search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசுப் பேருந்து"

    • செல்போன் வீடியோ மூலம் அதிகாரிகளுக்கும், உறவினர்களுக்கும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
    • அதிகாரிகள் பேருந்தில் இருந்து பயணிகளை லாரியில் ஏற்றி கரை சேர்த்தனர்.

    வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா, தெலுங்கானாவில் பலத்த மழை பெய்தது.

    இதனால் ஆறு, குளங்கள், ஏரிகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. சாலை எங்கும மழை நீர் தேங்கி நின்றது.

    இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் வெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள ஏரி நிரம்பி வெள்ள நீர் வெளியேறியதால், 45 பயணிகளுடன் விடிய விடிய வெள்ளத்தில் அரசுப் பேருந்து சிக்கியது.

    தங்களை காப்பாற்ற செல்போன் வீடியோ மூலம் அதிகாரிகளுக்கும், உறவினர்களுக்கும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    பிறகு, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பேருந்தில் இருந்து பயணிகளை லாரியில் ஏற்றி கரை சேர்த்தனர்.

    பேருந்தில் சிக்கிய பயணிகள் இரவில் உணவு, குடிநீர் இன்றி குழந்தைகளுடன் பயணிகள் தவித்தனர்.

    • நிலை தடுமாறி சாலையின் நடுவே விழுந்த வேலாயுதராஜ் மீது அரசுப் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஏறி இறங்கியது.
    • ஒரே நாளில் நெல்லை மாநகர் பகுதிகளில் சுற்றித்திரிந்த 47 மாடுகள் பிடிக்கப்பட்டு சுமார் 13 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் தென் மாவட்டமான நெல்லையில் உள்ள வண்ணனாரப்பேட்டை பகுதியில் உள்ள பிரதான சாலையில் இரு மாடுகள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. அப்போது அந்த வழிகயாக இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜை இரண்டு மாடுகளும் சேர்ந்து முட்டித் தாக்கியுள்ளன.

    இதனால் நிலை தடுமாறி சாலையின் நடுவே விழுந்த வேலாயுதராஜ் மீது அரசுப் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஏறி இறங்கியது. இதனால் படுகாயமடைந்த வேலாயுதராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேலாயுதராஜை மாடு முட்டியதும் அவர் மீது பேருந்து கண நேரத்தில் ஏறி இறங்கியதும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிருந்த நிலையில் அந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    மாடுகளால் மனிதர்கள் தாக்கப்படும் சம்பவம் அதிகரித்து வருவதால் நெல்லை மாநகராட்சி நிர்வாகம் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, சாலைகளில் மாடுகளை திரியவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், மாடு வளர்ப்போர் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மாடுகளை கொட்டகையில் வைத்து பராமரித்துக்கொள்ள வேண்டும். சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் மாநகராட்சி ஊழியர்களால் மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    அந்த வகையில் இன்று ஒரே நாளில் நெல்லை மாநகர் பகுதிகளில் சுற்றித்திரிந்த 47 மாடுகள் பிடிக்கப்பட்டு சுமார் 13 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 

    • அந்த வழிகயாக இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜை இரண்டு மாடுகளும் சேர்ந்து முட்டித் தாக்கியுள்ளன.
    • நிலை தடுமாறி சாலையின் நடுவே விழுந்த வேலாயுதராஜ் மீது அரசுப் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஏறி இறங்கியது.

    விலங்குகள் தாக்கி மனிதர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் சமீப காலங்களாக அதிகரித்து வருகின்றன. அதிலும் வளர்ப்பு மிருகங்களாக நாய், மாடு ஆகியவை மனிதர்களை தாக்குல் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் நெல்லையில் நடந்துள்ள சம்பவம் ஒன்றின் வீடியோ வெளியாகி காண்போரை பதற வைக்கும்படி உள்ளது.

    தமிழகத்தின் தென் மாவட்டமான நெல்லையில் உள்ள வண்ணனாரப்பேட்டை பகுதியில் உள்ள பிரதான சாலையில் இரு மாடுகள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. அப்போது அந்த வழிகயாக இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜை இரண்டு மாடுகளும் சேர்ந்து முட்டித் தாக்கியுள்ளன.

    இதனால் நிலை தடுமாறி சாலையின் நடுவே விழுந்த வேலாயுதராஜ் மீது அரசுப் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஏறி இறங்கியது. இதனால் படுகாயமடைந்த வேலாயுதராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேலாயுதராஜை மாடு முட்டியதும் அவர் மீது பேருந்து கண நேரத்தில் ஏறி இறங்கியதும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிருந்த நிலையில் அந்தக்காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.   

    ×