search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாதநீர் பிரச்சனை"

    • தசை சோர்வு, அதிக தூக்கம், நினைவாற்றல் குறைவு காணப்படும்.
    • மரபணு தொடர்புகள் இப்பிரச்சினையை வளர்ப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.

    வாதநீர் பிரச்சினை இல்லாமல், எப்போதும் உடல் வலி, சோர்வு இருந்தால் அது தசை வாதம் எனப்படும் பைப்ரோமயால்ஜியா நோயாக இருக்கும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோர்வு, உடல் வலி, தசை சோர்வு, அதிக தூக்கம், நினைவாற்றல் குறைவு காணப்படும்.

    காரணங்கள்:

    1. மூளை மற்றும் முள்ளந்தண்டுவடத்தில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள், வலி மற்றும் வலியற்ற சமிக்ஞைகளை மிகைப்படுத்தலாம்.

    2. மரபணு தொடர்புகள் இப்பிரச்சினையை வளர்ப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.

    3. நோய்த்தொற்றுகள் சில நேரங்களில் பிரச்சினையை தூண்டும் அல்லது மோசமாக்கும்.

    4. சில நேரங்களில் காயங்கள், விபத்து போன்ற உடல்ரீதியான நிகழ்வுகளால் தூண்டப்படலாம். நீடித்த உளவியல் அழுத்தமும் இந்த நிலையைத் தூண்டலாம்.

    சித்த மருத்துவ தீர்வுகள்:

    சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    1) அமுக்கரா சூரணம் 1 கிராம், ஆறுமுகச்செந்தூரம் 200 மில்லிகிராம், சிவனார் அமிர்தம் 200 மில்லிகிராம், முத்துச்சிப்பி பற்பம் 200 மில்லிகிராம், குங்கிலிய பற்பம் 200 மில்லிகிராம் இவைகளை தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட வேண்டும்.

    2) அமுக்கரா லேகியம் 5 கிராம் வீதம் இரு வேளை சாப்பிட வேண்டும்.

    3) வலியுள்ள இடத்தில் சிவப்பு குங்கிலிய தைலம், கற்பூராதி தைலம் கலந்து மெதுவாக தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும்.

    4) வைட்டமின் டி குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பால், முட்டை, பாதாம், பிஸ்தா, முருங்கை கீரை, பாலக் கீரை, வால்நட் இவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    5) உடற்பயிற்சி தவறாமல் செய்ய வேண்டும், மனச்சோர்வு நீங்க இறை பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    ×