search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபான ஆலை"

    • தினசரி பள்ளி பேருந்தில் மதுபான உரிமையாளரால் அழைத்து செல்லப்படுகின்றனர்.
    • தினமும் 12- 14 மணிநேரம் வேலை செய்தனர்.

    மத்தியப் பிரதேசம் மாநிலம் ரைசென் மாவட்டத்தில் உள்ள மதுபான தொழிற்சாலையில் இருந்து 39 சிறுவர்கள் மற்றும் 19 சிறுமிகள் மீட்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    சோம் டிஸ்டில்லரீஸ் & ப்ரூவரீஸ் என்பது பீர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானம் மற்றும் ஆர்டிடி (குடிக்கத் தயார்) பானங்களைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்களின் ஐஎஸ்ஓ-சான்றளிக்கப்பட்ட குழுவாகும்.

    பச்பன் பச்சாவ் அந்தோலன் (பிபிஏ) என்றும் அழைக்கப்படும் தன்னார்வ நடவடிக்கை சங்கத்துடன் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) இணைந்து சோம் என்கிற மதுபான ஆலையில் சோதனை மேற்கொண்டது.

    என்சிபிசிஆர் தலைவர் பிரியங்க் கனூங்கோ தலைமையிலான குழு, மதுபான ஆலையில் இருந்து 58 குழந்தைகள், 19 பெண்கள் மற்றும் 39 ஆண் குழந்தைகளை மீட்டதாக பிபிஏ தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து மேலும் கூறுகையில், "கடுமையான ரசாயனங்கள் மற்றும் மதுவின் தயாரிப்பால் குழந்தைகளின் கைகளில் தீக்காயங்கள் உள்ளன. அவர்கள் தினசரி பள்ளி பேருந்தில் மதுபான உரிமையாளரால் அழைத்து செல்லப்படுகின்றனர். தினமும் 12- 14 மணிநேரம் வேலை செய்தனர்.

    இதுகுறித்து 'எக்ஸ்' பதிவில், முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில்," தொழிற்சாலையில் நடந்த சோதனை தீவிரமான விஷயம். தொழிலாளர், கலால் மற்றும் காவல் துறைகளில் இருந்து விரிவான தகவல்கள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

    ×