search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக பா.ஜ.க."

    • சர்வதேச அரசியல் படிப்புக்காக வெளிநாடு பயணம்.
    • தனியாக ரகசிய ஆய்வும் செய்துள்ளது.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வருகிற செப்டம்பர் மாதம் லண்டன் செல்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச அரசியல் படிப்புக்காக இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர்.

    இதற்காக லண்டன் செல்லும் அண்ணாமலை 6 மாதங்கள் அங்கேயே தங்கி இருப்பார். இந்த 6 மாதங்களும் தலைவர் இல்லாமல் இருந்தால் கட்சி பணி தொய்வடையும் என்று கருதுகிறார்கள்.

    இந்த நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை டாக்டர் தமிழிசை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது என்ன பேசினார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.

    ஆனால் புதிய தலைவரை நியமிப்பது பற்றி டெல்லி மேலிடம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

    ஆனால் அண்ணாமலை ஆதரவாளர்கள் இதை மறுத்தனர். ஏற்கனவே இதேபோல் அண்ணாமலை 3 மாதம் லண்டன் சென்றிருந்தார். அப்போது புது தலைவர் நியமிக்கப்படவில்லை. எனவே அண்ணாமலைக்கு பதிலாக புதிய தலைவரை நியமிப்பது சாத்தியமில்லை என்கிறார்கள்.

    ஆனால் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதது கட்சி மேலிடத்தை யோசிக்க வைத்துள்ளது. தோல்விக்கான காரணங்கள் குறித்து தமிழக பா.ஜ.க. தலைமையிடமும் அறிக்கை பெற்றுள்ளது. தனியாக ரகசிய ஆய்வும் செய்துள்ளது.

    அதன் அடிப்படையில் கட்சியை பலப்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் நாடு முழுவதும் ௧௦-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கவர்னர்கள் பதவி காலியாக உள்ளது. அது தொடர்பாகவும் பல தலைவர்கள் பெயர்களை டெல்லி மேலிடம் பரிசீலிக்கிறது. தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதா கிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோர் கவர்னர்களாக இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் கூடுதலாக யாருக்காவது கவர்னர் பதவி வழங்கப்படுமா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

    • தேர்தல் முடிவில் பா.ஜ.க. ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.
    • அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜனதா 23 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 19 தொகுதிகளில் பா.ஜனதா வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிட்டார்கள்.

    கூட்டணி கட்சிகளை சேர்ந்த 4 பேர் தாமரை சின்னத்தில போட்டியிட்டார்கள்.

    இந்த தேர்தலில் தமிழகத்தில் காலூன்ற பா.ஜ.க. 2 ஆண்டுகளுக்கு முன்பே வியூகம் அமைத்து பணியாற்றியது.

    குறிப்பாக சில தொகுதிகளை தேர்வு செய்து தனிகவனம் செலுத்தி தேர்தல் பணியாற்றியது. பா.ஜ.க.வின் வெற்றி கணக்கு தமிழகத்தில் இருந்து தொடங்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

    கள நிலவரங்களை ஆய்வு செய்து கூட்டணி கட்சிகள் உள்பட 5 முதல் 10 தொகுதிகள் வரை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என்று உறுதியாக நம்பினார்கள்.

    குறிப்பாக மத்திய மந்திரி எல்.முருகன், முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், மாநில தலைவர் அண்ணாமலை, ராம.சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், பொன் பாலகணபதி உள்ளிட்டவர்களை கட்சி மேலிடம் நட்சத்திர வேட்பாளர்களாக நம்பியது.

    ஆனால் தேர்தல் முடிவில் பா.ஜ.க. ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. இது பா.ஜனதா தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    கூட்டணி பலமின்மை, தேர்தலின்போது சில தொகுதிகளில் தேர்தல் செலவினத்தில் நடந்த முறைகேடுகள் போன்ற சில முக்கிய காரணங்களை தோல்விக்கான அடிப்படை காரணங்களாக கூறினார்கள்.

    இது ஒருபக்கம் இருந்தாலும் முதல் முறை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபோது தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை இருந்தது. ஆனாலும் அப்போது பா.ஜ.க. பெற்ற வாக்கு சதவீதத்தைவிட இந்த தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.

    இதற்கான காரணங்களை டெல்லி மேலிடமும் எதிர்பார்க்கிறது. இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. மையக்குழு கூட்டம் நாளை (புதன்) காலையில் கமலாலயத்தில் கூடுகிறது. கூட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார். மத்திய மந்திரி எல்.முருகன், பொன்.கேசவ விநாயகம், ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மையக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் கட்சியின் தோல்விக்கான காரணங்கள் பற்றியும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் விரிவாக ஆலோசிக்கிறார்கள். 

    ×