search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஷியா ராணுவம்"

    • போரில் குழந்தைகள் பெண்கள் உள்பட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • கட்டிடத்தில் பலர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    கார்கிவ்:

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கி 2½ ஆண்டுகளை கடந்து விட்டது. இந்த போரில் குழந்தைகள் பெண்கள் உள்பட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீண்டு கொண்டே வருகிறது.

    இந்த நிலையில் வடகிழக்கு உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷியா வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் அங்குள்ள பல மாடி குடியிருப்பு கட்டிடத்தில் வெடிகுண்டுகளை வீசியது. இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் குழந்தைகள் உட்பட 40 பேர் படுகாயமடைந்தனர்.

    அந்த கட்டிடத்தின் 9 மற்றும் 12 வது தளங்களுக்கு இடையில் தீ கொழுந்து விட்டு எரிகிறது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். கட்டிடத்தில் பலர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதையடுத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷியாவின் ராணுவ விமான தாக்குதல்களில் இருந்து உக்ரைனைப் பாதுகாக்க உலக நாடுகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    • உக்ரைனின் சில பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றியது.
    • ரஷியா-உக்ரைன் தலா 103 கைதிகளை பரிமாற்றம் செய்து கொண்டனர்.

    ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றியது.

    இதற்கிடையே ரஷியா-உக்ரைன் இடையே கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த நிலையில் ரஷியா-உக்ரைன் தலா 103 கைதிகளை பரிமாற்றம் செய்து கொண்டனர். 2022-ம் ஆண்டு கிழக்கு உக்ரைனில் உள்ள அசோவ்ஸ்டல் எக்கு ஆலையைக் கைப்பற்றியபோது பிடிபட்ட உக்ரைன் வீரர்கள் மற்றும் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் ராணுவத்தினர் ஊடுருவிய போது பிடிபட்ட வீரர்களை ரஷியா விடுவித்தது. அதேபோல் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைனில் சிக்கிய ரஷிய வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    • பின்லாந்து எல்லையில் ராணுவத் தளம் அமைத்து வீரர்களை குவித்து வைத்திருந்தது.
    • தற்போது உக்ரைன் மீது தாக்குதலை அதிகரித்துள்ளதால் பெரும்பாலான துருப்புகளை திருப்பியுள்ளது.

    அண்டை நாடான உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. இன்னும் சண்டை நடைபெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உக்ரைன் நேட்டோ படையில் சேர விருப்பம் தெரிவித்ததுதான். ஒருவேளை நேட்டோவில் இணைந்தால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களது படைகளை நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளில் நிலைநிறுத்த முடியும்.

    அப்படி செய்தால் ரஷியா நாட்டிற்கு அது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என புதின் கருதினார். இதனால் ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடித்து இரண்டு நாட்டிற்கும் இடையில் பாதுகாப்பு பகுதியாக வைத்துக் கொள்வதற்கான போர் தொடுத்ததாக கூறினார்.

    உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியா, பின்லாந்து எல்லையிலும் ராணுவ தளங்களை அமைத்து வீரர்களை குவித்திருந்தது. இதனால் தங்கள் மீதும் போர் தொடக்க வாய்ப்புள்ளதாக மற்றொரு அண்டை நாடான பின்லாந்து கருதியது.

    இதனால் பின்லாந்து கடந்த 2024-ம் ஏப்ரல் மாதம் நேட்டோவில் இணைய விண்ணப்பித்தது. இதன் காரணமாக பின்லாந்து எல்லையில் ரஷியா தனது படைகளை குவித்தது. ஆயுதங்களையும் பின்லாந்து எல்லையில் மறைத்து வைத்திருந்தது.

    இதனால் ஒரு பதற்றமான சூழ்நிலைதான் நிலவி வந்தது. இந்த நிலையில் தற்போது பின்லாந்து எல்லையில் குவிக்கப்பட்டிருந்த துருப்புகளில் 80 சதவீதத்தை உக்ரைன் நோக்கி நகர்த்தியுள்ளதாக பின்லாந்து புலானாய்வுத்துறை கூறியதாக அங்குள்ள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் உபகரணங்களையும் நகர்த்தியுள்ளது தெரியவந்துள்ளது.

    உக்ரைன் மீது தற்போது முழு வீச்சாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் வீரர்கள் தேவை என்பதால் நகர்த்தியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

    இதற்கிடையே கடந்த 2023-ல் பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்தது. ரஷியாவின் விமானங்கள் அடிக்கடி தங்களது வான் எல்லையில் தென்படுவதாக பின்னலாந்து அடிக்கடி குற்றம்சாட்டுவது குறிப்பிடத்தக்கது.

    ×