என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்துமதிப்பு"

    • இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி நடைபெற உள்ளது.
    • வாக்குகள் ஜூலை 13-ந்தேதி எண்ணப்படுகின்றன.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13-ந்தேதி எண்ணப்படுகின்றன. இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் முடி வடைந்தது.

    இத்தேர்தலில் போட்டி யிட தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா. பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 56 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.

    இவர்கள் அனைவரும் தாங்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் தங்களுடைய சொத்துப் பட்டியல் விவரங்களையும் தாக்கல் செய்துள்ளனர். அதில் முக்கிய வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள சொத்து பட்டியல் விவரம் வருமாறு:-

    தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ரூ.1 கோடியே 9 லட்சத்து 8 ஆயிரத்து 944-க்கும், அவரது மனைவி வனிதா பெயரில் ரூ.2 கோடியே 43 லட்சத்து 20 ஆயிரத்து 336-க்கும், மகள் ஹர்ஷதாகடர் பெயரில் ரூ.47 லட்சத்து 30 ஆயிரத்து 733-க்கும், மகன் திரி லோக்ஹரி பெயரில் ரூ.19 லட்சத்து 58 ஆயிரத்து 317-க்கும் அசையும் சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் அன்னியூர் சிவா பெயரில் ரூ.90 லட்சத்து 96 ஆயிரத்துக்கும். அவரது மனைவி வனிதா பெயரில் ரூ.33 லட்சத்து 6ஆயிரத்து 370-க்கும் அசையா சொத்துக்கள் இருப்பதா கவும். இதுதவிர வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அன்னியூர் சிவாவுக்கு ரூ.1 கோடியே 28 லட்சத்து 92 ஆயிரத்து 19-ம், அவரது மனைவி பெயரில் ரூ.55 லட்சத்து 4 ஆயிரத்து 409-ம் கடன் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    பா.ம.க.

    பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணிக்கு ரூ.II லட்சத்து 61 ஆயிரத்து 187-க்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், ரூ.17 லட்சத்துக்கு அசையா சொத்துக்கள் இருப்பதாக வும், வங்கி, நிதி நிறுவனங்களில் ரூ.15 லட்சத்து 84 ஆயிரத்து 100 மதிப்பில் கடன் இருப்பதாகவும், அவரது மனைவி ஜெயலட்சுமி பெயரில் ரூ.16 லட்சத்து 54 ஆயிரத்து 23-க்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், ரூ.39 லட்சத்து 23 ஆயிரத்துக்கு அசையா சொத்துக்கள் நிறுவனங்களில் ரூ.1 லட்சம் இருப்பதாகவும், வங்கி, நிதி கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா பெயரில் ரூ.4 லட்சத்து 82 ஆயிரத்து 500-க்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், வங்கி, நிதி நிறுவனங்களில் ரூ.2 லட் சத்து 62 ஆயிரம் மதிப்பில் நகைக் கடன் பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    • விபத்து நடந்த சில நிம்டங்களிலேயே போலே பாபா அங்கிருந்து நழுவிச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியானது.
    • போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி சிங் கூட்டநெரிசல் குறித்து கூறியுள்ள கருத்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் உள்ள கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இதில் அதிகம் பேர் பெண்கள் ஆவர். 80,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் 2.5 லட்சம் பேர் ஒரே இடத்தில் கூடியதாலும், போலே பாபாவின் காலடி மண்ணை எடுக்க நெறுக்கியடித்ததாலும் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே போலே பாபா அங்கிருந்து நழுவிச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியானது.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் 9 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தேவப் பிரகாஷ் மதுக்கருக்கு அரசியல் கட்சியுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், நிகழ்ச்சிக்கு அரசியல் கட்சியின் பணம் செலவழிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இந்த வழக்கில் போலே பாபாவின் பெயர் சேர்க்கப்படாததையும் கவனிக்க வேண்டி உள்ளது. வட மாநிலங்களில் செல்வாக்கு மிக்க போலே பாபாவின் சொத்துமதிப்பு 100 கோடியாக உள்ளது என்ற தகவலும் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி சிங் கூட்டநெரிசல் குறித்து கூறியுள்ள கருத்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், போலே பாபாவின் அன்றைய கூட்டத்தில் சுமார் 15 முதல் 16 பேரின் கையில் விஷத் தன்மையுள்ள பொருள் அடைத்த பாட்டில்கள் இருந்துள்ளது என்றும், அதை அவர்கள் திறந்துவிட்டதாலேயே இந்த கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது என்றும் கூட்டத்தில் பங்கேற்ற சிலர் தன்னிடம் தெரிவித்துள்ளதாக பேட்டியளித்துள்ளார். மேலும், விஷ பாட்டில்களை வைத்திருந்த நபர்கள் தப்பிச் செல்ல கார்களும் அங்கு தயாராக இருந்துள்ளதாக குறிப்பிடடுள்ளார்.

    இதற்கான தகுந்த ஆதாரத்தை வெளியிடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதற்கு புறம்பாக போலே பாபாவின் வக்கீல் சொல்லும் புதிய குற்றச்சாட்டுகள் வழக்கை திசை திருப்பும் முயற்சியா என்ற கேள்வியும் பலர் மத்தியில் எழுந்துள்ளது.  

    • முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.7.65 லட்சம் கோடியாகும்
    • சராசரி இந்திய குடும்பம் ஒன்று தங்களது சொத்துமதிப்பில் 10 முதல் 15 சதவீதம் வரை திருமணத்துக்கு செலவு செய்கிறது

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று நடைபெறும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் முன்னணி இந்திய மற்றும் சர்வதேச பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பெருநிறுவனப் பெருமுதலாளிகள் பங்கேற்கின்றனர். பாடகி கிம் கர்தாஷியன், குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், முன்னாள் இங்கிலாந்து பிரதமர்களும் இதில் அடங்குவர்.

    கடந்த நான்கு மாதங்களாக நடந்து  வந்த நட்சத்திரங்கள் நிறைந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களுக்குப் பிறகு, 29 வயதான ஆனந்த் அம்பானி, மருந்து அதிபர்களான வீரேன் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டை மணக்கவுள்ளார்.

     

    ஆரம்பம் முதலே ஆடம்பரமாக நடைபெறும் அம்பானி வீட்டுத் திருமணம் குறித்து இந்தியாவின் அதிகம் உள்ள நடுத்தர மற்றும் ஏழை வர்க்க மக்களிடையே பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. பணம் இருப்பதனால் அம்பானி கண்மண் தெரியாமல் காசை வாரி இரைத்து வருவதாக மக்கள் அங்கலாய்த்தனர்.

    அதன்படி தற்போது வெளியாகியுள்ள ஆனந்த் அம்பானியின் மொத்த கல்யாண செலவு எவ்வளவு என்ற தகவல் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, ஏறக்குறைய ரூ.4000 முதல் ரூ.5000 கோடி வரை அம்பானி தனது மகனின்  திருமணத்துக்காக செலவிட்டுள்ளார்.

     

    முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.7.65 லட்சம் கோடியாகும். அதில் மகனின் திருமணத்துக்காக அம்பானி செலவு செய்துள்ள தொகை அவரின் மொத்த சொத்துமதிப்பில் வெறும் 0.5 சதவீதம் மட்டுமே ஆகும். ஆனால் இந்தியாவில் சராசரி குடும்பம் திருமணத்துக்கு செலவு செய்வதை விட அம்பானி குறைவாகவே செலவு செய்துள்ளார். சராசரி இந்திய குடும்பம் ஒன்று தங்களது சொத்துமதிப்பில் 10 முதல் 15 சதவீதம் வரை திருமணத்துக்கு செலவு செய்வது குறிப்பிடத்தக்கது. 

    • ரூ.25.75 லட்சம் கோடி சொத்துமதிப்புடன் அம்பானியின் குடும்பம் முதல் இடத்தில் உள்ளது
    • மூன்று குடும்பங்களின் மொத்த மதிப்பான ரூ.38.27 லட்சம் கோடி என்பது சிங்கப்பூரில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமாகும்

    இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 10 சதவீத மதிப்புக்கு நிகராக அம்பானி குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பானது அதிகரித்துள்ளதாகப் பிரபல பார்க்லேஸ்-ஹுருன் நிறுவனத்தின் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

    இந்தியாவின் பணக்கார வணிக குடும்பங்களின் சொத்துமதிப்பை பட்டியலிட்டு அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூ.25.75 லட்சம் கோடி சொத்துமதிப்புடன் அம்பானியின் குடும்பம் முதல் இடத்தில் உள்ளது. புனேவில் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனத்தை இயக்கி வரும் பஜாஜ் குடும்பம், ரூ.7.13 லட்சம் கோடி சொத்துமதிப்புடன் அம்பானி குடும்பத்துக்கு அடுத்த பெரிய வணிக குடும்பமாக உருவெடுத்துள்ளது.

    குமார் மங்கலம் பிர்லா குடும்பம் ₹5.39 லட்சம் கோடி மதிப்பீட்டில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த மூன்று குடும்பங்களின் மொத்த மதிப்பான ரூ.38.27 லட்சம் கோடி என்பது சிங்கப்பூரில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமாகும் என்ற மலைக்கவைக்கும் உண்மையும் தெரியவந்துள்ளது. 

    • இந்தியாவின் பணக்காரர் பட்டியலை அமெரிக்காவின் பிரபல ஃபோர்ப்ஸ் [Forbes] இதழ் வெளியிட்டுள்ளது.
    • இது அம்பானி கடந்த ஒரே ஆண்டில் சேர்த்த சொத்தை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.

    இந்தியாவின் பணக்காரர் பட்டியலை அமெரிக்காவின் பிரபல ஃபோர்ப்ஸ் [Forbes] இதழ் வெளியிட்டுள்ளது. கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி வெளியான அந்த பட்டியலின்படி 2024 ஆம் ஆண்டில் 100 இந்தியப் பணக்காரர்களில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார்.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்டவற்றின் சொந்தக்காரரான அம்பானி நடப்பு ஆண்டில் 27.5 பில்லியன் டாலர்கள் வரை கூடுதலாக சொத்து சேர்த்துள்ளார். எனவே அவரின் சொத்துமதிப்பு தற்போது 119.5 பில்லியன் டாலர்களாக [11.9 லட்சம் கோடி ருபாய்] அதிகரித்துள்ளது. எனவே உலகப் பணக்காரர் பட்டியலில் அம்பானிக்கு 13 வது இடம். அதற்கு அடுத்தபடியாக 116 பில்லியன் அமெரிக்க டாலர்கள் [11.6 லட்சம் கோடி ருபாய்]  சொத்துமதிப்புடன் அதானி குழும நிறுவனர் கௌதம் அதானி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    மொத்த மதிப்பில் அம்பானிக்கு அடுத்தபடியாக இருந்தாலும், கடந்த ஒரே ஆண்டில் அதிக சொத்து சேர்த்ததில் அம்பானியை அதானி பின்னுக்குத்தள்ளியுள்ளார். அதாவது, அதானி கடந்த ஒரே ஆண்டில் 48 பில்லியன் டாலர்கள் சொத்து சேர்ந்துள்ளார்.

     

    இது அம்பானி கடந்த ஒரே ஆண்டில் சேர்த்த சொத்தை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும். எனவே பணக்காரர் பட்டியலில் முதலிடத்தை நோக்கி அதானி முன்னேறி வருகிறார் என்றே இதன்மூலம் புலனாகிறது. தொடர்ந்து பணக்காரர் பட்டியலில் 3.7 பில்லியன் டாலர் மதிப்புடன் சாவித்திரி ஜிண்டால் மூன்றாவது இடத்திலும், நான்காவது இடத்தில் ஷிவ நாடாரும் உள்ளனர்.

    இதுதவிர்த்து இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய பணக்காரர்களின் சொத்துமதிப்பு இந்த வருடம் மட்டும் மொத்தமாக 40 சதவீதம் உயர்ந்து 1 ட்ரில்லியன் டாலர்கள் என்ற அளவைக் கடந்துள்ளது. கடந்த ஆண்டில் இது 799 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் இருந்தது.

    • கணவர் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.
    • 29 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதாக சாய்ரா பானு அறிவித்துள்ளார்.

    பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விருதும் பெற்றுள்ளார்.

    ஏ.ஆர்.ரகுமான் 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.

    இந்நிலையில், கணவர் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். 29 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதாக சாய்ரா பானு அறிவித்துள்ளார்.

    இதனிடையே ஏ.ஆர்.ரகுமானின் சொத்துமதிப்பு ரூ.1728 கோடி முதல் ரூ.2100 கோடி வரை இருக்கலாம் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

    ஒரு படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமான் ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும், இசை நிகழ்ச்சிகளில் ஒரு மணிநேரம் பாடல் பாடுவதற்கு ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×