என் மலர்
நீங்கள் தேடியது "வீடு சூறை"
- தூய்மை பணியாளர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி வீட்டில் நுழைந்த சிலர் பொருட்களை சூறையாடினர்.
- பின்பக்க கதவை உடைத்து நுழைந்த நபர்கள் கழிவுநீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றியுள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூய்மை பணியாளர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி வீட்டில் நுழைந்த சிலர் பொருட்களை சூறையாடினர்.
பின்னர், பின்பக்க கதவை உடைத்து நுழைந்த நபர்கள் கழிவுநீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுநீர் ஊற்றப்பட்டு, சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
- இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
- காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசில் புகார் செய்யப்பட்டது.
ராயபுரம்:
காசிமேடு பல்லவன் நகரை சேர்ந்தவர் சுனில் என்கிற சுண்டு(23). மீன்பிடி துறைமுகத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்தார். இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
ஆனால் இளம்பெண்ணின் பெற்றோர் சுனிலின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தாலும் இவர் மீது வழக்குகள் உள்ளதாலும் மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்து உள்ளனர். பின்னர் இளம்பெண்ணும் சுனிலிடம் பழகுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் இளம்பெண்ணுக்கும் வேறொரு வாலிபருக்கு திருமணம் நடந்தது. இதனால் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்கவில்லை என்று சுனில் ஆத்திரத்தில் இருந்தார். நேற்று நள்ளிரவில் சுனில் தனது நண்பர்களுடன் காதலியின் வீட்டுக்கு சென்று ரகளையில் ஈடுபட்டனர். அவர்கள் வீட்டின் ஜன்ல்கண்ணாடிகளை உடைத்து சூறையாடினர்.
மேலும் அங்கு நிறுத்தப்பட்ட இருந்த மோட்டார் சைக்கிள்களையும் அடித்து உடைத்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சுனில் மற்றும் அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ், சர்மா, குப்புசாமி, சஞ்சய் ,சுபாஷ், லிவிங்ஸ்டன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 8 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுவனை புரசைவாக்கம் கெல்லீசில் உள்ள சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.