search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏடிஜிபி"

    • மது கடத்தல் தொடர்பாக ஆய்வு நடத்திய நிலையில் இன்றும் அதிரடி ஆய்வு.
    • கள்ளக்குறிச்சி எஸ்.பி.ரஜத் சதுர்வேதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.

    கல்வராயன் மலையில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    கல்வராயன் பகுதியில் உள்ள கச்சிராய பாளையம் காவல் நிலையத்தில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு செய்தார்.

    கடலூரில் நேற்று புதுச்சேரி எல்லைப் பகுதியில் மது கடத்தல் தொடர்பாக ஆய்வு நடத்திய நிலையில் இன்றும் அதிரடி ஆய்வு நடத்தப்பட்டது.

    கல்வராயன் மலையில் உள்ள சேராப்பட்டு, குரும்பலூர், சிறுகல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

    வடக்கு மண்டல ஐஜி அஸ்ட்ரா கார்க், கள்ளக்குறிச்சி எஸ்.பி.ரஜத் சதுர்வேதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.

    விஷச்சாராய சம்பவத்தை தொடர்ந்து கல்வராயன் மலையில் அதிரடிப்படை ஆய்வு நீடிக்கும் நிலையில் ஏடிஜிபி சோதனை செய்து வருகிறார்.

    • புதுச்சேரி மதுபான கடத்தலை கட்டுப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை.
    • கள்ளச் சாராயம், போதை பொருட்களை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை.

    கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆலோசனை நடத்தினார்.

    கடலூர் எஸ்.பி., அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

    3 மாவட்டத்திற்கும் சவாலாக உள்ள புதுச்சேரி மதுபான கடத்தலை கட்டுப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

    சட்டம்- ஒழுங்கு குறித்தும் கள்ளச் சாராயம், போதை பொருட்களை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    பொது மக்கள் மற்றும் புகார் கொடுக்க வருபவர்களிடம் காவல் துறையினர் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதலாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் வசம் ஒப்படைப்பு.
    • மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.பி., செந்தில் குமார் மாற்றம்.

    மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அதிரடியாக மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதலாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.பி., செந்தில் குமார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அவருக்கு பதிலாக, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.பியாக சென்னை கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கோபி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ×