என் மலர்
நீங்கள் தேடியது "இன்டர்ன்ஷிப்"
- காதல் விவகாரங்களில் பலருடன் தொடர்பு வைத்துள்ள எலான் மஸ்க்கிற்கு கடந்த 5 வருடங்களில் மட்டும் 6 குழந்தைகள் பிறந்துள்ளனர்.
- பிரபல கனேடிய பாடகி கிரிம்ஸ், எலான் மஸ்க்கின் 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
உலக பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகியவற்றின் நிறுவனருமான எலாம் மஸ்க் தனது 12 வது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. காதல் விவகாரங்களில் பலருடன் தொடர்பு வைத்துள்ள எலான் மஸ்க்கிற்கு கடந்த 5 வருடங்களில் மட்டும் 6 குழந்தைகள் பிறந்துள்ளனர்.
தற்போது பிறந்துள்ள 12 வது குழந்தை மஸ்க் உருவாக்கிய நிறுவனமான நியூரோடெக்னாலஜி துறையில் இயங்கிவரும் நியூராலின்க் நிறுவனத்தின் மேனேஜர்களில் ஒருவரான ஷிவோன் சிலிஸ் பெற்றேடுத்துள்ளார்.


எலான் மஸ்க் - சிவோன் சிலிஸ் ஜோடிக்கு இது 3 வது குழந்தையாகும். கடந்த 2021 ஆம் ஆண்டு எலான் - சிலிஸ் இணையருக்கு ஸ்டிரைடர் - ஆஸுரே என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இதுதவிர பிரபல கனேடிய பாடகி கிரிம்ஸ், எலான் மஸ்க்கின் 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

தற்போது ஷிவோன் சிலிஸுக்கு பிறந்துள்ள எலான் மஸ்க்கின் 12 வது குழந்தை இந்த வருட ஆரம்பத்தில் பிறந்துள்ளது என்றும் குழந்தையின் பிறப்பு, பாலினம் மற்றும் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்று ப்ளூமன்பெர்க் அறிக்கை குறிப்பிடுகிறது. எலான் மஸ்க் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் அதிகம் பகிராதவராகவே இருந்து வருகிறார். சமீபத்தில் தனது நிறுவனத்துக்கு இண்டர்ன்ஷிப் வந்த பெண்ணுக்கு பாலியல் துப்புறுதல் அளித்ததாக எலான் மஸ்க் மீது குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
- சிஇஓ தன்னுடன் சேர்த்து 99 பேரை பணி நீக்கம் செய்து விட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
- 111 பேரை மீட்டிங்கிற்கு சிஇஓ அழைத்துள்ளார்,
அமெரிக்காவில் இயங்கி வரும் இசை கருவிகளை விற்கும் நிறுவனம் ஒன்றில் மீட்டிங் வராத 99 ஊழியர்களை சிஇஓ அதிரடியாக தூக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதில் ஒருவர் தான் வேலைக்கு சேர்ந்த ஒரு மணி நேரத்தில் வேலையை விட்டு தூக்கப்பட்டதாக Reddit சமூக வலைத்தளத்தில் புலம்பி தள்ளியுள்ளார். அவரது பதிவில், தான் இன்டர்ன்ஷிப்க்கு சேர்ந்த 1 மணி நேரத்தில் நிறுவனத்தின் சிஇஓ தன்னுடன் சேர்த்து 99 பேரை பணி நீக்கம் செய்து விட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனத்தில் அன்றைய தினம் 111 பேரை மீட்டிங்கிற்கு சிஇஓ அழைத்துள்ளார், ஆனால் 11 பேர் மட்டுமே மீட்டிங்குக்கு வந்துள்ளனர். இதனால் கடுங்கோபமடைந்த சிஇஓ அனைவரையும் அதிரடியாகத் தூக்கினார்.
ஆனால் தனக்கு இந்த மீட்டிங் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று அந்த ஒரு மணி நேர பேர்வழி நொந்துகொண்டுள்ளார்.
