என் மலர்
நீங்கள் தேடியது "பிரபு தேவா"
- எஸ்.ஜே.சீனு இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் முழுக்க முழுக்க டான்ஸை மையமாக வைத்து தயாராகி வரும் புதிய படம் ' பேட்ட ராப்'.
- பாலிவுட் நடிகை சன்னி லியோன் படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருக்கிறார்.
திரை இயக்குனர், நடிகர், நடன இயக்குனர் என பன்முகத்தன்மையோடு இந்திய சினிமாவில் இயங்கி வரும் பிரபுதேவா தமிழ் சினிமாவில் நடிகராக தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி வரிசையாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் கடைசியாக நடித்த பகீரா திரைப்படத்தில் நெகட்டிவ் சேட் கொண்டு பல கெட்டப்களில் மிரட்டியிருபார்.
தற்போது எஸ்.ஜே.சீனு இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் முழுக்க முழுக்க டான்ஸை மையமாக வைத்து தயாராகி வரும் புதிய படம் ' பேட்ட ராப்'. இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக வேதிகா நடித்துள்ளார். மேலும், பாலிவுட் நடிகை சன்னி லியோன் படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருக்கிறார். இப்படத்தில் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், மைம் கோபி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

பேட்ட ராப் படத்தில் சுமார் 10 பாடல்கள் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் பேட்டராப் படத்தின் டீசர் ஜூன் 21 வெளியாகும் படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள இந்த டீசரில் பாட்டு- அடி - ஆட்டம் - ரிப்பீட்டு என்ற வாசனகங்களுடன் பிரபுதேவாவின் கலர்ஃபுல் நடனம் இடம்பெற்றுள்ளது.


'பேட்ட ராப்' தவிர்த்து பிரபுதேவா நடிப்பில் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜாலியா ஜிம்கானா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை மடோனா செபாஸ்டியன் இணைந்துள்ளார். BEHINDWOODS தயாரிப்பில் பிரபுதேவா - ஏ.ஆர்.ரகுமான் 25 வருடங்களுக்கு பின் இணையும் 'மூன் வாக்' படமும் தயாராகி வருகிறது. மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'GOA'T திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
- படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும், நடன இயக்குநராகவும் வலம் வருபவர் பிரபு தேவா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியானது பகீரா திரைப்படம்.
இதனையடுத்து விஜய் நடிப்பில் வெளியான வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் புதிய திரைப்படம் தான் பேட்ட ராப். படத்தில் நாயகியாக வேதிகா நடித்துள்ளார்.
புளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில் இத்திரைப்படத்திற்கு டி இமான் இசை அமைத்துள்ளார். விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் டிரைலர் இன்று வெளியானது.
திரைத்துறையில் நடிகனாக ஆகவேண்டும் என கனவுடையவராக பிரபு தேவா கதாப்பாத்திரம் அமைந்துள்ளது. இதற்கிடையே நடக்கும் மோதல், காதல் , நடனம் நகைச்சுவை என டிரைலர் காட்சிகள் அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜாலியோ ஜிம்கானா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது.
- இப்படத்தில் கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார்.
பிரபு தேவா கடைசியாக நடித்து வெளியான பேட்ட ராப் திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. திரைப்படம் வணிக ரீதியாகவும் பெரிய வசூலை பெறவில்லை.
இதைத்தொடர்ந்து முசாசி, ஃபளாஷ் பேக், வுல்ஃப் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் நகைச்சுவை திரைப்படமான ஜாலியோ ஜிம்கானா திரைப்படத்தில் நடித்துள்ளார்.
படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது, படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது.
சக்தி சிதம்பரத்துடன் இணைந்து பிரபு தேவா மூன்றாம் முறை பணியாற்றியுள்ளார். இதற்கு முன் சார்லி சாப்லின்2002 , சார்லி சாப்லின்-2 2019 என்ற படங்களில் நடித்துள்ளார்.
இப்படத்தில் கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். இவருடன் அபிராமி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரோபோ சங்கர், சாய் தீனா, யாஷிகா ஆனந்த் மற்றும் மதுசுதன் நடித்துள்ளனர்.
இப்படத்தில் பிரபு தேவா படம் முழுக்க ஒரு பிணமாக நடித்துள்ளார், தென்காசியை சேர்ந்த குடும்பம் இந்த பிணத்தை கொடைக்கானலில் சேர்க்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனை அவர்கள் எவ்வாறு செய்தார்கள் என்பதை மிகவும் நகைச்சுவை நிறைந்த கதைக்களமாக இயக்கியுள்ளார்.
படத்தின் முதல் பாடலான `போலிஸ் காரனா காட்டிக்கிட்ட' பாடலின் லிரிக் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை நடிகை ஆண்டிரியா ஜெர்மியா பாடியுள்ளார். இப்பாடலின் வரிகளை சக்தி சிதம்பரம் எழுதியுள்ளார்.
படம் விரைவில் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடனப் புயல் பிரபுதேவாவின், பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சி, இந்தியாவில் முதல் முறையாக நடக்கவுள்ளது.
- பிப்ரவரி 22ஆம் தேதி சென்னையில் நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் பிரபுதேவாவின், பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சி, இந்தியாவில் முதல் முறையாக நடக்கவுள்ளது. மிக பிரபல நிறுவனமனா அருண் ஈவண்ட்ஸ் அருண் நடத்த V.M.R.ரமேஷ், திரு.G Star. உமாபதி மற்றும் ஜெய்சங்கர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
இந்த நடன நிகழ்ச்சி 2025 பிப்ரவரி 22ஆம் தேதி சென்னையில் நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடிகரும் இயக்குனருமான ஹரிகுமார் இந்த பிரம்மாண்டமான ஷோவை இயக்குகிறார்.
ஆர்ட் டைரக்டர் கிரண் கைவண்ணத்தில் பல்வேறு விதமான செட்டுகள் அமைக்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சிக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் டிக்கெட்களை அறிமுகப்படுத்தும் விழா, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
முன்னதாக iBa ( ஐபா) நிறுவனத்தின் ticket iBa என்ற இணையதளத்தை பிரபுதேவா துவக்கிவைத்து முதல் 25000 டிக்கெட்டுகளை iBa நிறுவனத்தின் திட்ட இயக்குனர் திரு.P.K அபி மன்னனிடம் வழங்கினார்.
இந்நிகழ்வினில் நடிகர் நடன கலைஞர் பிரபுதேவா பேசியதாவது..
இது மிக இனிமையான தருணம். அருண் ஈவண்ட்ஸ்க்கு என் முதல் நன்றி. நான் இப்படி ஒரு நிகழ்ச்சியை நினைத்துக் கூட பார்த்ததில்லை, அருண் ஈவண்ட்ஸ் முயற்சிதான். ஹரி இதற்கு ஒரு பேக்போனாக இருந்தார். இனி எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் தான். நீங்கள் சினிமா போல எதிர்பார்ப்பீர்கள். சினிமாவில் கட் பண்னி, கட் பண்ணி ஆடுவோம். இதில் அப்படி முடியாது தொடர்ந்து ஆட வேண்டும். அதற்காக தொடர்ந்து ரிகர்சல் செய்து வருகிறேன். உங்களை மகிழ்விக்க வேண்டும். அதற்காக 200 சதவீத உழைப்பை போட்டு வருகிறேன். கண்டிப்பாக உங்களை இந்த நிகழ்வு ஆச்சரியப்படுத்தும்.
எல்லோருக்கும் நன்றி.
நடன நிகழ்வின் இயக்குநர் ஹரிக்குமார் பேசியதாவது…
திரையில் 10 வருடம் கடந்தாலே பெரிய விசயம், 30, 40 வருசம் எல்லாம் இருப்பது ஆசிர்வாதம். அதிலும் கோரியொகிராஃபராக இருப்பதும், இப்போதும் ஆட தயாராக இருப்பதும் அதிசயம் தான். அவரோடு இத்தனை நாள் நான் இருக்கிறேன் என்பது எனக்கு பெருமை. இந்த நிகழ்வை ஆரம்பித்த கணத்தில் இருந்து இப்போது வரை, அதைப்பற்றி பேசிக்கொண்டே இருந்தார், ரிகர்சல் எடுத்து வருகிறார். இன்னும் பல விசயங்கள் இருக்கிறது. அருண் ஈவண்ட்ஸுக்கு மீண்டும் நன்றி. அனைவருக்கும் நன்றி,
அருண் ஈவண்ட்ஸ் சார்பில் அருண் பேசியதாவது…
நிறைய மியூசிக் கான்சர்ட் செய்துள்ளேன் ஆனால் டான்ஸ் ஷோ செய்ய வேண்டும் என ஆசை. அதை எப்படி சாத்தியமாக்கலாம் என யோசித்து வந்தேன். அந்த வாய்ப்பை வழங்கிய பிரபுதேவா மாஸ்டருக்கு நன்றி. இப்போதே 23000 டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்து விட்டது. ஓபன் கிரவுண்டில் 5.1 சவுண்ட் செய்துள்ளோம்: ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும். இந்த நிகழ்வுக்கு உறுதுணையாக வேல்ஸ் ஐசரி கணேஷ் சாருக்கு நன்றி. இந்த ஷோ கண்டிப்பாக புதிய அளவில் வேறு மாதிரி அனுபவமாக இருக்கும் நன்றி.
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது..
பிரபுதேவாவை கிட்டதட்ட 30 வருடமாக கவனித்து வருகிறேன். என் குடும்பத்தில் ஒருவர். அருண் ஈவண்ட்ஸ் அருண், எப்போதும் புதுப்புது விசயங்கள் செய்து வருகிறார், எங்கள் நிறுவனத்தில் பல புதிய விசயங்களை செய்வோம், அதைத் தாண்டி அருண் இந்நிகழ்ச்சியில் பல புதிய விசயங்கள் செய்துள்ளார். காலத்தால் அழிக்க முடியாத நிகழ்வாக இந்த நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.