search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீ ஹயக்ரீவர்"

    • அவதாரங்களில் ஆதியில் வெளிப்பட்டது ‘ஹயக்ரீவ அவதாரம்’ என்று சொல்லப்படுகிறது.
    • திருமால் எடுத்த முக்கியமான அவதாரமாக ‘ஹயக்ரீவர்’ அவதாரம் பார்க்கப்படுகிறது.

    மகாவிஷ்ணுவின் தசாவதாரம் என்று போற்றப்படும் 10 அவதாரங்களில் முதன்மையானதாக மச்ச அவதாரம் இருந்தாலும், திருமால் எடுத்த அவதாரங்களில் ஆதியில் வெளிப்பட்டது 'ஹயக்ரீவ அவதாரம்' என்று சொல்லப்படுகிறது.

    பிரம்மதேவனிடம் இருந்த வேதங்களை, மது- கைடபர் என்னும் இரண்டு அசுரர்கள் திருடிச் சென்று விட்டனர். அதனை மீட்பதற்காக, திருமால் எடுத்த முக்கியமான அவதாரமாக 'ஹயக்ரீவர்' அவதாரம் பார்க்கப்படுகிறது.


    வேதங்கள், சாஸ்திரங்கள், அறுபத்து நான்கு கலைகள் போன்ற அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குபவர், ஹயக்ரீவர். சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, வியாசர், சுப்பிரமணியர், விநாயகர் ஆகியோரை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.

    ஆனால் அவர்களுக்கு அந்த தகுதியானது, கல்விக்கு அதிபதியாக, ஆதாரமாக விளங்கும் ஹயக்ரீவரின் அனுக்கிரகத்தால் கிடைத்தது என்கின்றன புராணங்கள்.

    ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில், பவுர்ணமி திதியில் அவதரித்தவர், ஹயக்ரீவர். அவரது பெருமைகளை எடுத்துரைக்காத வேதம், உபநிடதம், கல்பம், புராணம் என்று எதுவும் கிடையாது. அனைத்துமே அவரது புகழ்பாடுகின்றன.

    ஹயக்ரீவர் எப்போதும் தனியாக இருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவது அரிதுதான். அவர், தனது மனைவியாக லட்சுமிதேவியை மடியில் அமர வைத்து 'லட்சுமி ஹயக்ரீவர்' தோற்றத்தில்தான் பெரும்பாலான ஆலயங்களில் தரிசனம் தந்து கொண்டிருக்கிறார்.

    • வேதங்கள் இல்லாததால் பிரம்மாவால் தன்னுடைய படைப்புத் தொழிலைத் தொடர முடியவில்லை.
    • பிரம்மா பகவானிடம் முறையிட்டார்.

    யுகங்கள் ஆரம்பிக்கும் முன்பாக ஸ்ரீமந் நாராயணனின் நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மா படைக்கப்பட்டார், லகங்களையும், உயிர்களையும் தோற்றுவிக்கவே இவர் படைக்கப்பட்டார்.

    அதன்படி வேதங்களின் உதவியுடன் தன் படைப்பு வேலையைச் செய்த வந்தார்.

    பிரம்மா நல்லவர்களையும், தீயவர்களையும் தோற்றுவித்தார், நல்ல குணம் உடைய தேவர்கள், தீய குண்ட கொண்ட அசுரர்களுக்குத் தொல்லையாகத் தோன்றினர்.

    எனவே பிரம்மா இனி தேவர்களைப் படைக்கக் கூடாது என்பதற்காக மது, கைடபர் என்ற இரண்டு அசுரர்கள் வேதங்களை பிரம்மாவிடம் இருந்து அபகரித்துச் சென்று விட்டனர்.

    வேதங்கள் இல்லாததால் பிரம்மாவால் தன்னுடைய படைப்புத் தொழிலைத் தொடர முடியவில்லை.

    பிரம்மா பகவானிடம் முறையிட்டார்.

    பகவான் விஷ்ணு, ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் ஸ்ரீஹயக்ரிவராக அவதாரம் செய்து வேதங்களை அசுரர்களிடம் இருந்து மீட்டு, பிரம்மாவிடம் கொடுத்து படைப்பு தொழிலை தொடரச் செய்தார்.

    சகலவல்லியான ஸ்ரீ சரஸ்வதி தேவிக்கு எல்லா வேதங்களையும், வித்தைகளையும், கல்விச் செல்வங்களையும் ஸ்ரீ ஹயக்ரிவரே அளித்து அருளினார்.

    கல்வியில் வெற்றி பெற மாணவ-மாணவிகள் ஸ்ரீ ஹயக்ரிவ பகவானை தினமும் வேண்டிக் கொண்டு சுவாமி தேசிகனின் கீழ்க்கண்ட துதியைச் சொல்லி வர வேண்டும்.

    "ஞாநாநந்த மயம் தேவம் நிர்மலஸ்படிகாக்ருதிம்

    ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரிவம் உபாஸ்மஹே"

    ×