என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாராஹி அம்மன்"

    • பஞ்சமி திதி என்பது பெண் தெய்வங்களை வழிபடுவதற்கு உகந்த நாளாகும்.
    • விரலி மஞ்சளில் மாலை கட்டி வாராஹி அம்மனுக்கு சாற்றலாம்.

    தேய்பிறை பஞ்சமி அன்று உக்கிர தெய்வங்களான வாராஹி அம்மன், பிரத்தியங்கரா தேவி, மகாகாளி, உள்ளிட்ட தெய்வங்களை வழிபடுவது வாழ்வில் ஏற்படக்கூடிய இன்னல்களை போக்கும், எதிர்மறையாற்றல், கண் திருஷ்டி, போன்றவை விலகும் என்பதோடு மட்டுமல்லாமல் ஜாதக ரீதியாக ஏற்படக்கூடிய தோஷங்களையும் போக்கும்.

    ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு பிறகு வரும் ஐந்தாவது நாள், தேய்பிறை பஞ்சமியாக கொண்டாடப்படுகிறது. பஞ்சமி திதி என்பது பெண் தெய்வங்களை வழிபடுவதற்கு உகந்த நாளாகும்.


    பஞ்சமி நாளில் வாராஹி அம்மன் வழிபாடு நிலம் கடன் மற்றும் எதிரிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க உதவும். நீண்ட காலமாக கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், பஞ்சமி அன்று வாராகி அம்மனை எப்படி வழிபட வேண்டும் என்று பார்க்கலாம்.

    ஆலயங்களில் வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி அன்று சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் பொதுவாகவே மாலை 6 மணிக்கு மேல் அதாவது சூரிய அஸ்தமனமான பிறகு தான் நடக்கும்.


    வாராஹி அம்மன் கோவிலுக்கு சென்று மாதுளை பழம், செவ்வரளி பூக்கள் ஆகியவற்றை அம்மனுக்கு அர்ச்சனை செய்துவிட்டு, நல்லெண்ணெய் அல்லது நெய் விளக்கு ஏற்றலாம்.

    ஒற்றைப்படை எண்ணிக்கையில் விரலி மஞ்சளில் மாலை கட்டி, அதை கோவிலில் உள்ள வாராஹி அம்மனுக்கு சாற்றலாம்.

    கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே வராகி அம்மன் படத்திற்கு முன்பு, புதிய அகல் விளக்குகளை வாங்கி நல்லெண்ணெய் அல்லது நெய் தீபம் ஏற்றலாம்.

    வீட்டில் எந்த வழிபாடு செய்தாலும், தீபம் ஏற்றுவதோடு மட்டுமில்லாமல், ஏதேனும் ஒரு உணவை அல்லது இனிப்பை நைவேத்தியமாக வைக்க வேண்டும்.

    வாராஹி அம்மனுக்கு அவல், வெல்லம், பானகம், சர்க்கரை பொங்கல், கரும்புச் சாறு, தயிர் சாதம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மாதுளை, போன்றவற்றை நைவேத்தியமாக வைக்கலாம்.

    • சப்த கன்னிமார்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    • இந்தியாவில் காசி மற்றும் தஞ்சாவூர் பெரிய கோவிலில் மட்டுமே வாராஹிக்கு தனி சன்னதி உள்ளது.

    சைவம், பிராமணியம், வைணவம், சக்தி வழிபாடு ஆகிய நான்கு வழிபாட்டு முறைகளை பின்பற்றுபவர்களும் வழிபடும் தெய்வமாக விளங்கக் கூடியவள் வாராஹி. வாழ்க்கையில் அனைத்தும் முடிந்து விட்டது, கடனாக கொடுத்த பணம் இனி திரும்ப வரவே வராது என்ற நிலையில் இருந்தால் கூட வாராஹியை வழிபட்டால் அந்த நிலைமை மாறும் என்பது பலரும் சொல்லும் அனுபவ உண்மை.

    மகா வாராஹி அம்மனுக்கு பலவிதமான ரூபங்கள் உள்ளன. மேலும், சப்த கன்னிமார்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


    பொதுவாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தான் பெரும்பாலானவர்கள் அம்மன் வழிபாடு செய்வார்கள். ஆனால், ஸ்ரீ வாராஹி அம்மன் வழிபாடு என்று வரும்போது, அமாவாசை, பஞ்சமி ஆகிய திதிகள் விசேஷம். எதிரிகள், செய்வினை, கண் திருஷ்டி, முடக்கம் ஆகியவற்றை நீக்கும், காக்கும் அம்மனாக வாராஹி அம்மன் வழிபாடு செய்யப்படுகிறது. மகா விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் ஸ்ரீ வாராஹி அம்மனை புதன் கிழமைகளில் வழிபாட்டு விளக்கேற்றி வந்தால் கடன் தொல்லை நீங்கும்.

    சப்த கன்னியர்களில் ஒருவராக போற்றப்படும் வாராஹி அம்மன், தெய்வீக குணமும், விலங்கின் ஆற்றலும் கொண்டவளாக விளங்குகிறாள். தாயை போன்ற இரக்கமும், தயாள குணம் உடையவளாக இருக்கும் வாராஹி, மூர்க்க குணம் உடையவளாக உள்ளதால் இவளை உக்ர தெய்வமாக வழிபடுகிறார்கள். இவளை வராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவின் பெண் வடிவம் என்றும் சிலர் சொல்வதுண்டு.


    சப்த கன்னியர்களான பிரம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கெளமாரி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரில் பன்றியின் முகமும், பெண்ணின் உடலும் கொண்டவள் வாராஹி. எதிரிகள், தீயசக்திகள், கடன்கள் போன்ற துயரங்கள் ஆகியவற்றை அடித்து விரட்டக் கூடிய தெய்வமாக வாராஹி விளங்குகிறாள். வாராஹி வழிபாட்டினை பலரும் மேற்கொண்டாலும் இந்தியாவில் காசி மற்றும் தஞ்சாவூர் பெரிய கோவிலில் மட்டுமே வாராஹிக்கு தனி சன்னதி உள்ளது.

    புதன் கிழமை அன்று வாராஹி அம்மனை தொடர்ந்து வழிபாட்டு வருபவர்களுக்கு கடன் தொல்லை தீரும். எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் செலவாகிக் கொண்டே இருக்கிறது, வரவுக்கு மீறி செலவு, கடனை முழுமையாக தீர்க்க முடியாத சூழல், கடனால் ஏற்பட்ட நெருக்கடிகள், தீராத கடன் சுமை போன்ற எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வாக புதன் கிழமை அன்று வாராஹி அம்மனை தரிசித்து வரலாம்.

    ×