என் மலர்
நீங்கள் தேடியது "அடக்குமுறை"
- சிறையில் உள்ள அவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது
- அந்நாட்டின் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க மக்களைத் தூண்டியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஈரானில் கடந்த 1979 ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின் அந்நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் அமல்படுத்தத்தப்பட்டு பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இதை எதிர்த்து அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது எதிர்ப்புக்குரல் எழுந்து வந்தது. அப்படி அரசின் அடிப்படைவாதத்தை எதிரித்து குரல் கொடுத்துவந்தவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பெண்கள் ஹிஜாப் அணிய நிர்பந்திக்கப்படுவதற்கு எதிராகவும் அந்நாட்டின் மரண தண்டனைக்கு எதிராகவும் போராடிவந்த பெண் பத்திரிகையாளரும் சமூக செயல்பாட்டாளருமான நர்கிஸ் முகமதி கடந்த 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உள்ள அவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது உலக அளவில் பேசுபொருளானது. பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து போராடி வருவதால் சிறையில் உள்ள அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. எனவே ஈரான் அரசு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில்தான் நர்கிஸ் முகமதி அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்த குற்றத்திற்காக 1 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டின் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க மக்களைத் தூண்டியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 3 வருடங்களில் 6 முறை அவர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு இதுவரை மொத்தமாக 16 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடந்த விசாரணையில் அவருக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்ட நிலையில் தற்போது மேலும் 1 வருடம் சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது.
சமீப காலங்களாக பெண்களின் ஆடை விஷயத்தில் மிகவும் கடுமை காட்டி வரும் ஈரான் அரசு பொது இடங்களில் சிசிடிவி கண்கணிப்பு மூலமும் எந்நேரமும் தீவரமாக கண்காணித்து வருகிறது . இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் சிறையில் இருந்து நர்கிஸ் வெளியிட்ட வீடியோவில் பெண்களுக்கு எதிரான தீவிரமான போரை இரான் அரசு முன்னெடுத்து நடத்தி வருகிறது என்று தெரிவித்திருந்தார்.

முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஹிஜாப் அணியாத காரணத்தால் இளம்பெண் போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் ஹிஜாபுக்கு எதிரான கிளர்ச்சி மிகப்பெரிய அளவில் வெடித்தது. இருப்பினும் போராட்டக்காரர்கள் மீது கடுமையான அடக்குறையை பிரயோகப்படுத்தி ஈரான் அடிப்படைவாத அரசு கிளார்ச்சியைக் கட்டுக்குள் கொண்டுவந்தது குறிப்பிடத்தத்க்கது.

- சேனல்கள் அல்லது நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை மறந்துவிடுங்கள், அவற்றைத் தேடுவது கூட குற்றமாகக் கருதப்படுகிறது.
- குழந்தைகள் மூன்று வகையான சிகை அலங்காரங்களில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
உலக நாடுகளில் இருந்து துண்டிக்கப்பட்டு தன்னந்தனியாக தனக்கென தனித்த சட்டதிட்டங்களுடன் சர்வாதிகார ஆட்சியின் கீழ் உள்ள நாடு வட கொரியா. கடந்த நூற்றாண்டு தொட்டு ஒற்றைக் குடும்ப ஆட்சியின் கீழ் வட கொரியா இயங்கி வருகிறது. அதன் தற்போதைய அதிபராக கிட்டத்தட்ட மன்னராகவே கிம் ஜாங் உன் உள்ளார்.
வடகொரியாவின் மக்களின் வாழ்க்கை நிலை குறித்து வெளியுலகிற்கு இன்னும் புதிரானதாகவே இருந்து வருகிறது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் மக்கள் தங்கள் அன்றாட வாழ்நாளை கடத்தவே மிகவும் சிரமப்படுகின்றனர் என்பது தென் கொரியா மற்றும் பிற உலக நாடுகளின் கூற்று.

அத்தகு அடக்குமுறைகளிலிருந்து யாரும் வெளிநாடுகளுக்கு தப்பிக்க முயன்று பிடிபட்டால் சித்திரவதைக்கும் கடுமையான தண்டனைக்கும் உள்ளாவார்கள். 1950களில் இருந்து குறைந்தது 30,000 வட கொரிய குடிமக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தப்பியோடியவர்களில் பெரும்பாலானவர்கள், தென் கொரியா, சீனா, ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் குடியேறினர்.
அவர்களில் ஒருவர் திமோதி சோ. இரண்டு முறை முயற்சித்த பிறகு திமோதி நாட்டை விட்டு தப்பிச் சென்று தற்போது இங்கிலாந்தில் மனித உரிமை ஆர்வலராகப் பணியாற்றுகிறார். வட கொரியாவில் மக்களின் வாழ்க்கை குறித்து சமீபத்தில் அவர், LADbible நிகழ்ச்சியில் பேசினார்.
அவர் கூறியதாவது, வட கொரியாவில் ஒருவர் டிவி வாங்கினால், ஒரு அரசு அதிகாரி அவரது வீட்டிற்கு வந்து, அரசு நிகழ்ச்சிகளை மட்டுமே பார்க்கிறாரா என்று சரிபார்க்கிறார்.
வீட்டில் நிறுவப்பட்ட அனைத்து ஆண்டெனாக்களும் அகற்றப்பட்டு, ஒரே ஒரு ஆண்டெனாவுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதன் மூலம் கிம் ஜாங் உன்னின் பிரச்சாரத்தை மட்டுமே அரசாங்க சேனலில் காண முடியும். வேறு எந்த சேனலையும் யாராவது பார்க்க முயற்சித்தால், அவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

வட கொரியாவில் அரசாங்க பிரச்சாரம் தொடர்பான நிகழ்ச்சிகளை மட்டுமே குடிமக்கள் பார்க்க முடியும் என்ற கடுமையான விதி உள்ளது. வேறொரு நாட்டின் சேனல்கள் அல்லது நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை மறந்துவிடுங்கள், அவற்றைத் தேடுவது கூட குற்றமாகக் கருதப்படுகிறது.
இந்த விதியை யாராவது மீறினால், அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். சில சமயங்களில் அவர்கள் கடுமையான சித்திரவதைகளையும் சந்திக்க நேரிடும். வட கொரியாவில் மக்கள் தங்கள் விருப்பப்படி முடியை வெட்டக் கூட அனுமதிக்கப்படுவதில்லை.
பள்ளி செல்லும் குழந்தைகள் மூன்று வகையான சிகை அலங்காரங்களில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அங்குள்ள முடி திருத்துபவர்கள் கூட வேறு எந்த வகையான சிகை அலங்காரத்தையும் வெட்டத் துணிவதில்லை.

அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஸ்டைலிலிருந்து வேறுபட்ட ஸ்டைலில் சிறுவர்கள் தலைமுடியை வெட்டினால், அவர்களது பெற்றோரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து வாக்குமூலம் பதிவுசெய்வார்கள்.
பல நேரங்களில் மக்கள் தங்கள் தலைமுடி காரணமாக கடுமையான சித்திரவதைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இத்தகைய விதிகள் காரணமாக, அங்குள்ள மக்கள் எப்போதும் அடக்குமுறை மற்றும் பயத்தின் சூழலில் வாழ்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தவுடன் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற காத்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.