • இதனால் பத்ரிநாத் செல்லும் பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

    டேராடூன்:

    வட மாநிலங்களில் தொடர் கனமழை மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் தவித்து வருகின்றனர். மழை மற்றும் வெள்ளத்திற்கு மேலும் பலர் பலியாகி 75க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

    விளைநிலங்கள் மழை நீரில் மூழ்கிக் கிடப்பதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கரையோர பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

    இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் பத்ரிநாத் செல்லும் பாதை உள்பட பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

    ஜோஷிமத் நகரத்திற்கு 1 கிலோ மீட்டர் முன் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதன்மூலம் பத்ரிநாத் செல்லும் பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இது சுமார் 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இமயமலைக்குச் செல்லும் ஒரே சாலையாகும்.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், இன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் குறித்த நேரத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நாளை காலைக்குள் நெடுஞ்சாலைகள் மீண்டும் திறக்கப்படும். சாலைகளைச் சுத்தம் செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என தெரிவித்தனர்.

    • சுற்றுலா வேன் அல்க்நந்தா ஆற்றுப்பகுதியில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
    • இந்த விபத்தில் 12 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

    புதுடெல்லி:

    உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் என்ற இடத்தில் சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த சுற்றுலா வேனில் பத்ரிநாத் கோவிலுக்கு 17 பேர் சென்றனர்.

    அலக்நந்தா ஆற்றுப்பகுதியில் சுற்றுலா வேன் சென்றபோது பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 12 பக்தர்கள் உயிரிழந்தனர். மற்றவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், காயமடைந்த பக்தர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், உத்தரகாண்டில் வேன் கவிழ்ந்த விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    மேலும் விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும். காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

    ×