search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீல்டிங் பயிற்சியாளர்"

    • இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார்.
    • அதை தொடர்ந்து பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியது.

    டி20 உலகக் கோப்பை தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. அதனை தொடர்ந்து கவுதம் கம்பீரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார்.

    இதனையடுத்து பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியது. அவர் கொல்கத்தா அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டார். இதனை தொடர்ந்து பந்து வீச்சு, பீல்டிங் பயிற்சியாளர்கள் யார் என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை.

    ஆனால் பந்து வீச்சு பயிற்சியாளராக எல்.பாலாஜி, ஜாகீர் கான், வினய் குமார் ஆகியோரது பெயர் பரிசீலனையில் உள்ளது. இதில் முன்னாள் வீரர்கள் ஜாகீர் கான் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியது. இருந்தாலும் கவுதம் கம்பீர் வினய் குமாரை பவுலிங் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என பிசிசிஐயிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.

    இந்நிலையில் கம்பீர், பீல்டிங் பயிற்சியாளராக ரியான் டென் டோஸ்கேட்டை நியமிக்க பிசிசிஐ-யை வலியுறுத்தி உள்ளார். அவர் முன்னாள் நெதர்லாந்து அணியின் வீரரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளரும் ஆவார்.

    இது அனைத்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டால், கம்பீரின் உதவியாளராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்தவர்கள் அப்படியே இந்திய அணியில் இணைவார்கள்.

    • இந்திய அணியின் கவுதம் கம்பீர் நியமன அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
    • இதனிடையே தனக்கான பயிற்சியாளர் குழுவை கவுதம் கம்பீர் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மும்பை:

    டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. ஏற்கனவே அடுத்த பயிற்சியாளருக்கான தேடலில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. அதில் கவுதம் கம்பீர், ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது.

    குறிப்பாக கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே கவுதம் கம்பீர் பேசி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அரசியலில் இருந்து விலகிய கவுதம் கம்பீர், கேகேஆர் அணியின் ஆலோசகராக பணியாற்றி முதல் சீசனிலேயே கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

    இந்த நிலையில் இந்திய அணியின் கவுதம் கம்பீர் நியமன அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனிடையே தனக்கான பயிற்சியாளர் குழுவை கவுதம் கம்பீர் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்கள் குழுவை கவுதம் கம்பீர் தேர்வு செய்து வருகிறார்.

    அந்த வகையில் பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப்புக்கு பதிலாக தென் ஆப்பிரிக்கா ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் கொண்டு வரப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே லக்னோ அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் பணியாற்றிய போது, அதே லக்னோ அணியில் பீல்டிங் பயிற்சியாளராக இருந்தவர் ஜான்டி ரோட்ஸ்.

    அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் மும்பை, பஞ்சாப், லக்னோ உள்ளிட்ட பல்வேறு அணிகளுக்கும் பீல்டிங் பயிற்சியாளராக இருந்துள்ளார். இதனால் கவுதம் கம்பீர் குழுவில் ஜான்டி ரோட்ஸ் இடம்பெறுவதற்காக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ×