என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜன் சுராஜ் கட்சி"

    • நான் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எதுவும் கூறவில்லை என தெரிவித்திருந்தார்.
    • இனிமேல் எந்தக் கட்சி எத்தனை இடங்களைப் பெறும் என சீட் எண்ணிக்கை குறித்து பேசமாட்டேன் என்றார்.

    பாட்னா:

    நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. கடைசி கட்ட தேர்தலுக்கு பிறகு கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன அதில் பா.ஜ.க. மீண்டும் 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என கூறப்பட்டது.

    பிரபல அரசியல் ஆலோசகரும், வியூகங்கள் வகுத்துக் கொடுப்பவருமான பிரசாந்த் கிஷோர் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி 300 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். பாராளுமன்ற தேர்தலில் 100 தொகுதிகளுக்கு மேல் காங்கிரசால் வெற்றி பெறமுடியாது. காங்கிரசால் 3 இலக்க எண்களில் வெற்றி பெறமுடியாது. நான் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எதுவும் கூறவில்லை என தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டன. இதில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 290-க்கும் மேற்பட்ட இடங்களில் பெற்றி வெற்றது. இதில் பா.ஜ.க. மட்டும் 240 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டி பெறமுடியாமல் போனது. காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றது.

    இதுதொடர்பாக கிஷோர் கூறுகையில், பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்த எனது கணிப்பு தவறாகிவிட்டது. பா.ஜ.க.வுக்கு 300 சீட்கள் வரை கிடைக்கும் என நாங்கள் கணித்தோம். ஒரு தேர்தல் வியூக நிபுணராக நான் எண்ணிக்கை குறித்து பேசியிருக்கக் கூடாது. இனிமேல் எந்தக் கட்சி எத்தனை இடங்களைப் பெறும் என சீட் எண்ணிக்கை குறித்து பேச மாட்டேன் என தெரிவித்தார்.

    இந்நிலையில், வரும் அக்டோபர் 2-ம் தேதி தனது ஜன் சுராஜ் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள பீகார் சட்டசபை தேர்தலில் களமிறங்க பிரசாந்த் கிஷோர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    • தேர்வை ரத்துசெய்து புதிய தேர்வு நடத்தவேண்டும் என கோரிக்கை எழுந்தது.
    • ஆனால் இந்தக் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்வுசெய்ய டிசம்பர் 13-ம் தேதி தேர்வு நடைபெற்றது.

    இந்தத் தேர்வில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை, வினாத்தாள் கசிந்தது என தேர்வர்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள்மீது போலீசார் தடியடி நடத்தினர். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மாநில அரசு மறுத்தது. இந்தத் தேர்வை ரத்து செய்து புதிதாக தேர்வு நடத்தவேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து, கடந்த 3 நாளுக்கு முன் முதல் மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான அரசுக்கு பிரசாந்த் கிஷோர் 48 மணி நேரம் கெடு விதித்திருந்தார். ஆனால் அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை.

    இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பிரசாந்த் கிஷோர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

    அப்போது அவர் கூறுகையில், டிசம்பர் 13-ல் நடந்த தேர்வை ரத்துசெய்து புதிதாக தேர்வு நடத்தவேண்டும் என்பதே எங்களது ஆரம்ப கட்ட கோரிக்கை. தேர்வு மூலம் நிரப்பவேண்டிய தேர்வை விற்பனை செய்துள்ளதாகக் கேள்விப்பட்டேன். அத்தகைய ஊழல் அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

    ×