search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடைத்தோ்தல்"

    • வேட்பு மனு தாக்கல் கடந்த 14-ந்தேதி தொடங்கியது.
    • இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்பு மனுதாக்கல் நிறைவு பெறுகிறது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி சட்டப் பேரவை தொகுதிக்கு, அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14-ந்தேதி தொடங்கியது.

    தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சைகள் என 17 போ் நேற்றுவரை மனுதாக்கல் செய்தனா்.

    இதைத் தொடா்ந்து, நாம் தமிழா் கட்சியின் வேட்பாளரான பொ.அபிநயா, நேற்று (வியாழக்கிழமை) காலை விக்கிரவாண்டி வட்டாட்சியரகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் மு.சந்திரசேகரி டம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தாா்.

    இதில், நாம் தமிழா் கட்சியின் தலைமை நிா்வாகிகள் ஜெகதீச பாண்டியன்,அன்பு, தென்னரசு, நாதன், திரைப் பட இயக்குநா் மு.களஞ்சியம் உள்ளிட்டோர் பங்கேற்றனா்.

    இதைத் தவிர, நாம் தமிழா் கட்சியின் மாற்று வேட்பாளரான அன்னியூா் நேதாஜி தெருவைச் சோ்ந்த நா.கலைச்செல்வி (33) உள்ளிட்ட 7 போ் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனா். இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்பு மனுதாக்கல் நிறைவு பெறுகிறது.

    விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தலுக்கான பாா்வையாளா்களை நியமித்து இந்திய தோ்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இது குறித்து, தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:-

    விக்கிரவாண்டி இடைத்தோ்தல் பொதுப் பாா்வையாளராக, ஐ.ஏ.எஸ். அதிகாரி அமித்சிங் பன்சல் நியமிக்கப்பட்டுள்ளாா். செலவின பாா்வையாளராக ஐ.ஆா்.எஸ். அதிகாரி மனீஷ் குமாா் மீனா, சட்டம்-ஒழுங்கு பாா்வையாளராக ஐ.பி.எஸ். அதிகாரி அஜய் குமாா் பாண்டே ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

    விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தலையொட்டி 1,324 போ் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ளனா். அந்தத் தொகுதியில் 9 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

    மேலும், வாக்குப் பதிவு அன்று வாக்காளா்களுக்கு எந்த விரலில் மை வைப்பது என்பது குறித்த விளக்கம் தோ்தல் ஆணையத்திடம் கேட்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×